LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 20, 2022

அரசியல்பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அரசியல்பார்வை

 (*18.12.2022 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது) 
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள்

வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன்.

அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள்

வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது போதாதா என்கிறேன்.

போதாது. இது வனம் என்பதற்கு அத்தாட்சி வேண்டும் என்கிறீர்கள்.

காற்றின் இருப்புக்கு அத்தாட்சி கேட்பது எத்தனை அபத்தமோ

அதை விட மோசம் வனத்தின் பிரத்யட்சத்துக்கு நிரூபணம் கேட்பது என்கிறேன்.

இது வனமானால் இதில் என்னவெல்லாம் இருக்கிறது சொல் பார்க்கலாம் என்கிறீர்கள்.

இருவரின் நேரத்தையும் ஏன் இப்படி வீணடிக்கிறீர்கள்வனத்தை வனமில்லை என்று பேசுவதுதான் அறிவுசாலித் தனம் என்றால் உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்கிறேன்.

அதிபுத்திசாலியாகப் பேசுவதாக நினைப்போ? வனத்தில் என்ன இருக்கிறது என்று ஒரு பத்து விஷயங்களைக்கூட சொல்லத்தெரியவில்லை உனக்கு என்று எகத்தாளமாகச் சிரிக்கிறீர்கள்

உங்களுக்கு இது வனம் என்று சொல்லக்கூடத் தெரிய வில்லையேஇதில் என்னைக் கேள்வி கேட்கிறீர்கள் என்கிறேன்.

நாலு மரங்களிருந்தால் வனமாகிவிடுமா என்று நமுட் டுச் சிரிப்போடு கேட்கிறீர்கள்

இங்கே நாலு மரங்கள் மட்டுமா இருக்கின்றன என்கி றேன்.

புலி சிங்கம் யானை கரடி விஷப்பூச்சி குள்ளநரி பாம்பு நீர்ச்சுனை முட்புதர்கள் அன்னபிற இருந்தால் மட்டும் ஒரு இடம் வனமாகிவிடுமா என்கிறீர்கள்.

ஆக இவையெல்லாம் இங்கிருக்கின்றன என்பதை ஏற் றுக் கொள்கிறீர்கள் என்கிறேன்.

ஒரு பூகோள வரைபடத்தில் கோடிழுத்துக் காட்டப்பட் டுள்ள வனப்பகுதி நிஜ வனமாகிவிடாது என்கிறீர்கள்

வரைபடத்திலுள்ள வனம் என்பது மெய்வனத்தைத் தானே குறித்துக்காட்டுகிறது என்கிறேன்.

வனம் என்பது உன் மன பிரமை யென்கிறீர்கள்

ஒரு கை யோசைத் தத்துவம்தானே எல்லாம் என்கிறேன்.

ஏட்டுச்சுரைக்காய் கவைக்குதவாது என்கிறீர்கள்.

அது ஏட்டைப் பொறுத்தது என்கிறேன்.

எதை வேண்டுமானாலும் வனம் என்று தினம் நம்புவ தால் என்ன பயன் என்கிறீர்கள்

வனத்தை வனமில்லை யென்று சாதிப்பதால் என்ன பயன் என்கிறேன்

நான் வனம் என்று சொல்வதை வனம் என்று கொள்ள குறைந்தபட்சம் நூறுபேர் உண்டு என்கிறீர்கள்

ஆக உங்கள் வனம் வனமில்லை யென்று ஒப்புக்கொள் கிறீர்கள் என்கிறேன்.

வளர்ந்துகொண்டே போகும் வார்த்தைகளில் விரிந்து கொண்டே போகிறது வனம்

கணமோ யுகமோகவிதைபோல் காலமும் முடியத் தான் வேண்டும்……மௌனமாகிறேன்.

இங்கில்லாத வனத்தை இருப்பதாகப் பொய்யுரைத்த குற்றவுணர்வில் ஏதும் பேச வக்கில்லாமல் போய்விட் டதோ என்று நக்கலாய் கண்சிமிட்டிக் கேட்கிறீர்கள்.

இது வனமா இல்லையா என்று முடிந்தால்

இக்கணமோ எக்கணமோ உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்றவாறு . விடைபெற்றுக் கொள்கிறேன்.

