LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 21, 2025

பேச்சுரிமை குறித்து இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்வது....

 










இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியான பேச்சுரிமை, வெளிப்பாட்டுரிமை குறீத்து 19 சட்டவிதியின் கீழ் தரப் பட்டுள்ளவை பின்வருமாறு:

இவற்றைப் படிக்கும் போது தெரியவரும் முக்கியமான இரண்டு விஷயங்கள் - பேச்சுரிமை, வெளிப்பாட்டுரிமை யெல்லாம் இந்தியாவில் இந்திய மக்களுக்கே. வெளி நாட்டவருக்கு - தனிநபர் களோ, நிறுவனங்களோ - இல்லை.
The main elements of right to freedom of speech and expression are as under:
1. This right is available only to a citizen of India and not to foreign nationals.
2. The freedom of speech under Article 19(1) (a) includes the right to express one's views and opinions at any issue through any medium, e.g. by words of mouth, writing, printing, picture, film, movie etc.
// The Right To Freedom of Speech and Expression Under The Article 19 With The Help of Decided Cases. What Are The Grounds on Which This Freedom Could Be Restricted//
Article 19(1) (a) of the Constitution of India states that, all citizens shall have the right to freedom of speech and expression. The philosophy behind this Article lies in the Preamble of the Constitution, where a solemn resolve is made to secure to all its citizen, liberty of thought and expression. The exercise of this right is, however, subject to reasonable restrictions for certain purposes being imposed under Article 19(2) of the Constitution of India.
இந்தியக் குடிமக்கள் அளவிலும் இந்த உரிமைகள் சில சூழல்களில் கட்டுப்படுத்தப்பட முடியும்.
The Grounds on Which This Freedom Could Be Restricted
Clause (2) of Article 19 of the Indian constitution imposes certain restrictions on free speech under following heads:
I. Security Of The State,
II. Friendly Relations With Foreign States
III. Public Order,
IV. Decency And Morality,
V. Contempt Of Court,
VI. Defamation,
VII. Incitement To An Offence, And
VIII. Sovereignty And Integrity Of India.
இதேவிதமான நிலவரம் தான் உலகின் பெரும்பாலான நாடுகளில். முழுமுற்றான உரிமையோ, சுதந்திரமோ எங்கும் கிடையாது. இருக்க வழியில்லை.
3. This right is, however, not absolute and it allows Government to frame laws to impose reasonable restrictions in the interest of sovereignty and integrity of India, security of the state, friendly relations with foreign states, public order, decency and morality and contempt of court, defamation and incitement to an offence.
4. This restriction on the freedom of speech of any citizen may be imposed as much by an action of the State as by its inaction. Thus, failure on the part of the State to guarantee to all its citizens the fundamental right to freedom of speech and expression would also constitute a violation of Article 19(1)(a).

Share

A POEM BY KOSINRA

 A POEM BY

KOSINRA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


WOMEN TALKING TO TREES
Three women
Standing under a tree
Were pointing at the tree and talking
Of them one woman stretches her finger
And saying something laughs
I watch them from a little distance away.
I could see nothing.
Leaves were swaying
No sign of nests
There was no bird sitting
Their chitchatting went on unabated
Does the tree conceal a secret
Does it appear differently to
men and women
does it appear differently to adolescents
and married ones
are they watching the tree
or the tree relishing the sight of them?
While conversing
Why does one woman blush?

