LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 1, 2021

என்னை பாதித்த சில புத்தகங்கள் _ பத்மினி கோபாலன் - 17.6.2021 //

 என்னை பாதித்த சில புத்தகங்கள்

//இது பத்மினி கோபாலனின் பதிவு - 17.6.2021 //


\




• ஒரு பதினேழு வயதில் நான் படித்த மஹாத்மா காந்தியின் My Experiments with Truth என்னை சிந்திக்க வைத்தது , நாம் இதில் ஒருசதவிகித மாவது முயற்சி செய்யலாமே என்று.
• ஒரு முப்பது வயதில் நான் படித்த Conquest of Happiness by Bertrand Russell எனக்குப் புரிய வைத்தது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு த்தேவை என்ன என்பதை.
• Sartre யின் Existentialism ,a popular version என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு , self pity க்கு இடமே இல்லை என்பதை உணர்த்தியது.
• வயதானபின் படித்தது The Miracle of Mindfulness.by Thich Nhat Hanh .அதுதான் சரியான வாழ்க்கை முறை என்று புரிகிறது.

• ராமாயணமும் ,கர்னாடக ஸங்கீத மும் மனதை ஒரு மேலான நிலைக்கு இட்டுச் செல்கிறது.

• அரசியல் செய்திகள் மனதில் கலவரத்தை ஏற்படுத்துகிறது, உபயோகமில்லாமல்.

• பகவத் கீதையில் ஸ்வ தர்மத்தை மட்டுமே செய் என்று சொன்னது சரிதான் என்று தோன்றியது.

[[*நான் மிகவும் மதிக்கும் பத்மினி மேடம் தன்னை பாதித்த சில புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட் டதை இங்கே பகிரத் தோன்றியது .
சில பேர் சகட்டுமேனிக்கு சில உலகத்தரம் வாய்ந்த நூல்களின்ன் பெயர்களைக் குறிப்பிடு வார்கள் _ தாம்மை அறிவுசாலிகளாகக் காண்பித்துக்கொள்ள. ஆனால், பத்மினி மேடம் அப்படியல்ல. அதனாலேயே அவரோடு கருத்துமுரண் ஏற்பட்டாலும் அவருடைய கருத்துகளை நான் என்றுமே மதித்துக் கேட்பேன். (*முகநூலிலும் இருக்கிறார்.

[[ஸ்வதர்மம் பற்றி ஒரு சிறு குறிப்பு தருவது நல்லது என்று தோன்றுகிறது. கூகுளில் படித்ததுதான் - லதா ராமகிருஷ்ணன்

ஸ்வதர்மம் என்றால் என்ன?
ஸ்வ = சுய, சொந்த
தர்ம = தர்மம் என்றால் செய்யவேண்டிய கடமை.
நாம் இந்த பூமியில் பிறக்கும் போதே நமக்கான கடமையும் பிறந்து விடுகிறது. நாம் செய்ய வேண்டும் என்று சில கடமைகள் காத்து இருக்கின்றன. அந்த கடமைகள் நமக்கு முன்னால் பிறந்து நம் வருகைக்காக காத்து இருக்கும் என்று சொல்வார்கள்.
நம் கடமை அல்லது நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்று எப்படி அறிந்து கொள்வது ?
- பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது.
- புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியாது.
- பெருமைக்காக, மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது ஸ்வதர்மம் இல்லை.
- பொருளுக்காக , வயிற்று பிழைப்புகாக செய்வது ஸ்வதர்மம் இல்லை.
பின் எது தான் ஸ்வதர்மம்?
எது உங்களுக்கு இயல்பாக வருகிறதோ, எதை செய்யவில்லை என்றால் உங்களுக்கு சங்கடமாக இருக்குமோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.
சற்று விரிவாக பார்ப்போம்.
நம் வாழ்வில் நாம் எடுக்கும் முதல் மிகப் பெரிய முடிவு, என்ன படிப்பது என்பது.
அந்த முடிவை நாம் எப்படி எடுக்கிறோம் ?
பெரும்பாலானோரின் வாழ்வில் பெற்றோர் முடிவு செய்து விடுவார்கள். இல்லை என்றால் நண்பர்கள் முடிவு செய்கிறார்கள்.
அது தவறு. உங்களுக்கு எது பிடிக்குமோ, எதை செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகுமோ, எதை நீங்கள் உங்களை மறந்து செய்வீர்களோ அது தான் உங்கள் ஸ்வதர்மம்.
"எனக்கு psychology படிக்க ஆசை. ஆனால், பெற்றோர் இன்ஜினியரிங் படிக்கச் சொன்னார்கள் எனவே இன்ஜினியரிங் படிக்கிறேன் "
இது ஸ்வதர்மம் இல்லை.
உங்கள் ஸ்வதர்மம் உங்களை அழைத்துக் கொண்டே இருக்கும். அதை செய்யாவிட்டால் உங்களுக்கு மனதில் ஒரு சலனம், ஒரு குழப்பம், ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.]]

No comments:

Post a Comment