LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 18, 2023

கவிஞர் நேசமித்ரனின் கவிதையை முன்வைத்து - லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் நேசமித்ரனின் கவிதையை முன்வைத்து…..

 _லதா ராமகிருஷ்ணன்


 கவிஞர் நேசமித்ரனின் ஒரு கவிதையையும் அதற்கான என் ஆங்கில மொழியாக்கத்தையும் இங்கே தந்துள்ளேன்.

 

நேச மித்ரனின் கவிதை:

..............................................................................

அந்த மரம் சும்மாதான் நிற்கிறது

சும்மா இருக்கும் மரம்தான்

ஒரு பழைய இலையை பழுக்க வைக்கிறது

ஒரு புதிய வேர் வழியில் இருக்கும்

பாறையை முட்டிக் குடைந்து கொண்டிருக்கிறது

கடந்து போகும் மேகம் கருக்குமா

பொழியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது

வீசும் காற்றில் கிளை முறிந்து விடாமல் இருக்க வளைந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது

அவ்வளவு வெய்யிலை

உள்ளங்கையில் சுடச் சுட ஏந்தி

சோறு சமைத்துக் கொண்டிருக்கிறது

தாமதமாய் கூடு திரும்பும் பறவைக் கூட்டில் குஞ்சுகளுக்கு சமாதானம் சொல்கிறது

இன்னொரு கூட்டில் முட்டைகளை திருடி உண்ணும் பாம்பை ஒண்னும்

செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறது

பூக்களை கனியாக்குகிறது

மரங்கொத்திக்கு உடல் தருகிறது

நன்கு வளர்ந்து நின்ற ஒரு நாள்

அறுத்துக் கொண்டு போகும்போதும்

அப்படியேதான் நின்று கொண்டிருக்கும்

என் அம்மா

ஹவுஸ் ஒயிப்தான் சார் என்பதும்

மரம் சும்மாதான் நிற்கிறது

என்பதும் ஒன்றுதான்

 ..........................................................................................................

English Translation(by me)

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

That tree is just standing there

It is this ‘just standing’ tree
that ripens an old tree
A new root keeps banging against a rock
on the way,
piercing and probing
Worrying over the cloud going past
wondering whether it would darken
and cause the rain
it is bending and curving by way of protecting
the branch from breaking apart
in the blowing wind.
Holding so much of sun in its palm
it is cooking food;
consoles the chicks in the nest
when the return of the mother bird is delayed.
Watches helplessly the snake
that steals the eggs from another nest.
Turns flowers into fruits.
Offers its body to the woodpecker.
Fully grown when on the day
it is cut and taken away
It would remain just standing there
Saying ‘My mother is just a house wife, Sir’,
is the same as saying
‘The tree is just standing there’.
................................................................................................................

கவிமனம் இருபாலினமானது என்ற என் நம்பிக்கையின் நிரூபணமாய் இக்கவிதை. நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தது.

 கவிதையென்றால் என்னவென்றே தெரியாதவர் களெல்லாம் கவிதைக் களத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படுவதாகப் பதாகை ஏந்தி வர ஆரம்பித்து, பெண் இன்னின்னது தான் எழுதவேண்டும் என்று பட்டியலிட ஆரம்பித்து, ஆணினம் சார்ந்த கவிஞர்களை வீணாகக் குற்றவுணர்வு கொள்ளவைத்து, பெண் சார்ந்த மேம்போக்கான கவிதைகளை எழுதவைத்து,

கவித்துவம் அறவேயற்று எழுதப்பட்ட வெறும் போதனை, அறிவுரை, பிரச்சார வரிகளையெல் லாம் பெண்விடுதலைக் கவிதைகளாக உருவேற்றி,

அதன் மூலம் தங்களுக்கான மேடைகளை நிறுவிக் கொண்டு,

பெண்கள் எழுதும் கவிதைகளை ஆண் என்ற ஒரே காரணத்தால் திறனாய்வு செய்யத் தகுதிவாய்ந்தவர்களாய் பீடத்திலேறி பரப்புரை செய்து ....

