LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 31, 2024

எழுத்தின் உயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எழுத்தின் உயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு நல்ல புத்தகம் நூறு தலைவர்களுக்கொப்பானது.
தலைவரின் கடைக்கண் பார்வை நம்மீது படுமா என்று நாம் தவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை.
அத்தனை எளிமையாய் நம் புத்தக அடுக்கில் ஓர் ஓரமாய் ஒதுங்கியிருக்கும்.
அல்லது ஒரு முக்காலியில் கிடக்கும்
அல்லது ஒரு கை உணவு உண்டுகொண்டிருக்க
மறுகையில் அலட்சியமாய் ஏந்தப்பட்டிருக்கும்.
ஆசானாய் காதலியாய் நண்பனாய் குழந்தையாய் அன்பளிப்பாய் அந்திப்பொழுதாய் அகிலாண்டகோடியாய்
அடைக்கலம் தந்திருக்கும்.
நம்மை சிறு பறவைகளாய் பாவித்து
அது பாட்டுக்குப் புதுப்புது அர்த்தங்களை
வழியெங்கும் இறைத்துக்கொண்டே போகும்.
சூரியனில் இறைமை தன்அடையாளமற்றுக்
கலந்திருப்பதுபோல் புத்தக ஆசிரியர்.
வாசிக்கும் நேரம் வலது கை கொடுப்பதை
இடது கை யறியாத திறம் நூலாசிரியம்.
காலம் மீறி வாழ்வது நல்லெழுத்தின் அடையாளம்
எல்லாமறிந்தும் புத்தகங்களைப் புதைகுழியிலிட்டுப் பார்ப்பவர்
பிரசவிக்கக்கூடும் இறந்த குழந்தைகளை.
l reactions:
இயற்கை, Sivarasa Karunakaran and 7 others

50 ஆண்டுகால தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.

 

https://youtu.be/3v4vledEzLU?si=27-sf9fFSCcG8yes


அருமை நண்பர் சஃபியின் உரை இது. கண்டிப்பாக அனை வரும் கேட்கவேண்டியது. இலக்கியவுலகில் உளவியல் குறித்த விழிப்பையும் வெளியையும் உருவாக்கிய / உருவாக்கிவரும் மிகச் சிலரில் இவரும் ஒருவர். ஆரவாரமில்லாமல் எனில் அவசியமான சமூக-இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்.

நல்வாழ்த்து களும் நன்றியும் சஃபி.
திரள் மக்கள் மனநல இணையம் நடத்திய
பேரா.ஒ.சோமசுந்தரம் நினைவுக் கருத்தரங்கம்
கலை இலக்கியமும் மனநலமும்
டிசம்பர் 7ல்
உளவியல் நிபுணர்
எழுத்தாளர்
துணை பேராசிரியர்
திரு.முகமத் ஷஃபி அவர்களின்
உரை‌:
50 ஆண்டுகால
தமிழ் சினிமாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சித்தரிப்புகள்.
மிக முக்கியமான உரை..
தாமத்திற்கு மன்னிக்கவும் Mohamed Safi

Saturday, July 6, 2024

யாதுமாகி நின்றாய் காளி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 யாதுமாகி நின்றாய் காளி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்
காற்றை
வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள
வலமும் இடமுமாய்
வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.
சின்னக் குடுவை முதல்
பென்னம்பெரிய பீப்பாய் வரை
அவரவர் வசதிக்கேற்ப
வழித்துத் திணித்துக்கொண்டு
ஆளுயரக் அண்டாவிலோ
அந்த வானம் வரை உயரமான
தாழியிலோ
நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை
நன்றாயிருக்கும்
என்று அங்கலாய்த்தபடி
நானே காற்றுக்கு அதிபதி
நானே காற்றின் காதலன்
நானே காற்றின் ஆர்வலன்
நானே காற்றின் பாதுகாவலன்
நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்
நானே காற்றை அளந்து தருபவன்
நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்
நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்
என்று நானே நானேக்களால்
நன்கு வளர்ந்தவர்கள்
நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க
நான்கு வயதுக் குழந்தையொன்று
தளர்நடையிட்டுவந்து
நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்
திறந்து காண்பித்துச்
சொன்னது:
“என் கையெலாம் காற்று!”

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி :

ஓர் அறிமுகம்


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)



கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

ஜூலை 7, 2018இல் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியது - மீள்பதிவு

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் :

பெரிசு – கிழவர்



லதா ராமகிருஷ்ணன்

வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங் கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மன தால் நிர்ணயிக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?

பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.

‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவை யில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக் கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலா னவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களை யும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.

சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.

