LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

 தன் மகளை முந்திக்கொண்டு அதிக மதிப்பெண் எடுக்கிறானே, வகுப்பில் முதல் ராங்க் வாங்குகிறானே என்ற வெறுப்பிலும் கோபத்திலுமாய் எட்டாம் வகுப்பு மாண வனை அதே வகுப்பு மாணவியின் தாய் குளிர்பானத்தில் ஏதோ கலந்து பள்ளிக் காவ லாளியின் கையில் கொடுத்து அந்த மாணவனின் பெற்றோர் தந்ததாகச் சொல்லி குடிக்க வைத்ததன் விளைவாக அந்த மாண வர் இறந்துவிட்டார்.

அப்படியென்றால் அந்தத் தாய் தன் மகளை எந்த அளவு படிக்கச் சொல்லி அழுத்தம் தந்திருப்பார். முதல் ராங்க் வரவில்லையே என்று சாடி அவமானப்படுத்தியிருப்பார் என்று நிகழ்ச்சியாளர் கேட்கும் கேள்வி முக்கியமானது.
இதேபோல்தான் வளரிளம்பருவத்தினருக்கு இயல்பாக வரும் எதிர்பாலின ஈர்ப்பைப் பெற்றோர்களும் சமூகமும் சரியான முறையில் கையாள்வதில்லை என்பதே பல வளரிளம்பருவத்தின ரின் தற்கொலைக்குக் காரணமாகிறது என்பதை மனநல மருத்து வர் ஷாலினி அவர்கள் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாய் பேசியி ருக்கும் ஒரு காணொளியில் முன்வைத்திருப் பார்.
குழந்தைகள் மீது அன்பு என்ற பெயரில் பெற்றோர்கள் அவர்களை உடல்ரீதியாய், மனரீதியாய் துன்புறுத்து வதை அன்பு, அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
குழந்தைகள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் அவர்களைப் பற்றி அரசியல் கட்சிகள் அவதானிப்ப தில்லையென்றே தோன்று கிறது. ஆனால் குழந்தைகளின் உரிமைகள், அவர்களை நடத்தும் விதம் குறித்தெல்லாம் பெரியவர்களுக்கு - பெற்றோர்கள், ஆசிரி யர்கள், சமூகத் தின் அங்கத்தினரிகள் ஆகிய அனைத்துத் தரப்பின ருக்கும் sensitization, awareness programmes, அதற்கான முன்னெடுப் புகள் மிக மிக அவசி யம்.
இந்த மாதிரி ஒரு தற்கொலை அல்லது கொலை நடந் தால்தான் குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் பற்றி யெல்லாம் கவனம் செலுத்துவோம் என்றில்லாமல் அரசு கள் குழந்தைகள் நலன் குறித்த தொடர்ச்சியான கவனத்தையும் செயல்பாடுகளையும் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாதது.

No comments:

Post a Comment