LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 26, 2019

கட்டண உரை - லதா ராமகிருஷ்ணன்

கட்டண உரை

லதா ராமகிருஷ்ணன்




இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தியவர்கள், வருபவர்கள் முன்கூட்டியே பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். அதுவே எரிச்சலூட்டியது.

அந்தக் குறிப்புக்கான எதிர்ப்புணர்வின் விளைவாகவே ஆர்வத்தோடு வந்திருக்கக் கூடிய சிலபலர் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

இலக்கியவாதிகளுக்கு உரிய சன்மானம் தந்து மரியாதை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு இப்படிச் செய்தால் ஆர்வமுள்ள மாணாக்கர்கள், 300 ரூபாயில் இரண்டுநாட்கள் வீட்டுச்செலவை சமாளிக்க முடியும் என்ற நிலையுள்ள எளிய இலக்கிய ஆர்வலர்கள் போகமுடியாத நிலை வரும்.


பணமுடையோர் - இலக்கியம் தெரிகிறதோ இல்லையோ பந்தாவாக வந்து உட்கார்ந்து கொள்வது அதிகம் நடக்கும். காட்சிப்பொருளாகப் புத்தகங்களை வாங்கி நிரப்பும் வழக்கமுடைய நிறைய திரைப்படவாசிகள், பெருமுதலாளி கள் இருக்கைகளை ஆக்கிரமிப்பார்கள்

இத்தனை பேர் ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக வருகை தரலாம்என்பது போன்ற சலுகைகள் தரப்பட்டால் அது வாசகர்களை எத்தனை அவமானமாக உணரச் செய்யும்.

இந்த கட்டண முறை எழுத்தாளருக்கு வேண்டுமா னால் ஏதோ ஒருவகை ஒளிவட்டத்தைத் தருவதாக இருக்கலாம். உண்மையான வாசகர்களை இது மதிப்பழிக்கும் செயலே.

இலக்கியவெளியிலாவது இதுநாள்வரை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு வெளிப்படையாகவாவது தெரியாமலிருந்தது. இந்தவிதமான கட்டண உரை முறையில் அந்த சமத்துவம் அழிந்துவிடும்

அவரவர்வசதிக்கு ஏற்றார்ப்போல் கட்டணம் நிர்ணயித்து ஒருசிலர் கூடி இலக்கியக்காப்பாளராக இயங்கும் போக்கு அதிகரிக்கும்

எந்த இலக்கியவாதியின் உரைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவரே ஆகச்சிறந்த படைப்பாளி என்பதான ஒரு பொய்க்கணிப்பு உருவாகும். புதிய அளவுகோல்கள் புழக்கத்திற்கு வரும்.


கட்டண உரை
கண்டனத்திற்குரியது.


இதற்கான எதிர்வினைகள்
போகப்போக கண்டிப்பாக ஏற்படும்




பிழைப்பு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிழைப்பு

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)



ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க எங்களை விட்டால் யார்?”
கோழைகளல்ல நாங்கள் மேடைதோறும் தூக்கவில்லையா வாள்?”
வாழையடிவாழையாக எங்களுக்கே தானே உங்கள் வாக்குஎன்பார்
மட்டந்தட்டித் தீர்க்கவேண்டிய எதிர்க்கட்சித் தலைவரை
கட்டங்கட்டிக் கச்சிதமாய்ப் போட்டுத்தாக்கிவிட்டு
அவரவர் கட்சி கொடுத்திருக்கும் இரண்டு லட்சம் அல்லது இருபது லட்சம் விலையுள்ள காரில் கட்டுசெட்டாக ஏறிக்கொண்டு
சுவர்களிலெல்லாம் முழங்கிக்கொண்டிருக்கும் தத்தம் தானைத்தலைவர்களின்
திருவுருவப்படங்களை தரிசித்தபடியே
கவரைகவனமாகத் திறந்து உள்ளிருக்கும் ரொக்கத்தைத் தம் பைக்குள் திணித்தபின்
மறவாமல் நாளை மகனுக்கொரு கட்சிப்பதவி கிடைக்க
அந்த ஆளைப் பார்க்கப் போகவேண்டும்;
மயிலாப்பூரின் மையப்பகுதியிலுள்ள ஏக்கராக்களை மேற்பார்வையிட வேண்டும்
வளைத்துப்போட வாகானதா என்று;
களைப்பாகத்தான் இருக்கும் விமானத்தில் பறந்தாலும்…..
அதையெல்லாம் பார்த்தால் முடியுமா _
வறுத்த முந்திரியை வழிநீள வாயில்போட்டுக் கொறித்துக்கொண்டே போகவேண்டியதுதான்
என்று ஆகவேண்டிய மக்கள்நலத்திட்டங்களை
மனதுக்குள் பட்டியலிடத் தொடங்குவார்.

(*(பின்குறிப்பு: இலக்கியவாதி விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன?)


·         

பொருள்பெயர்த்தல் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


பொருள்பெயர்த்தல்
_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

நல்லதோர் நாலுவரி்கவிதையென்றார் ஒருவர்
கேட்டு
நாலுவரியே கவிதையென்று
சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு
எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.
நாலுவரிகள் வரைந்து 
நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.
சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இன்னொருவர்
நாலு வரி என்றெழுதி 
பூர்த்திசெய்தார் கவிதையை.

கண்மணி தமிழ்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கண்மணி தமிழ்!
 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் 
வள்ளன்மை
மழை, காற்று, சூரியனுக்கு மட்டுமா?
நிற்க நிழல் தரும்; நிழலெனக் கூடவரும்
நட்பாகச் சொல்லித்தரும்
நாலும் மேலும் நாளும் தந்து
இன்துணையாகும்
அன்புத்தமிழ்
என்றும் நம்மைப் புரந்துகாக்கும்


v