மரங்களிடம் பேசும் பெண்கள்

மூன்று பெண்கள்
மரத்தினடியில் நின்றுக்கொண்டு
மரத்தைக்காட்டி பேசுகிறார்கள்
அதிலொரு பெண் விரல் நீட்டி
ஏதோ சொல்லி சிரிக்கின்றாள்
சற்று தூரத்திலிருந்து பார்க்கின்றேன்
எதுவும் தென்படவில்லை
இலைகள் அசைந்துக்கொண்டிருந்தது
கூடுகள் இருந்தது போலவும் தெரிய வில்லை
பறவை எதுவும் அமர்ந்திருக்கவில்லை
பேச்சு குறைந்திடவில்லை
மரம் ரகசியத்தை மறைக்கின்றதா
பெண்களுக்கு ஒரு மாதிரியும்
ஆண்களுக்கொரு மாதிரியும் தெரிகிறதா
விடலைப் பையன்களுக்கு ஒரு மாதிரியும்
மணமானவர்களுக்கு ஒரு மாதிரியும் தெரிகிறதா
மரத்தை அவர்கள் பார்க்கிறார்களா
மரம் அவர்களைப்பார்த்து ரசிக்கின்றதா
மரத்திற்கும் பெண்களுக்குமான
உரையாடலில்
ஒரு பெண் ஏன் வெட்கப்படுகிறாள்


Thursday, February 20, 2025

யாதுமாகி நின்றாய்….. 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 யாதுமாகி நின்றாய்…..

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கனவுகள் குமுறல்கள் கண்ணீர் கோபம் தாபம்
கனிவு துணிவு உணர்வு அறிவு எண்ணம் செயல்
எல்லாவற்றிற்கும் வடிவம் தந்து
எத்தனையோ வடிகால்கள் அமைத்துத் தந்து
நம்மை நாம் வெளிப்படுத்த
நம்மொத்தவர்களோடு நல்லுறவாட
நேற்றும் இன்றும் நாளையும்
நற்பாலம் கட்டித்தந்து
நம்முள் கலந்திருக்கும்
தாய்மொழியாம் தமிழை
காற்றென்பதோ
காலத்தின் ஊற்றென்பதோ
உலகென்பதோ
உயிர்த்துடிப்பென்பதோ….
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ஈடாகுமோ தமிழின் வழித்துணைக்கு!


கண்மணி தமிழ்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்மணி தமிழ்!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும்
வள்ளன்மை
மழை, காற்று, சூரியனுக்கு மட்டுமா?
நிற்க நிழல் தரும்; நிழலெனக் கூடவரும்
நட்பாகச் சொல்லித்தரும்
நாலும் மேலும் நாளும் தந்து
இன்துணையாகும்
அன்புத்தமிழ்
என்றும் நம்மைப் புரந்துகாக்கும்

அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்புத் தமிழுக்கு என்றுமான நன்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.
கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.
அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.
தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.
நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....
தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.
செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.
அவரவர் அன்பு அவரவருக்கு.
அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.
அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

பாரதியாரின் கவிதை வரிகள்

 பாரதியாரின் கவிதை வரிகள்



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்பரவும்வகை செய்தல் வேண்டும்.

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழி நாள்

 


தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன் கவிதை

 தமிழுக்கும் அமுதென்று பேர்

பாரதிதாசன் கவிதை





தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
பாரதிதாசன்



பொருள்பெயர்த்தல் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பொருள்பெயர்த்தல்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நல்லதோர் நாலுவரி்கவிதையென்றார் ஒருவர்.
கேட்டு
நாலுவரியே கவிதையென்று
சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு
எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.
நாலுவரிகள் வரைந்து
நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.
சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர்
நாலு வரி என்றெழுதி
பூர்த்திசெய்தார் கவிதையை.

படைப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 படைப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
'புத்தகம் எழுதினால் போதாது
அதை ‘ப்ரமோட்’ செய்யவேண்டும்'
என்றார்கள்.
’அல்டாப்பு’ப் புத்தகத்தை
’அல்டிமேட்’ இலக்கியமாகக் காட்டி
’ப்ரமோட்’ செய்ய
ஆயிரம் உத்திகளோடு அத்தனை பேர்
இயங்கிக்கொண்டிருக்க
அதையும் தாண்டி எதையாவது புதிதாகச்
செய்துவிட முடியுமா என்ன?’
கேள்வியில் கிளர்ந்த புன்னகையோடு
தனக்குத் தெரிந்த
எப்போதுமான ஒரே எளிய வழியில்
தன் படைப்பை ஒரு புட்டிக்குள் திணித்து
காலசமுத்திரத்தில் மிதக்கவிட்டு
தன் வழியே கிளம்பிச்செல்கிறாள்!