LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 8, 2022

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்! - நான் கே.எஸ். பேசறேன்.... நூல் இப்போது மின் - நூலாக

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்!

நான் கே.எஸ். பேசறேன்.... நூல் 

இப்போது மின் - நூலாக


 இரண்டு வருடங்களுக்கு முன்பு 24 அக்டோபர் 2020இல் டாக்டட் கே.எஸ்.சுப்பிரமணியன் அமரரானார்.

 தமிழின் குறிப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தாள ரும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாக்கங்கள், சமகால தமிழ்க்கவிதைகள், பாரதியார் கவிதைகளில் பல என நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.

 ஆங்கிலத்திலிருந்து தமிழில் டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற படைப்பு CODE NAME GODஐ தமிழில் மொழிபெயர்த்திருக் கிறார்(கவிதா பதிப்பக வெளியீடு)

ஆங்கிலத்தில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக் கிறார்.

சிறந்த மனிதநேயவாதி. மூன்றாமவர் அறியா மல் அவர் செய்த உதவிகள் நிறைய நிறைய.

 அவருடைய நினைவைப் போற்றும் வகையில் கடந்த வருடம் புதுப்புனல் சார்பில் ‘நான் கே.எஸ்.பேசறேன்’ என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணி யனின் மொழிபெயர்ப்புகள் சில, தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் சில, அவரை நினைவுகூர்ந்து அவருடைய மகன், மகள், நண்பர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் சில இந்த நூலில் இடம்பெற்றுள் ளன.

 ’நான் கே.எஸ். பேசறேன் என்ற இந்த நூல் இப்போது அமேஸான் – கிண்டில் மின் – நூலாக  - தமிழ்க்கட்டுரைகள் தனியாகவும், ஆங்கில எழுத்தாக்கங்கள் தனியாகவும் என இரண்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளது.

ஆங்கிலம்தமிழ் இருமொழியிலுமான நூல் என்பதால் தமிழ் அச்சுருக்கள் சரியாகப் பதியவில்லை.

 புதுப்புனல் பதிப்பக நண்பர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுஎனக்குத் தெரிந்த அளவில் மின் -நூல்களைச் செய்திருக்கிறேன்.

 Amazon.in இல் Dr.K.S.Subramanian என்று தேடினால் 

கிடைக்கும்.

 





//நான் கே.எஸ்.பேசறேன் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் கவித்துவ வரிகள் - Poetic lines penned by Dr.K.S.Subramanian// கீழே தரப்பட்டுள்ளன.

 என்னுடைய எளிய தமிழாக்கமும் தரப்பட்டுள் ளது

 

LET'S LIVE THE MOMENT

 Dr.K.S.Subramanian

 “One crowded hour of glorious life is worth an Age without a name.

” Why keep living for eternity?

Why miss the loving lilies for the distant stars?

Hungering for eternity can reduce life to an arid waste.

It can rob the moment of its meaning.

Let’s live the moment,

let eternity take care of itself.

Don’t waste away, analyzing life and its meaning all the time.

Life is far too precious for that.

Damn it, let us Live It.

Let’s lend value to the moment in our grasp.

Tomorrow is far away.

The past is dead.

Even the present is fleeting.

This moment is what we have

and

Let’s Live It!


இது என் தமிழாக்கம்

இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது

எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?

தொலைதூர நட்சத்திரங்களுக்காக அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?

அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை அதிவறண்டதாக வீணடித்துவிடும்

அதனால் ஒரு நொடியின் அர்த்தத்தை களவாடிவிட முடியும்

நொடியில் நீடுவாழ்வோம்

நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.

வாழ்வையும் அதன் பொருளையும்

எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்

வீணாகிவிடவேண்டாம்.

வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல

அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்

நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்

நாளை வெகுதொலைவிலிருக்கிறது

கடந்தகாலம் இறந்துவிட்டது.

நிகழ்காலமும்கூட

நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.

நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே

அதை

வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

 

No comments:

Post a Comment