LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, September 4, 2025

கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

கவிமூலம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சொன்ன சொல் சொக்கத் தங்கமெனில்
சொல்லாதது வைரமெனச்
சான்றோர் மொழிய
'இல்லை
அது என்னிடம் இல்லாத
என் செல்ல நாய்க்குட்டி '
என்கிறான் சிறுவன்.

சட்டி அகப்பை நாம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



எதுவும் தெரியாவிட்டாலென்ன –
பரவாயில்லை
எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதே
(உன்) அறிவின் எல்லையான பின்….
முன்னுக்கு வந்துவிட்டால் பின்
உண்மையென்ன பொய்யென்ன அறிவில்….
என்னவொன்று
கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ
மறைத்தாலும்
புரையோடிய புண்வலியாய்
பொய் கொல்லும் நின்று..


சரிநிகர்சமானம்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


எனது நம்பிக்கை உங்களுக்கு நகுதற்குரியது;
நக்கலுக்குரியது.
எனக்கு அறிவிருப்பதையே நீங்கள் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்;
எனக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதைக்
கணக்கிலெடுத்துக்கொள்ள ஒப்புவதில்லை
ஒருபோதும்.
ஒரு குழந்தையின் மழலைப்பேச்சையும்
கிறுக்கல்களையும்
அணுகுவது போன்றே
என் மாற்றுக்கருத்துகளை அணுகும் உங்களுக்கு
என்மீது இருப்பது அன்பென்றால்,
சகமனித மரியாதையென்றால்
அத்தகைய அன்பை மதிப்பை
மறுதலிப்பதே யென் சுயாபிமானமாக.

ஆம் இல்லையாம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அன்பு என்பது
உணர்வாகவும்
சொல்லாகவும்
உண்மையாகவும்
பொய்யாகவும்
விரிந்தும்
சுருங்கியும்
விலகியும்
நெருங்கியும்
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது.
களைத்துப்போகச் செய்தாலும்
புண்ணாக்கினாலும்
ஒன்று மீதமில்லாமல் எல்லாத் தூண்களின்
பின்னாலும்
ஓடியோடித் தேடியபடியே
நாம்…….








மெய்யுணர்தல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

May be a doodle of tree and text
விசுவரூபம் இயல்பாயிருக்குமொருவர்க்கும்
விசுவரூப வேடந்தரித்த ஒருவருக்கு
மிடையேயான
ஆறுவித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச்
சொல்லிக்
கேட்டிருந்த புதிர்ச்சித்திரத்தில்
குறைந்தபட்சமாக அறுநூறு வித்தியாசங்களைக்
கண்டுபிடிக்க முடிந்ததில்
விசுவரூப வேடந்தரித்தவரை
வெகு இயல்பாய்க் கடந்துசெல்லவும்
விசுவரூபமே இயல்பாய்க் கொண்டவரை
வெகு இயல்பாய் விழுந்து வணங்கவும்
முடிகிறது.

சொல்ல வேண்டிய சில - திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம் - _ லதா ராமகிருஷ்ணன்

சொல்ல வேண்டிய சில திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்

(திண்ணை இணைய வார இதழில் - அரசியல்-சமூகம் பிரிவில்)

_ லதா ராமகிருஷ்ணன்

http://puthu.thinnai.com/2025/06/29/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/






Saturday, August 23, 2025

அலுவல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அலுவல்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எதிரே தெரிந்த சுவரொட்டியில்
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.
எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.
வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.
போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.All reactions:

சொல்லவேண்டிய சில….. மூத்த குடிமக்களும் சமூகமும்

 சொல்லவேண்டிய சில…..

