LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 20, 2015

வரையறைகள் _ சிறுகதை - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

சிறுகதை
வரையறைகள்
அநாமிகா
[பன்முகம் காலாண்டிதழ், ஜூலை-செப்டம்பர் 2004]



 ஆவின் பாசம் ஆபாசம்” 

சொல்லிவிட்டு அமெரி க்காவைக் கண்டு பிடித்த கணக்காய் தனக்குத் தானே ஷொட்டு கொடுத் துக் கொள்வதாய் சிரித்தவளை பார்த்து எரிச்சலாய் வந்தது.

இப்படித்தான் தீவிர அவ தானிப்புக்கான விஷயத்தை நொறுக் குத் தீனியாக்கிவிடுவார்கள் இவளைப் போன்றவர்கள். ‘To hell with them’ _ நினைப்பின் இறுக்கம் பரவிய முகத்துடன் அவளை முறைத்தேன். “யாருக்கு ஆபாசம்? எப்படி ? விளக்கு.” 

அதாகப்பட்டது எப்படி விளக்குக்கு இருட்டு ஆபாசமாகிறதோ அதே மாதிரிஆவின் பாசம் _ அதாவது பசுவுக்குத் தன் கன்றின் மேல் உள்ள பாசம் நமக்கு, அதாவது, மனிதர்களுக்கு ஆபாச மாகிறது.”


அவள் சிந்தனைப்போக்கு ஒருவிதமாய் புரிபட்டாலும் அவள் பேசிய விதம் சிலாகிப்பிற்குரியதாக இல்லை.

இதுதான் எனக்கு ஆபாசமாகப் படுகிறது,” என்றாள் எங்கள் வட்டத் தின் இன்னொரு கண்ணி.

எது?”

இங்க இத்தனை பேர் இருக்கிறப்போ ஏதோ அவள்தான் ஆபாசங் கற வார்த்தைக்கு அத்தாரிட்டி மாதிரி, அவளையே திரும்பத் திரும் பக் கேட்கிறது.”

சரி, நீ தான் சொல்லேன் _ எது ஆபாசம்?”


இதுதான்.”

எது?”


பப்பா ,மாதிரி புருவத்தைச் சுருக்கிப் பார்வையாலே கேள்வி கேட் காதே. ’சரி, நீதான் சொல்லேன்னு போனாப்போவுது, சொல்லுங் கறா மாதிரி என்னை ஒப்புக்கு உன் பேச்சுஎன்றலெவலுக்குக் கீழிறக்கிட்டியே, அது.”

விஷயத்தை விட்டுட்டு வம்புச்சண்டை போடாதே. சொல்லு, உன் னைப் பொறுத்தவரைக்கும் எது ஆபாசம்?”

இப்ப நீ சொன்னே பாரு, அதுதான் ஆபாசங்கற விஷயத்துல முக்கி யம்.”

அதாவது?”

ஆபாசத்தைப் பொறுத்தவரைக்கும் உன்னைப் பொறுத்த வரைக்கும் என்னைப் பொறுத்தவரைக் கும்ங் கறது இருக்கு.”

அப்ப, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம்னு எதுவும் இல் லையா?”

எல்லோருக்கும் பொதுவான பொறுத்தவரைகள், பொறாத வரைகள் இருப்பதும் சாத்தியம் தானே. அதுபோல, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம் இருக்கிறதும் சாத்தியம் தான்.”

ஆபாசம்னு சொல்றதே தவறு. ஆபாசங்கள்னு தான் சொல்ல வேண்டும்.”

தமிழரசி, நீ சொன்னதுகூட ஆபாசம்தான்.”

வாட்?”


ஆமாம். பேசற விஷயத்தை விட்டு அதுல உன் தமிழ்ப் புலமையை அடிக்கோடிட்டுக் காட்டற மாதிரி பேசற பாத்தியா, அதைத் தான் சொன்னேன்.”

நான் நியயமா ஒரு விஷயம் சொன்னதுக்கு நீ இப்படி வியாக்கி யானம் தரதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப ஆபாசமா இருக்கு.”


ஆக, இப்ப நாம ஆபாசத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்திருக் கோம்.”

ஸே, குழப்பறே அனிதா.”

இல்லை, நான் சொல்வது ரொம்ப அரிச்சுவடியான விஷயம். அதை நீ புரிஞ்சுக்க மறுப்பது தான் ஆபாசம்.”

அப்படிப் பார்த்தால், அரிச்சுவடிங்கறது எத்தனை அடிப்படையான விஷயம். அதை இந்த விதமா இலேசான விஷயமாக்கிப் பேசுவதே ஆபாசம்தான்.”

அமைதி, அமைதி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு _ க்ருஷி, ஆபா சத்தின் அடுத்த கட்டம்னு சொன் னியே.”