 

சமீபத்தில் கேட்கக் கிடைத்த அருமையான சொற்பொழிவு. _ லதா ராமகிருஷ்ணன்

 சமீபத்தில் கேட்கக் கிடைத்த அருமையான சொற்பொழிவு.

 _ லதா ராமகிருஷ்ணன்

https://youtu.be/p8g24gcKCF8

https://www.youtube.com/watch?v=hXMNCqZAcSE


அவரவர் கட்சியை உயர்த்திப் பிடிப்பதையே, எதிர்க்கட்சிகளை எத்தனைக் கெத்தனை தரக்குறைவாகத் தாழ்த்திப் பேசுவதையே நோக்கமாகக் கொண்டு, அல்லது,  நிலவும் சமூகச் சீர்கேடுகளுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரைக் காரணமாகக் காட்டிக்காட்டி வன்மம் நிறைந்த வார்த்தைகளால் அவதூறு பேசுவதையே முழுநேர வேலையாகக் கைக்கொண்டு கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி யபடி,    கையில் பிடித்திருக்கும் தாளையே பார்த்தபடி  படித்தபடி, அவ்வப் போது தலையை நிமிர்த்தியபடி நடத்தப்படும் சொற்பொழிவுகளையே தமிழ்ச்சூழலில் சமீபகாலமாக அதிகம் கேட்க நேர்கிறது. 

ஆனால், ETHICS (விழுமியங்கள்என்ற பொதுவான கருப் பொருளில் தமிழக பா.. தலைவர் திருஅண்ணாமலை MEGA CA STUDENTS CONFERENCE – 2022 என்ற நிகழ்வில் மாணாக்கர்களிடையே CREDENCE என்ற தலைப்பில் ஆற்றொழுக்காக ஆற்றியிருக்கும் இந்தச் சொற்பொழிவு அத்தனை அருமையாக இருக்கிறது.

யாரையும் நக்கலாகப் பேசுவதோ குத்தலாகப் பேசுவதோ இல்லை. மாணவர்களிடையே உரையாடக் கிடைத்த மேடையை அரசியல் முழக்கங் களுக்குப் பயன்படுத்திக் கொள்ள முயலாமல் In all seriousness கையிலுள்ள கருப்பொருள் குறித்து அத்தனை இயல்பாக, சரளமாக அவர் ஆற்றியிருக்கும் இந்த உரை போல் கேட்டு வெகு நாட்களாயிற்று.

 யாம் பெறும் இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப விருப்பமுள்ள வர்கள் கேட்டுப் பயனடையட்டும் என்று இந்த உரையின் காணொளியை (ஒருவேளை காணொளியை இங்கே சரிவர காண இயலாவிட்டால் அதைக் காண உதவியாய் அதன் லிங்க்கையும் இங்கே தந்துள்ளேன். 

https://youtu.be/p8g24gcKCF8

https://www.youtube.com/watch?v=hXMNCqZAcSE

என்னை சங்கி என்று கூறுபவர்கள் கூறுங்கள். MONKEY என்றுகூட கூறுங் கள். பாதகமில்லை. ஆனால் இந்தக் காணொளியை திறந்த மனதோடு முழுவதும் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!

Saturday, December 17, 2022

ANAAMIKAA ALPHABETS BOOKS

 ANAAMIKAA ALPHABETS BOOKS

(*இவற்றில் பல அமேசான் -கிண்டில் மின் -நூல்களாகவும் வெளியாகியுள்ளன)





நூல்கள் வாங்க புதுப்புனல் பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்




புதுப்புனல் பதிப்பகம்

 குறிப்பிடத்தக்க தமிழ் புனைவு, அ-புனைவு நூல்களை

புதுப்புனல் பதிப்பகம்

கணிசமாக வெளியிட்டிருக்கிறது.

தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

சாந்தி நூலகம் வெளியிட்டிருக்கும்
சிறுவர் நூல்களும்
ANAAMIKAA ALPHABETS வெளியீடுகளும்
இங்கு கிடைக்கும்!!
தொடர்புக்கு:















குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி 26 - 28

 

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி  26 - 28


26. மதிநுட்பமும் மொழித்திட்பமும்

 


எனக்குக் காபி என்றால் உயிர்என்றார் பரவசத்தோடு.