 - என நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் நாடகங்களையெல்லாம் வருடக் கணக்காகப் பார்த்துக் கொண்டிருப்பதில் சலிப்புற்றிருக் கும், வெறுப்புற்றிருக்கும் மனதிற்கு ஒரு வலி நிவாரணமாய் இவ்வகைக் கவிதைகள்.

 பெண்களை victims ஆகவே உணரவைப்பதை விட தன்மதிப்பை அவளுக்கும் மற்றவர்களுக்கும் கவித்துவம் குறையாத படைப்புமூலமாய் உணர்த்தும், இவ்வகைப் படைப்புகளே, உண்மையான பெண்ணிய எழுத்தாக்கங்கள் .

HOUSEWIFE என்பதற்கு பதில் இப்போது HOME-MAKER என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், சொற்களின் அர்த்தங்களை மனதில் வாங்கிக் கொண்டாலொழிய மனமாற்றம் ஏற்படாது. மனமாற்றத்திற்கு இத்தகைய கவிதைகள் கண்டிப்பாக உதவும்.

 திருமணமான இளம்பெண் ஒருவர் சமீபத்தில் எனக்கு எழுதியிருந்த தன்விவரக்குறிப்பில் கணவன் உழைப்பில் வாழ்கிறேன் என்பதாய் குறிப்பிட்டிருந்தார். இயல்பாய் எழுதினாரோ, உள்மனவலியோடு எழுதினாரோபடிக்க வருத்தமாக இருந்தது.

 இன்றைய வாழ்க்கைச்சூழலில் வேலைக்குப் போகாத தன் மனைவி குறித்து அவமானமாக உணரும் கணவர் களையும் காண முடிகிறது.

 மேற்குறிப்பிட்ட பெண்ணுக்கு ஆறுதலாய் என்ன எழுதுவது என்று புரியாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

 இன்று கவி நேசமித்ரனின் இந்தக் கவிதையை அவருக்கு அனுப்பிவைப்பேன்.

 இன்னும் சிலருக்கும்.

.............................................................................



Monday, July 17, 2023

க.நா.சுவின் கவிதை - 1 - ஆங்கில மொழிபெயர்ப்பில்

  க.நா.சுவின் கவிதை - 1

ஆங்கில மொழிபெயர்ப்பில்

(*மொழியாக்கம் : லதா ராமகிருஷ்ணன்)

....................................

*க.நா.சு இலக்கியத் திறனாய்வாளராக, புதின எழுத்தாளராக, கட்டுரையாளராக அறியப்பட்ட அளவு கவிஞராக அறியப்படவில்லை யென்றே தோன்றுகிறது. ஆனால், சிறந்த கவிதைகள்  - உரைநடைக் கவிதை கள், எதிர்க்கவிதைகள் - எழுதியிருக்கிறார். அவற்றிலிருந்து சில கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். எந்தக் கவிதையை மொழிபெயர்த்தாலும் அது மூல கவிதையின் அழகை, அடர்வை மொழிபெயர்ப்பு எட்டவில்லை யென்ற உணர்வே ஏற்படுகிறது. ஆனாலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கு தமிழில் எத்தனை சிறந்த கவிதைகள் இருக்கின்றன என்பதை ஆதாரபூர்வமாகக் காட்ட மொழிபெயர்ப்பு ஒன்றே வழியென்பதும் புரிகிறது.

..............................................................................