ஆமா, எது ரொம்ப ஆபாசம், எது கொஞ்சம் ஆபாசம், எது மீடியம் ஆபாசம்?”

ஆபாசமே ஒரு மீடியம் தான்.”

ஐயோ, ’வார்த்தைச்சித்தி ஆரம்பிச்சிட்டாளே

நோ, நான் நெஜமாத்தான் சொல்றேன். ஆபாசம்ங் கறதும் ஒரு மீடியம் தான்.”

ஆபாசம்ங்கறது இருபொருளில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டி யது/” 
    
இருபொருள் மட்டும்தான்னும் உறுதியாச் சொல்லி விட முடியாது.”

ஆபாசம் என்பதுஆபாசம் என்ற விஷயம்?”

ஆபாசம் என்பது என்ற சொற்றொடரே நீ சொன்ன இரண்டை யும்  குறித்துவிடுமே!”

சரி, அதை விடு. எது ரொம்ப ஆபாசம்_ எது கொஞ்ச ஆபாசம்/”

கரெக்ட். கொஞ்சலுக்கு ஆபாசம் கைகொடுக்குமே!”

கொஞ்சலே ஆபாசம்னு சொன்னா?”

அப்படி சொல்றவங்களை கொதிக்கும் கொப்பரை யிலெ பிடிச்சுத் தள்ளணூம்.”

பொறு…. கொஞ்சலே ஆபாசமாவதும் உண்டு தானே…  ஒருவரை வலுக்கட்டாயமாகக் கொஞ்சு வது, தன்னுடைய வெற்றிக்கனியாக நினைத்துக் கொஞ்சுவது, சம்பந்தப்பட்ட இரண்டு பேர்ல ஒருத்தர் அந்தரங்கமா நடக்கணும்னு நினைக்கிற கொஞ் சலை அவருடைய இணை அம்பலப்படுத்திக் காட்டு வது, குழந்தையை பயங்காட்டிக் கொஞ்சுவதுஇப்படி நிறைய சொல்லலாம்.”

ஐயோ, கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள் அனிதா. ‘ட்ராக்மாறாதே.”

ட்ராக் மாறாதேன்னு எனக்கு நீ அறிவுறுத்துவது கூட என்னைப் பொறுத்தவரை ஆபாசம் தான். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை நான்ட்ராக்மாறாமல் தான் பேசிக்கிட்டிருக்கேன்.”

என்னைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்த வரைன்னு எந்த வொரு விஷயத்தையும் பேசுவது கூட ஆபாசம் தான்.”

இல்லை, உன்னைப் பொறுத்தவரையானது இது வென்று நான் பேசுவதுதான் ஆபாசம். என்னைப் பொறுத்தவரையானதை நான் பேசாமல் வேறு யார் பேச முடியும்?”

நீங்களிருவரும் just playing on the words.”


வார்த்தை விளையாட்டு. தாங்க்ஸ் ஷாலினி. என் கவிதைக்கு ஒரு நல்ல தலைப்பு கிடைத்துவிட்டது. Back to ஆபாசம் _ ’கூடத்தில் குளிக்க முடியுமா? இல்லை, வெளிக்குப் போக முடியுமாங்கற கேள்வியை நீ எப்படி எதிர்கொள்வே?”


“Bloody shit”

இதையே தமிழ்ல சொன்னால் ஆபாசமாயிருக் கும்னு தானே ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள்?”

குட் மார்னிங்னு நீ சொல்வதை இதேவிதமா பகுத் தால் உனக்கு ஆபாசமாகப் படும், இல்லியா? நல் லது, மேற்படி கேள்வி என்னைப் பொறுத்தவரைஷிட்கேள்விதான். கூடம், குளியல், வெளிக்குப் போதல் முதலிய எல்லா விஷயங்களைப் பொறுத்த அளவிலும் நம்முடைய கடிவாளப் பார்வைகளைத் தான் இந்த மாதிரி கேள்விகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முன்னொரு காலத்தில்வெளிக்குப் போதலில் தான் எல்லா மனிதர்களின் சமத்துவ மும், ஏற்றத்தாழ்வுகளற்ற தன்மையும் வெளிப்படு கிறது என்பதால் அரசன் முதல் ஆண்டி வரை ஒரே இடத்தில் மலங்கழிப்பார்களாம் தெரியுமா?”

வ்வே

என்ன வ்வே? இப்பவும் தானே பார்க்கிறோம். காலைவேளையில் ரயில் போகும் வழியெல்லாம் முகங்களை மறைத்துக்கொண்டு அதன் மூலம் சமூகத்திலான தங்கள் தோற்ற அடையாளங்களை இல்லாமலாக்கிக்கொண்டு வெறும்குறிகளும், ’குதங்களுமாய் காலைக்கடன் கழித்துக்கொண்டி ருப்பவர்கள் எத்தனை பேர்…. அது வறுமையா? ஆபாசமா?”

