LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 8, 2022

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்! - நான் கே.எஸ். பேசறேன்.... நூல் இப்போது மின் - நூலாக

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்!

நான் கே.எஸ். பேசறேன்.... நூல் 

இப்போது மின் - நூலாக


 இரண்டு வருடங்களுக்கு முன்பு 24 அக்டோபர் 2020இல் டாக்டட் கே.எஸ்.சுப்பிரமணியன் அமரரானார்.

 தமிழின் குறிப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தாள ரும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாக்கங்கள், சமகால தமிழ்க்கவிதைகள், பாரதியார் கவிதைகளில் பல என நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.

 ஆங்கிலத்திலிருந்து தமிழில் டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற படைப்பு CODE NAME GODஐ தமிழில் மொழிபெயர்த்திருக் கிறார்(கவிதா பதிப்பக வெளியீடு)

ஆங்கிலத்தில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக் கிறார்.

சிறந்த மனிதநேயவாதி. மூன்றாமவர் அறியா மல் அவர் செய்த உதவிகள் நிறைய நிறைய.

 அவருடைய நினைவைப் போற்றும் வகையில் கடந்த வருடம் புதுப்புனல் சார்பில் ‘நான் கே.எஸ்.பேசறேன்’ என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணி யனின் மொழிபெயர்ப்புகள் சில, தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் சில, அவரை நினைவுகூர்ந்து அவருடைய மகன், மகள், நண்பர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் சில இந்த நூலில் இடம்பெற்றுள் ளன.

 ’நான் கே.எஸ். பேசறேன் என்ற இந்த நூல் இப்போது அமேஸான் – கிண்டில் மின் – நூலாக  - தமிழ்க்கட்டுரைகள் தனியாகவும், ஆங்கில எழுத்தாக்கங்கள் தனியாகவும் என இரண்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளது.

ஆங்கிலம்தமிழ் இருமொழியிலுமான நூல் என்பதால் தமிழ் அச்சுருக்கள் சரியாகப் பதியவில்லை.

 புதுப்புனல் பதிப்பக நண்பர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுஎனக்குத் தெரிந்த அளவில் மின் -நூல்களைச் செய்திருக்கிறேன்.

 Amazon.in இல் Dr.K.S.Subramanian என்று தேடினால் 

கிடைக்கும்.

 





//நான் கே.எஸ்.பேசறேன் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் கவித்துவ வரிகள் - Poetic lines penned by Dr.K.S.Subramanian// கீழே தரப்பட்டுள்ளன.

 என்னுடைய எளிய தமிழாக்கமும் தரப்பட்டுள் ளது

 

LET'S LIVE THE MOMENT

 Dr.K.S.Subramanian

 “One crowded hour of glorious life is worth an Age without a name.

” Why keep living for eternity?

Why miss the loving lilies for the distant stars?

Hungering for eternity can reduce life to an arid waste.

It can rob the moment of its meaning.

Let’s live the moment,

let eternity take care of itself.

Don’t waste away, analyzing life and its meaning all the time.

Life is far too precious for that.

Damn it, let us Live It.

Let’s lend value to the moment in our grasp.

Tomorrow is far away.

The past is dead.

Even the present is fleeting.

This moment is what we have

and

Let’s Live It!


இது என் தமிழாக்கம்

இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது

எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?

தொலைதூர நட்சத்திரங்களுக்காக அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?

அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை அதிவறண்டதாக வீணடித்துவிடும்

அதனால் ஒரு நொடியின் அர்த்தத்தை களவாடிவிட முடியும்

நொடியில் நீடுவாழ்வோம்

நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.

வாழ்வையும் அதன் பொருளையும்

எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்

வீணாகிவிடவேண்டாம்.

வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல

அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்

நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்

நாளை வெகுதொலைவிலிருக்கிறது

கடந்தகாலம் இறந்துவிட்டது.

நிகழ்காலமும்கூட

நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.

நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே

அதை

வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

 

PROGRESSION - ‘rishi’ (latha ramakrishnan)

 PROGRESSION

‘rishi’
(latha ramakrishnan)

When I set forth writing this poem,
my mind remains a vacuum….
With no theme, nor thought-process;
never resorted to ready resources,
seeking help from Google.
Can poem be prepared as a
‘two-minute Noodles?
Or manufactured as an use-and-throw
injection needle…?
Cock-a-doodle doodle.
Oh, damn the rhyme -
bells to chime –
Alas, there I go again….
Loss or Gain
this unfathomably dire need
for not ending the day without my say –
on what, know not.
Of course within the vacuum
Atom molecules are ever ready to
lead me into a cellar where
the pendulum of a Clock Timeless
keeps oscillating….
Tick…. Tock….. tick…. Tock….
Cock Hen Sheep Rhino –
When would they wage war
against humans?
who knows!
The atoms keep on bouncing in a leap
_ quantum or otherwise,
with all the possibilities of the
Particle and Wave,
save
the sea and ocean
under the grip of pollution.
Solution is not that easy
by merely changing the ‘p’ to ‘s’
and extricating an ‘L’.
Well, what says the Progress Report –
Pass or Fail
Post card or E-Mail….?
Life, an open-ended University
for endless debate; update.
At once a clean slate and a blackboard
full of code-words….
Worlds not world
‘in a smaller than nut shell’ included
in the realm of Atoms
without and within
shouldering the sins and boons of Adam and Eve
I go on….