மூத்த குடிமக்களும் சமூகமும்

(www.puthu.thinnai.com)

http://puthu.thinnai.com/2025/08/10/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95/


சில நாட்களுக்கு முன்பு படிக்க கிடைத்த செய்தி இது பெங்களூருவில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் மே மாதத்தில் சேர்க்கப்பட்ட 84 வயது கணவரும் அவருடைய மனைவியும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்கள் தன் மனைவி செய்யும் சாப்பாடு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களே விரும்பித்தான் மூத்த குடிமக்கள் இல்லத்தில் தங்களை சேர்க்க சொன்னதாக கூறி இருக்கும் அவர்களுடைய மகன் தன்னுடைய பெற்றோரின் இறப்பு குறித்து புகார் அளித்திருக்கிறார் ஆனால் இந்த செய்தியை படிக்கும் போது அது விரட்டில் இந்த மூத்த குடிமக்கள் எடுத்த முடிவாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் என்று தோன்றுகிறது தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை.

சில ஊர்களில் வயதானவர்களின் மரணத்தை இறைவாக்க முடியாமல் விரைவாக முடியாமல் படுத்து கிடப்பவர்களுக்கு இளநீர் புகட்டுவது வழக்கம் என்று படித்திருக்கிறேன் அது குறித்து எழுத்தாளர் கவிஞர் எம்டி முத்துக்குமாரஸ்வாமி 

ஜூலை 13 அன்று தனது ஃபேஸ்புக் நிலைத்தகவல் பகுதியில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அது இங்கே பெட்டிச்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.


மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS – BERTRAND RUSSEL) அத்தியாயம் 3 போட்டி

 மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS – BERTRAND RUSSEL)

அத்தியாயம் 3
போட்டி
https://puthu.thinnai.com/2025/08/10/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f-2/

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)
அமெரிக்காவில் உள்ள எந்த மனிதரையும் அல்லது இங்கிலாந்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த மனிதரையும், வாழ்வின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் அவர்களைத் தடுக்கும் மிக முக்கிய விஷயம் எது என்று கேட்டால் அவர் வாழ்தலுக்கான போராட்டம் என்றே பதில் அளிப்பார். அதை மிகவும் உண்மையாகவே அவர் கூறுவார். அதை அவர் தீர்மானமாக நம்புவார். ஒரு குறிப்பிட்ட வகையில் அது உண்மையே. ஆனால், இன்னொரு வகையில் – இது மிகவும் முக்கியமானது – அது அப்பட்டமான பொய்;

கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கோதண்டராமன் காதையும்


கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின்
ஃபிடில் இசையும்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”.
(ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).
ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.
காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று
அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..
‘ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்’
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்கொண்டிருக் கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து
கோலமிடப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்;
’நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்று கண்ணதாசனின் வரிகளை
இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாரதியை
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர்
(மறந்தும் பின்பற்றமாட்டார்)
துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கீறானே இக்கரை இக்கால நீரோ மன்னன்
இவன் கொடுங்கோலனல்லவா என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.
இன்னும் சிலர்
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.
ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.
நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.
அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை –
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!
அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….
’நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்’ என்று
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக்
குதிரைக்கொம்பா?
வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த அனுமன் கண்களில்
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.
எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும்,
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை
அதிகமாகிக்கொண்டே.

Friday, August 1, 2025

INSIGHT / JUNE - JULY 2025 (A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY)

 INSIGHT / JUNE - JULY 2025

(A BILINGUAL BLOGSPOT FOR

CONTEMPORARY TAMIL POETRY)

மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]


www.puthu.thinnai.com
 

*BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]

ஞானமும் விவேகமும் உள்ளவர்கள், முந்தைய காலங்களின் அனைத்துவிதமான ஆர்வங்கள் உத்வேகங்கள் எல்லாவற்றின் ஊடாகவும் வாழ்ந்து பார்த்து இறுதியில் இனி வாழ்வதற்கு என்று எதுவுமே இல்லை என்பதே கண்டுணர்ந்துவிட்டார்கள் என்றவிதமாய் அனுமானித்துக்கொள்வது உலக வரலாற்றில் ஏராளமான பல கால கட்டங்களில் இருந்தது போலவே,…