LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, June 24, 2018

வீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


வீதியுலா
                                     ரிஷி
                                                            (
லதா ராமகிருஷ்ணன்)
                                     (*24.6.2018 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.
அது மண ஊர்வலமா பிண ஊர்வலமாதெரிவதில்லை.
சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.
பலசமயங்களில் இல்லை.
இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில்வாராயென் தோழி வாராயோவை அடுத்து வந்துவிடுகிறது
போனால் போகட்டும் போடா’……
ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;
நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்
உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?
அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _
மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……
ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….
தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி
மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?
ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
நான் நகர்ந்துகொண்டிருப்பது
நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று 
நிச்சயமாகத் தெரியாத நிலை.
உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்


Tuesday, June 19, 2018

பிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரதி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



”எதற்கு ?

வேண்டாம் _

போதும்.”

உறவு முறிவின் அறுதிப்புள்ளியாய் எழுத்தாளர் பிரதி;

கலவியின்ப க் கிறக்கச்சிணுங்கலாய் இருபதாயிரம் மைல்களுக்கப்பால் சுயமைதுனஞ்செய்யும் வாசகப்பிரதி;

கண்சிமிட்டிப் புன்சிரிக்கிறது கவிதை கன்னங்களில் நீர் படிய

Wednesday, June 13, 2018

Saturday, June 9, 2018

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடுஇல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள்
லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த
தோழி நீலா அல்லது லீலா.



நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப்
பகையாளிபோல் பார்த்தபடி
பார்த்தே தீரவேண்டும்;
நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்-
உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்என்றாள்.



பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில்
கிளப் டான்ஸர்(?) கணக்காய் அத்தனை குட்டைப்பாவாடையில்
அண்ணனோடு ஜோதிகாத் தங்கையைப் பார்த்ததில் உண்டான பீதியில்
அரங்கில் இடியிடித்து எரிமலை வெடிப்பதாய் பரவிய
ஒலியின் வன்முறையில் பலவீனமாகிப்போன மனதிற்கு
திரும்பவும் தியேட்டருக்குள் நுழைய தைரியம் வரவில்லை” யென்றேன்.



”பெண்ணின் நடை யுடை பாவனை குறித்து உனக்கெல்லாம்
எத்தனை மனத்தடை” என்று பழித்தாள்.
நான் சொல்லிக்கொண்டிருப்பது மனத்தடையின்
இன்னொரு பரிமாணம் பற்றி என்பதை
நன்றாகவேஅறிந்திருந்தும் ஏதுமறியாதவள் போல பேசுபவளிடம்
மேலும் என்ன சொல்லவிருக்கிறது…. ?
நாளும் வாளாவிருப்பதே இங்கே சாலச் சிறந்தது…..



அதையும் செய்யவிடாமல்
அங்கே விற்றுக்கொண்டிருந்த இளநீரைத் தாண்டிச் சென்று
கோலா வாங்கிக் கொடுத்தபடி _
”அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோள்களிலிருந்தெல்லாம்
வந்திறங்கிக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களில் பேர்பாதிக்கும் மேல்
பாரியஎழுத்தாளர்கள்பாரியஎழுத்தாளர்கள் தெரியுமா”
என்று கூறிச் சென்றாள் மாலா அல்லது ஷீலா.



காரியமாய் அன்றி மனதார அப்படியேதேனுமொரு நூல்
அவர்களுடைய மேடைகளில் என்றைக்கேனும் மரியாதை செய்யப்பட்டிருக்குமானால்…….என்று
முனகும் மனதின் முட்டாள் வாயை முக்கியமாய் அடைத்தாகவேண்டும்….



அகண்ட திரையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால், இருள் மூலைகளில்
இறைந்துகிடக்கின்றன ஏராளமான இலக்கியப் படைப்புகள்
சிறிய அறிமுகமற்று, ஒரு வரி விமர்சனமுமற்று
சக படைப்பாளிகளாலும் சீந்தப்படாமல் _
வீசியெறியப்பட்ட மீந்த சோற்றுப்பருக்கைகளாய்




விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில்
 உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும்
புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை
வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம்
ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு
வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்
கொண்டவாறு சிலபலர்…..


பெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க
அல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள.


இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம்
இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும்
கால்களின் வளைநகங்கள்
கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும்,
கொடிய விடந்தோய்ந்ததுமாய்….


