ஊருக்கு இளைத்தவர்கள்
சிலர் விலக்கப்படுவர்;
சிலர் புதிதாகச் சேருவார்கள்;
சிலர் சேர்க்கப்படுவார்கள்.
என்றபோதும் _
உண்மையாகவே ஊருக்கு இளைத்தவர்கள்
என்று
எப்போதுமே சிலர் உண்டு.
இந்தப் பிரிவில்
இளைத்தவர்கள் என்ற பெயரில்
கொழுத்தவர்கள் சிலரும்
இடம்பிடித்துக்கொள்வார்கள்.
பின்
உண்மையான இளைத்தவர்களை
கொழுத்தவர்களாக்கிக் காட்டுவதற்காக
சளைக்காமல் களைக்காமல்
உத்திகளை வகுப்பார்கள்.
சித்தரிப்பார்கள் சில
இறந்தகாலங்களை.
எனில்,
உண்மையான ஊருக்கு இளைத்தவர்கள்
எகத்தாளத்திற்கும் எட்டியுதைத்தலுக்கும் வாகான
இளைத்தவர்களாகவே _
ஒருகாலத்தில் ’ஜோல்னாப்பை’யர்களாகக் காண்பிக்கப்பட்ட படைப்பாளிகள்
இன்றும் ஜோல்னாப்பையர்களாகவே இருப்பதுபோல்.

No comments:
Post a Comment