Friday, July 5, 2024

INSIGHT (a bilingual blogspot for contemporary tamil poetry) - JUNE 2024

INSIGHT 
a bilingual blogspot for
 contemporary tamil poetrY 
 
- JUNE  2024

www.2019insight.blogspot.com


21 POETS - 27 POEMS 
 ORIGINAL POEMS IN TAMIL AND THEIR ENGLISH TRANSLATIONS



 

பாமரனின் பகவத்கீதை - சேவாலயா முரளிதரன்

பாமரனின் பகவத்கீதை

சேவாலயா முரளிதரன் எழுதியது. வானதி பதிப்பக வெளியீடு(ஏப்ரல் 2024)

- லதா ராமகிருஷ்ணன்

மூல மொழியிலும் சரி, மொழிபெயர்ப்பிலும் சரி - பகவத்கீதையை முழுமையாகப் படித்ததில்லை என்பதே நடப்புண்மை.

திருவள்ளுவர், பாரதியார் என்று யாரை எடுத்துக் கொண்டா லும் அவர்களுடைய சில பாக்களே, பாடல் களே மேற்கோள்களாக முன்வைக்கப்படுவதைப் பார்க் கிறோம். OUT OF CONTEXT ஆக அல்லது ALL TOO LITERAL ஆக பொருள் பெயர்த்து(அல்லது திரித்து)ப் பேசுவோரும் பலருண்டு.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பு படைக்கப்பட்ட ஒன்றில் நடப்புவாழ்வை ஒட்டியும் வெட்டியும் சில இருப்பது இயல்பு.

எதுவாக இருந்தாலும் எந்தவொரு படைப்பையும் முன்முடிவுக ளோடு அணுகி மதிப்பழித்து போட்டு உடைப்பதை விட சாரத்தை எடுத்து சக்கையை விடுத்து அவரவர் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.


சமீபத்தில் சேவாலயா என்ற கல்வியமைப்பு - சமூகநல நிறுவனத்தின் தலைவர் திரு.முரளிதரன் பகவத்கீதை யின் சாரம் குறித்து காணொளிகளாக வெளியிட்டவை பாமரனின் பகவத்கீதை என்ற தலைப்பில் நூல் வடிவில் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 600 பக்கங்கள். விலை ரூ 600. கெட்டி அட்டை. வாசிப்பைக் கடினமாக்காத, கண்ணுக்கு வலியேற்படுத் தாத நேர்த்தியான அச்சாக்கம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எளிய தமிழில் எழுதியிருக் கும் திரு.முரளிதரன் பகவத் கீதையைக் கரைத்துக் குடித்ததான பாவனையை மேற்கொள்ளவேயில்லை.

39 வயதில் இறந்துபோய்விட்ட பாரதியாரைப் பற்றி சிலர் எழுதும்போது அவருடைய வாழ்க்கையை அருகிருந்து பார்த்ததுபோல், அவர் தனது கவிதைகள் குறித்து, அவற் றின் பொருள் குறித்தெல்லாம் மரண வாக்குமூலம் தந்து விட்டுச் சென்றதைப்போல் அத்தனை authoritative ஆக எழுதுவார்கள். படிக்கப்படிக்க நமக்கு திகிலாகி விடும் - நாம் இத்தனை ஞானசூன்யமாக இருக்கிறோமே என்று!

ஆனால், திரு.முரளிதரனின் எழுத்து அப்படி அமைய வில்லை என்பதே நூலின் மகத்துவம்.

எளிமையாக, அதே சமயம் நூலின் சாரம் நீர்த்துப் போகாதபடி அவர் எழுதியிருப்பதே அவர் பகவத் கீதையை முழுமையாகப் படித்திருக்கிறார், ஆழ்ந்து உள்வாங்கி படித்திருக்கிறார், படித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு சான்று பகர்கிறது.
நூலில் இடம்பெறும் பதிப்புரை - முனைவர் வானதி TR. ராம நாதன் எழுதியது, ஆசியுரை - சுவாமி கௌதனானந் தர், தலைவர், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் எழுதி யது, வாழ்த்துரை - S.பாண்டியன், தலைவர், தக்கர் பாபா வித்யாலயா, எழுதியது, வாழ்த்துரை - பாரதியின் கொள்ளுப்பேரன், இசைக் கலைஞர் வி.ராஜ்குமார் பாரதி எழுதியது, எழுத்தாளர் - பத்திரிகையாளர் திரு மாலன் எழுதியுள்ள வாழ்த்துரை, இசைக்கவி ரமணன் (பாரதி யார் என்ற நாடகத்தை உருவாக்கி நடித்தவர்) எழுதி யுள்ள வாழ்த்துரை, நூலாசிரியர் சேவாலயா முரளிதரன் எழுதியுள்ள என்னுரை என இந்நூலில் இடம்பெறும் எல்லா எழுத்தாக்கங்களிலுமே அவற்றை எழுதியவர்கள் தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் நூலின் சிறப்பம் சங்களைக் குறித்துக் கருத்துரைத்திருக்கும் பாங்கும் குறிப் பிடத்தக்கது.