1. THE WILL
The D-Day has come for writing my Will.
Though there are no assets, should write a Will.
That is manliness indeed.
I hereby bequeath all the bits and pieces of paper
brimming in my boxes
to the universities all over the world.
They can’t tear them in a better manner.
Words innumerable that I have not used,
those in the dictionaries and those not
I give away to the poets who succeed me.
The meager income that I have so far earned
I give to my father who wished to
turn me into a writer and take pride in it
and breathed his last with his hope in tact.
Wishes countless, cravings and disappointments galore
have pursued me in my lifetime.
I give them all to this world.
Let the thugs and traitors around
share my good reputation.
Let those having eyes that see
share my eyes that see not.
I gift my future to my dear wife Raji.
An English poet by name Yeats named as his heir
those who walk straight holding their head high.
It is a sheer impossibility to see anyone around me, in India,
walking thus, holding their head high.
One and all bowing and bending
cringing and crawling
are searching for ever something on the floor
and under the earth.
Let that spot they have always sought be theirs.
All those loans borrowed by me ,
from whosoever I have got them
giving my word,
I hereby give them back to all those
as loans the same.
Let them get the strength to have them
as their revenues.
Let me give back the whole lot of my intelligence
so diligently saved and so utterly useless
to those who know not how to use it.
Let it fill the repositories of knowledge.
Better not to come out and operate.
No tomb for me please.
If it is a must let no name be inscribed on it.
I will make all those gods too many
I am acquainted with,
inside many a shrine all too gloomy
as idols unseen by the eyes of any.
The books that I am yet to write
my publishers are free to publish
and earn profits
and buy one more computer
for writing the accounts.
All the promises I have made
I hereby give away to the wind
and all the welfare activities I have vowed
to carry out
I hereby entrust in the hands of my future
which I can no more look forward to.
I too have political ambitions.
I hereby bequeath them all
to all the heir-apparent of Nehru Dynasty.
As long as there are Lord Indran, the moon, Chandran,
air, space water
Let them all – the grandsons and great grand daughters
keep ruling _ I bless.
Let my written poems remain unseen
by the eyes of people and
lie hidden in the pages of books.
But let my unwritten poems be
hailed and analyzed in high spirits by the critics
and used by them as crutches
for becoming professors.
All my wasted moments hours days
weeks months and years become public properties
of the land
and help one and all; help one and all.
Let the palaces that I have not built
be occupied by those not born alive
and those moving around as walking corpses.
The rest of my movable belongings,
household objects, rags,
the name Kandhaadaiyaan
I hereby give to my sons not born
with no right to sell.
The thoughts I have not had
are there for my chosen disciples.
Nothing else should be there with me
at the time of my death.
Let the words of He observing
‘Not even the needle with broken hole would accompany ’
prove true in my case.
Let me give up my name also _
whoever want, can have it.

க.நா.சுவின் கவிதை

உயில்
என் உயிலை எழுதிவைக்கவேண்டிய நாள்
வந்துவிட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுதவேண்டும் _ அது புருஷ லக்ஷ்ணம்
என் பெட்டிகளில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்கமுடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொல்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமை கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன.
அவற்றை உலகுக்குத் தந்துவிடுகிறேன்.
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்துகொள்ளட்டும். காணாத என் கண்களை
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்துகொள்ளட்டும்.
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.
யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவி தன் வாரிசாக ‘நிமிர்ந்து நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்றுவட்டத்தில், இந்தியவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகி குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்.
பட்டுவிட்ட கடன்களையெல்லாம் யார்யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாகத் திருப்பி
விடுகிறேன்
தங்களுக்குத் தாங்களே வரவு
வைத்துக்கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்துவைத்த உபயோகப்
படாத என் அறிவை யெல்லாம் அதை
உபயோகிக்கத் தெரியதவர்களுக்குத் திரும்பவும்
தந்துவிடுகிறேன். அறிவுக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் _ வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்படவேண்டாம்.
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களை யெல்லாம்
இருளடர்ந்த பல கோயில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்திவைத்துவிடுகிறேன்.
நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்து லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக்கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளை யெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களை யெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர்காலத்துக்கும்
வாரி அளித்துவிடுகிறேன். எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு.
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்துவிடுகிறேன்.
இந்திரன்
சந்திரன், காற்று, வெளில் நீர்
உள்ளளவும் கொள்ளுப் பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புஸ்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடைக்கட்டும்
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக்கொள்ளட்டும்.
என் வீணாகிப்போன நொடிகள் நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்,
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகைகளில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களை
தட்டுமுட்டு சாமான்களை,கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக்கூட பாத்தியமில்லாமல்
தந்துவிடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகள் எல்லாம்
கிடைக்கின்றன.
வேறு ஒன்றும்
எனது என்று சொல்ல சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக்கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவன் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்துவிடுகிறேன் _ என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக்கொள்ளட்டும்.