”Lack of civic sense ஆகவும் இருக்கலாமே.”


இப்படி, சமூக அவலங்களை இலேசாகப் பேசி முடித்து நம் வழி போவதுகூட ஆபாசம் தான்.”

சமூக அவலங்களைக் கைத்தட்டலுக்காகப் பேசு வதும் ஆபாசம் தான்.”


என்னிலிருந்து தான் கவிதை ஆரம்பமானதுதான். என்று பேசுவது மட்டும் ஆபாசமில்லையா?”

மூளைச்சலவை செய்வதற்காக அப்படிப் பேசினால் ஆபாசம். மன தார நம்பி அப்படிச் சொன்னால்…?”

மனதார நம்பிச் சொன்னால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?”

கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்களா, மனப்பூர்வமா கப் பேசுகிறார் களா என்று கண்டறிய என்ன அளவுகோல்?”

அந்த அளவுகோலும் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் இல்லையா?”

அவரவர் நுண்ணுணர்வு, மனசாட்சி தான் இந்த அளவுகோல்கள்…”

இந்த வார்த்தைகள்கூட ஆபாசமானவைதான்.”

அது அவற்றின் பயன்பாட்டால், அதாவது, அவற் றின் அளவில் ஆபாசமானவையல்ல. அவற்றை அவற்றின் மெய்ப்பொருள் கெட பயன்படுத்துபவர் கள் ஹ்டன ஆபாசமானவர்கள்.”

ஏய், நேரமாகிவிட்டது. நாளை மீண்டும் சந்திக்க லாம்!”

என்னடீ இவ, செந்தமிழ்ல பேசறா!”

நிச்சயமா நம்மகிட்டே செந்தமிழ்ல பேசி அவ பொற்கிழி வாங்கிடப் போற தில்லை. அதனால, அவ செந்தமிழ்ல பேசு வதை ஆபாச மாக்கிவிடாதே”.

அப்ப, பலனைக் கருதி பேசுவதுதான் ஆபாசம்ங்கறேஅதாவது, உள்நோக்கத்தோடு பேசுவது?”

அனிதா, நீ எதுக்கு இந்த விஷயத்தை இங்கே எடுத்து ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்துவைத் தாய் என்று எனக்குத் தெரியும்”, என்றாள் க்ருஷி.. “அடுத்த மாதம் தில்லியில் நடக்கப் போகும் அகில இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் நீ வேலை பார்க்கும் பத்திரிகையின் சார்பாக உன்னை அனுப்புவார்கள். உன்னு டைய பத்திரிகையின் பொறுப்பாசிரிய ருக்குப் பிடித்த விஷயம் இந்த விவாதம். ஆக, இதைப் பற்றி நிறைய பேருடைய கருத்துகளைக் கேட்டு, சேகரித்து உன்னு டையதாக மாநாட்டில் வெளியிட்டு பொறுப்பாசிரியருடைய நல்ல மதிப்பை சம்பாதித்து பதவி உயர்வைப் பெற்றிட வேண்டும். அப்படித்தானே!”

மெதுவாகக் கீழே பரப்பியிருந்த எனது புத்தகங் களை எடுத்துக் கொண்டு எழுந்தேன். “நேரமாகி விட்டது அனி. நான் கிளம்புகி றேன்.”

யேய், பதில் சொல்லாமல் போகிறாயே!”


க்ருஷி, உனக்குத் தெரியும். காம்ப்ரமைஸ் செய்ய முடியதவளா நான் எத்தனை வேலை மாறியிருக்கிறேன் என்று. வகுப்புத் தேர்வு தானே என்று நீங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு விடையெழுதும்போது கூட பிடிவாதமா எனக்குத் தெரிஞ்சதை மட்டும் தான் நான் எழுதுவேன். அதுவும் உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் இப்படியொரு அனுமா னத்தை, அதுவும் எந்தவித முகாந் திரமுமில்லாமல் ரொம்ப சுலப மாக, without any second thought வெளியிடுகிறாய் பார்த் தாயா…. ‘நான் சிரித்தால் தீபாவளின்னு  I live for the present நல்லாவே தெரிந்தும் யாரையோ தாஜா செய்து அவர் எழுதும் வரலாற்றில் இடம்பெறுவதற்காகவே நான் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன்என்றுகூட நாளை நீ என்  conviction ஐக்  கேவலப்படுத்தலாம்எனவே, நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆபாசம் என்றால் என்ன என்று தெளிவாகப் புரிய வைத்ததற்கு. உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படும் முகாந்திர மற்ற அனுமானங்கள் தான் உச்சபட்ச ஆபாசம்…..so long”


0




                      
                                            

No comments:

Post a Comment