வரலாற்றுச்  சின்னமொன்றின் வயிற்றுப்பகுதியில்
படிந்திருக்கும்  சில ஒட்டுண்ணிகள்,
வெவ்வேறு ஊடகங்களில்
வாகாய்த் தெரியும்படியாக…….


அன்புமழையில் குளிப்பாட்டுவதாய்
ஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து
சுரவேக உளறல்களையெல்லாம்
பொன்மொழிக்கையேடுகளாக்கி
பெரிய பெரிய அச்சுருக்களில்
சமூக வெளிகளெங்கும்
அமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து
வெற்றியாளருக்கு நெட்டி முறித்து
திருஷ்டி கழித்து
காலின் கீழ் குழிபறிப்பவைகளுமாக
விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கின்றன  
வேறு சில.


வருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்
கதை கட்டுரை கவிதைப் போட்டிகளில்
வெற்றிபெறுபவர்களுக்கான
பரிசுகளைத் தயாரிக்கச் சொல்லி
முன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்
சின்னதும் பெரியதுமாய் அங்கே
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளின்
மங்கிக்கொண்டே போகும் தங்கமுலாம்…….
விற்பனையாகாமலே தங்கிவிட்ட
விதவிதமான வடிவங்களிலான
பதக்கங்கள் ஷீல்டுகளைப்
பார்க்கநேரும் தருணங்களில்
பெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்
வீசும் தென்றலினூடாய் வெகுதொலைவில்
செல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே
வெற்றியாளர்களைச் சேர்த்தணைத்து
இன்னும் இறுக்கமாய்ப்பற்றிக்கொள்வதில்
முற்றிலுமாய்த் தம்மை யிழந்து
மும்முரமாய், மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்
மங்கலாய்த் தெரிகிறார்கள்.






WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 5


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 4


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 3


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 2


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 1




Thursday, June 7, 2018

தீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தீராத் தனிமொழி சீதையின்……

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


அசோகவனத்தில் என்னை சிறைவைத்திருந்தவருக்காக
ஆயிரம் வழக்குரைஞர்கள், அத்தனை வாய்தாக்கள்,
குறுக்குவிசாரணைகள்பொய்வாக்குமூலங்கள்பிறழ்சாட்சிகள்
அன்றிலிருந்து இன்றுவரை…..

 அதெப்படி மனம் வந்ததோ தெரியவில்லை _
என் மணாளனையும் மிருகத்தனமாய் என்னைக் கடத்திக்கொண்டுபோனவனையும்
தாங்களாகவே தராசிலிட்டு
பின்னவனே பேராண்மையாளன் என்று நான் எண்ணியதாகக்கூட
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய்ச் சொன்னவர் பலபேர்…..

 அவர்களில் பெண்ணியவாதிகளும் கூட இருந்ததைக் கண்டு
கண்கலங்கிக் கருத்தழிந்த காலம் நிழலாய்ப் பின் தொடரும்…..

கனலுக்குள் திரும்பத்திரும்ப இன்னும் எத்தனை காலம்
இறங்கிக்கொண்டேயிருக்கவேண்டுமோ…..

சூர்ப்பனகை மதிப்பழிக்கப்பட்டதற்கு பதிலடியாய் நேர்ந்தது இது
என்று தீர ஆராய்ந்து பேசுவதாக
திரும்பத்திரும்பச் சொல்பவர்கள் உண்டு.

 நீதிமான்களேநியாயவான்களே
அடிக்கு அடி அசோகவனம் வெருட்ட, அவமானம் உயிர் உருக்க
தினம் சுருக்கிட்டுச் செத்த மனம் _
ஐயோ என்னவொரு கனம்….

 சுமந்தவாறு வழியேகிக்கொண்டிருக்கும்
என் எளிய பிரார்த்தனை இதுவே.
உங்கள் வீட்டுப்பெண்கள் எல்லோரும் பத்திரமாயிருக்கட்டும்.
வரித்தவனோடு வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை வாய்க்கட்டும் அவர்களுக்கு.

துஞ்சாமல் நானங்கே துவண்டிருந்த அவலத்தை 
எண்ணுந்தோறும்
நெஞ்சு பதறும் அதிரும் சிதறும் கதறும்.

என் ஆறா ரணத்தின் வலி சொல்லுக்கப்பால் 
வெகுதொலைவில்.

ஆன்றோரே சான்றோரே -
உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்  _

அன்றாடம் என்னை வரிகளில் கடைபரப்பி
கூறுபோட்டு கூவிக்கூவி விற்காதீர்கள்.