நிழலும் நிஜமும்…. லதா ராமகிருஷ்ணன்

நிழலும் நிஜமும்.....

லதா ராமகிருஷ்ணன்




திரைப்படத்தின் கனமான காட்சிகளை, படத்தின் நடுவில், அல்லது இறுதியில் இடம்பெறும் உச்சக்கட்டக் காட்சியை, திருப்புமுனைக் காட்சியை நடிப்பதற்கு முன் அதில் பங்குபெறும் கதாநாயக நாயகி கள் யாரிடமும் பேசமாட்டார்கள், அந்தக் காட்சியின் கனத்தை மன தில் உள்வாங்கியவர்களாய் பாத்திரமாகவே மாறியிருப் பார்கள், அதிலிருந்து மீள அவர்களுக்கு கொஞ்ச நேரமா கும்’ என்றெல் லாம் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் படித்ததுண்டு.

ஒரு நடிகர் தான் நடிக்கும் எல்லாப் பாத்திரங்களாகவும் எந்நேரமும் வாழ்ந்துகொண்டிருக்க இயலாது. எழுதும் படைப்பிலேயே அமிழ்ந்துவிட்டால் படைப்பாளியால் அந்தப் படைப்பை சிறப்பாக எழுதவியலாது என்றும் சொல்ல முடியும்.
ஆனால், ஒரு அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட திரைப்படத்தில் நடித்தவர்கள் படப்பிடிப்பில் நடந்த வேடிக்கைகளை மட்டுமே பேசி வெடிச்சிரிப்புகளை அவையோரிடம் உண்டாக்கும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்ட நோக்கமே அடிபட்டுப்போய் விடக்கூடிய அபாயமிருக்கிறது.
மாமன்னன் படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் கதை குறித்துப் படித்தேன். சிற்சில காட்சிகளை யூட்யூபில் பார்த்தேன். அதில் நடிக்கும் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார் கள் என்று பரவலாகப் பேசப் படுகிறது. படமும் முக்கியமான கதைக்கருவைக் கொண்டிருக்கிறது.
ஆனால், யூட்யூபில் இந்தப் படம் குறித்து பார்க்கக் கிடைக்கும் காணொளிகளிலெல்லாம் நடிகர்கள் அதிலுள்ள கனமான காட்சிகளையெல்லாம் பற்றிச் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். கனமான காட்சிகளை நடிக்கும்போதெல்லாம் என்னவெல்லாம் வேடிக்கை பேசினோம், குறும்பு செய்தோம் என்று சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள்.
இப்படியே செய்துகொண்டிருந்தால் படத்தை எடுத்த நோக்கமும் வணிக ரீதியானதே (அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், அதுவே முழுமுதற்காரணமாகி விடலாகாது) என்று எண்ணும்படியாகிவிடும்.
படத்தின் இயக்குனர் தவிர படத்தின் கதாநாயகன், மாமன்னனாக நடிப்பவர் என்று எல்லாமே அழுத்தமான காட்சிகளையும் சிரிக்கச் சிரிக்க விவரித்துக் கொண்டே போகிறார்கள். பார்க்க என்னவோ போலிருக்கிறது.
இனியேனும் அவர்கள் அந்தக் காட்சிகளிலிருந்து, கதாபாத்திரங் களி லிருந்து தாங்கள் பெற்ற சமூக-அரசியல் தெளிவுகளைப் பற்றி அரங்குகளில் IN ALL SERIOUSNESS பேசவேண்டும்.