பிறவிப்பயன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவிப்பயன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நான்கே வரிகளில்
அல்லது நாலிலொரு வரியில்
நான்கே வார்த்தைகளில்
அல்லது நாலிலொரு வார்த்தையில்
ஆங்கே யொரு காடு வெந்து தணிய
ஆங்காங்கே பெருமரநிழல்கள் காய் கனிகள்
புள்ளினங்கள் பூச்சி பொட்டுகள்
துளிர்க்க
புதுமழை பொழிய
பூமியெங்கும் நிரம்பிவழியும் பூக்களெங்கும்
பட்டுப்பூச்சிகளுக்கு மட்டுமின்றி கட்டுக்கடங்கா பிச்சிமனங்களுக்குமாய்
கொட்டிக்கிடக்கும் மகரந்தத்தூவல்கள்
எட்டுத்திக்குகளும் பரவும் நறுமணம்
உயிர்விரவி யுள் பரவும்
அவரவருக்காகுமவை
மனதின் அந்தர வெளியில் ரீங்கரிக்கக்
கேட்கும்
தருணங்களில் அரும்பி மலரும்
பிறவிப்பேரின்பம்
விரி வழியெங்கும் அடர்ந்திருக்கும்
அவரவருக்கான ஆரண்யங்களும்
அஞ்ஞாதவாசங்களும்.

கடை எடை கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கடை எடை கவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
பறவைகளாகப்
பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு புகைப்படத்தில் புத்தகங்களைப்
புதையலாகத்
தோண்டியெடுத்து அள்ளிவருகிறார்.

ஒரு காணொளியில் நூல்களுக்கு நடுவில்
கால்மேல் காலிட்டு அமர்ந்தபடி அவற்றிலொன்றை வருடித்தந்தவண்ணமிருக்கிறார்.

வேறொன்றில் ஒரு புத்தகத்தில்
காதலனுக்குரியதும் குழந்தைக்குரியதுமான
குத்துமதிப்பான மொத்த முத்தத்தை
பதித்துக்கொண்டிருக்கிறார்.

சற்றே மங்கலாய்த் தெரியும் காணொளியில்
அருள்பாலிக்கும் புன்னகை யொன்றால்
தன் வதனத்தைப் பொலியச்செய்தவாறு
குற்றேவல் புரியக் காத்திருப்பதா யொரு புத்தகத்தை
அத்தனை பிரியத்துடன் அணைத்துக்கொண்டிருக்கிறார்.

இன்னொரு காணொளியில் நூல்களைப்
பால்புட்டியிலிட்டு
உறிஞ்சியவாறிருக்கிறார்.

எல்லாப் புகைப்படங்களிலும் எல்லாக்
காணொளிகளிலும்
எல்லோரும் புடைசூழத் தன்னைத்தான் கடைவிரித்தபடியிருக்கு மவரை

கலவரத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது
கவிதை.

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கர்ணனும், ’கமர்கட்’ தானமும்

கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.
’கமர்கட்’ தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்தவர்கள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
கவி பாடி
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.
காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.
பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லை' என்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.
எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

நல்லுள்ளமும் நானும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நல்லுள்ளமும் நானும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மந்திரமாகும் சொல் மனதுள் செல்லச்செல்ல
கனத்துப் படிந்திருக்கும் அழுக்குப் படலமழிந்து
சுந்தரமாகும் உள்.
சுதந்திரம் கள்ளமில்லாப்
பேருவகை கொள்வதாம்.
தாறுமாறாய் இறுகியுள பாசிபடர் பாறைகள்
ஊறிய நீரில் நெகிழ்வதொரு
வந்தனையாய்
அந்தரத்தொலித்த அருள்வாக்காயவ்
வொரு சொல்
’எந்தரோ மகானுபாவுலு’வுக்கு எனைச்
சொந்தக்காரியாக்க,
உள்ளுறை யாங்கார
நிந்தனைகள் நீங்க,
இத்தருணம் மின்னும் இன்னுமின்னும்
பத்தரைமாற்றுத் துலக்கம் நாடும்
நல்லுள்ளம் நானாக
காடாறு மாதம் நாடாறு மாதம்
காடு நாடாகும் நாடு காடாகும்
ஆறாக் காட்சிமயக்கம் கவினுறு வாழ்வாக
*கவி பிரம்மராஜனின்
’வெல்லும் வெல்லுமென நிற்கிறேன்
என் சொல்லும் சொல்’
புவிமிசை இன்று மென்றும்
தீராக் கவிதையாக….

.....................................................................................................
*கவிஞர் பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் (1988) தொகுப் பில் இடம்பெறும் சொல்லும் சொல் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் இறுதிவரி கள் இவை. 'என்னுடைய சொல்லும் சொல், 'என்ன சொல்லலாகும் சொல் என ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தசாத்தியத்தைக் கொண்டி ருப்பது. கவிஞர் பிரம்மராஜனை ஒரு மொழிபெயர்ப்பாளராக மட்டும் அங்கீ கரித்து அவருடைய கவிதை களைப் புறந்தள்ளுபவர்களும், காலாவதியான கவிஞர் என்று அவரைப் பழித்துரைப்பவர்களும் பரிதாபத்திற்குரியவர்களே.