உயிரை எத்தனை மலிவாகப் பேசுகிறார் பார்த்தீர்களாஎன்று

ஒரு கரும்புள்ளியிட்டனர்.

உயிரென்ன வெல்லமா?’ என்று அவர் கோபத்தோடு கேட்டபோது

வெல்லத்தை இழிவுபடுத்துவதில் வெட்டவெளிச்ச மாகிறது இவருடைய புல்லுருவித்தனம்என்று

ஒரு செம்புள்ளியிட்டனர்.

நல்ல மனம் வாழ்கஎன்றதை

தன்னைத்தான் சொல்லிக்கொள்கிறார்என்பதாகவும்

அல்பகல் அயராதுழைத்தார்கள்என்றதை

அப்படி அல்லாடத்தான் அவர்கள் பிறந்திருப்பதாகமூளைச்சலவை செய்வதாகவும்

காலைமாலையெவ்வேளையும் புதுப்புது

()ர்த்தங் கற்பித்துக்கொண்டே போவதில்

ஒருவேளை

கைவசமிருக்கும் கரும்புள்ளி செம்புள்ளிகள் தீர்ந்துபோட்விட்டால் என்ன செய்வது என்று

சீரிய மதிநுட்பமும் மொழித்திட்பமும் வாய்க்கப்பெற்றவர்கள்

சிந்தித்துச்சிந்தித்துச்சிந்தித்து

ஸ்விஸ் வங்கி லாக்கரில் நிரம்பி வழியுமளவு

வெகு அதிகமாகவே கரும்புள்ளி செம்புள்ளி சொல்பொருள் ()ர்த்தாத்தங்களை

சேமித்துவைப்பதென்று ஒருமனதாய் முடிவுசெய்திருக்கிறார்கள்.

 

 27. கருமமே கண்ணாயினார்

 

கருமம் எப்படிக் கண்ணாகும்?’ எனக் கேட்டார்

ஒருவர்.

அல்லது கண் எப்படிக் கருமமாகும்?’ என்றார் இன்னொருவர்.

கருமம் கருமம்என்று முகத்தை கோணலாக்கி தலையிலடித்துக்கொண்டார் வேறொருவர்.

கருமம் பிடித்தவர்என்று காறித்துப்பினார்

மற்றொருவர்.

நார் கண்ணானதோ யார் கண்டார்என்றார்

காணாமலே விண்டிலராயிருப்பவர்.

கண்ணன் + நயினார் கண்ணாயினார்என்றார்

பன்மொழிப்புலவராக அறியப்படப்

பெருமுயற்சி செய்துகொண்டிருப்பவர்.

கரு, மரு மேருஎன்று WORD BUILDING கட்டி

இறும்பூதடைந்தார் சொற்கட்டிடக்கலைஞர்.

நயினாவுக்குத் தரப்பட்டிருக்கும்ர்விகுதியை

நிறையவே சிலாகித்தார் மொழியியலாளர்.

கண் ஆய் என்கிறாரேஇது என்ன கூத்துஎன்று

அவிட்டுச்சிரிப்போடு கேட்டவர்க்கு

வெண்பட்டுச் சால்வை போர்த்தப்பட்டது.

அவரவர் கண்ணும் கருமமும் நாரும் வேறும்

அவரவர்க்கேயாகுமாம்

என்றொரு அசரீரி எந்நேரமும் கூறும்…….

 

  28.வேடதாரிகளும் 

  விஷமுறிப்பான்களும்

 

அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து

ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்

தைக்கச்சொல்லி

மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து

பதவிசாக அதையணிந்துகொண்டு

ஆடியின் முன் நின்றவண்ணம்

அரங்கில் நளினமாக நடந்துவருவதை

ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து

அப்படியே நீ வந்தாலும்

அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்

வழியெங்கும் நஞ்சு கக்கும் என

அறிந்திருக்குமெனக்குண்டாம்

குறைந்தபட்சம்

இருபது திருநீலகண்டங்கள்!