குழந்தைகளும் கவிஞர்களும் - லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளும் கவிஞர்களும்

லதா ராமகிருஷ்ணன்


*கலீல் கிப்ரானின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

குழந்தைகள்
கலீல் கிப்ரான்
(*தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்)

உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய பிள்ளைகளல்ல
அவர்கள் வாழ்வின் தனக்கான தாகத்தின் மகன்களும் மகள்களுமாவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள் ஆனால் உங்களிடமிருந்து அல்ல.
அவர்கள் உங்களோடு இருப்பினும் உங்கள் உடைமைகள் அல்ல.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்,
ஆனால் சிந்தனைகளைத் தர இயலாது.
ஏனெனில் அவர்களுக்கென்று சுயமான எண்ணங்கள் இருக்கின்றன.
அவர்களுடைய உடல்களுக்கு நீங்கள் உறைவிடமாகலாம்
அவர்களுடைய ஆன்மாக்களுக்கு இயலாது.
காரணம், அவர்களுடைய ஆன்மாக்கள்
உங்களால், கனவிலும், செல்லவியலாத
நாளையெனும் இல்லத்தில் வசிக்கின்றன,
நீங்கள் அவர்களைப்போலாக முயலலாம்
ஆனால் அவர்களை உம்மைப்போலாக்க எண்ணவேண்டாம்.
ஏனெனில் வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதில்லை;
நேற்றிலேயே தயங்கிநிற்பதில்லை
நீங்கள் விற்களைப்போல
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாய் அவற்றிலிருந்து
விசையுடன் அனுப்பப்படுகிறார்கள்
வில்லாளி எல்லையின்மையின் பாதைமீதான
குறியிலக்கைக் காண்கிறார்
அவர் உங்களைத் தன் முழுவலிமையோடு வளைக்கிறார்
தன் அம்பு வேகமாய் வெகுதூரமாய்ச் செல்ல.
வில்லாளியின் கையில் வளைவது
மகிழ்வானதாகவே அமையட்டும் உமக்கு
ஏனெனில் பறந்துசெல்லும் அம்பை அவர்
பெரிதும் விரும்புவது போலவே
நிலைகொண்டிருக்கும் வில்லையும் நேசிக்கிறார்.
_______________________________________________

கலீல் கிப்ரானின் ’குழந்தை’ ஒரு குறியீடு
லதா ராமகிருஷ்ணன்
கலீல் கிப்ரான் 1883 ஜனவரி 6இல் லெபனான் நாட்டில். பிறப்பு. 1931 ஏப்ரல் 10இல் 48ஆவது வயதில் அமெரிக்காவில் இறப்பு. ஓவியர் கவிஞர் சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தத்துவ, இறையியல் சிந்தனையாளர்.
1923இல் வெளியான இவருடைய படைப்பு The Prophet, கவித்துவமான ஆங்கில உரைநடையில் எழுதப்பட்ட தத்துவார்த்த கட்டுரைகளின் தொகுப்பு.
இளமைப்பருவத்திலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட்ட கலீல் அராபிய மொழியிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளைத் தந்தார். அராபிய உலகில் கலீல் இலக்கிய, அரசியல் புரட்சியாளராக பார்க்கப்படுகிறார்.
Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் இவருடைய கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இங்கே தந்துள்ள அவருடைய கவிதையின் பிற்பகுதி இறையியல் சார்ந்த தாக இருக்கிறதென்றாலும் இதன் முதல் பகுதி மிகச் சிறந்த வாழ்க்கைத் தத்துவமாக விரிகிறது.
ஒருவரின் குழந்தை என்பது அவருடைய உடமையல்ல என்று அத்தனை கவிநயத்தோடு எடுத்துரைக்கிறது.
இந்த வரிகளிலுள்ள குழந்தை என்ற வார்த் தைக்கு பதில் எழுத்தாளர் அல்லது படைப்பாளி அல்லது கவிஞர் என்று போட்டுக்கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும், அப்பட்ட உண்மையாக இருக்கும் என்று அடிக்கடி தோன்று வதுண்டு.
ஒரு குடும்பத்தில் பிறந்தவரென்றாலும் எந்த வொரு எழுத்தாளரும் அந்தக் குடும்பத்தின் உடைமையல்ல. அவர் உலகம் முழுமைக்கு மானவர். அவரை, அவர் படைப்புகளை உள்ளன்போடு கொண்டாட உண்மையான வாசகர்கள் எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.