LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label சொல்லவேண்டிய சில..... _ லதா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label சொல்லவேண்டிய சில..... _ லதா ராமகிருஷ்ணன். Show all posts

Thursday, October 9, 2025

சொல்லவேண்டிய சில..... (படைப்பாளியும் அவரது படைப்புகளும்)_ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லவேண்டிய சில.....

   (படைப்பாளியும் அவரது படைப்புகளும்)

_ லதா ராமகிருஷ்ணன்

படைப்பாளி தன் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மனித குலத்திற்குச் சொந்தமானவர்.

வாழுங்காலத்தே அவர் உரிய அளவாக அறியப்படாதிருக்கலாம். அவருடைய படைப்புகள் வருவாய் ஈட்டித்தராமலிருந்திருக்க லாம். பல படைப்பாளிகளின் எழுத்துகளை அவர்களுடைய குடும்பத்தார் படிப்பதோ பொருட்படுத்துவதோ கிடையாது. பிழைக்கத் தெரியாத வர்கள் என்றோ, உதவாக்கரைகள் என்றோ தான் தரமான படைப்பாளிகளாக இருந்தாலும் தங்கள் படைப்பு களின் மூலம் பொருள் ஈட்டவியலாதவர்களைப் பலரும் நினைக்கிறார்கள். பிரதானமாக, குடும்பத்தார்.

பொருள் பிரதான வாழ்க்கையிதில் பணத்தைத் தாண்டிய, அதற்கும் மேலான ஆனந்தத்தை ஒரு நல்ல கவிதை கொடுக்கும் என்றால் நாடக பாணியில் உளறுவதாக நம்மைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிப்பவர்களும், ‘நட்டு கழண்ட கேஸ்’ என்று முத்திரை குத்துபவர்களுமே அதிகம்.

பல நேரங்களில் உறவுகள் புறக்கணித்த நிலையில் படைப்பாளி களை அவர்கள் மேல் அன்பும் அவர்கள் எழுத்தில் மரியாதையும் வைத்திருக்கும் சக எழுத்தாளர் களும், நட்பினரும் பதிப்பகத் தாரும் வாசகர்களுமே புரந்து காத்து அவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமும் உதவியும் அளிக்கிறார்கள்.

ஆனால், மாதா மாதம் லட்ச ரூபாய் சம்பாதித்தும் அதில் ஆயிரம் ரூபாய் கூட படைப்பாளிக்கு அனுப்பிவைக்க மனமில்லாத அவரது சட்டப்படியான குடும்பத்தார், வாரிசுகள், உறவுகள் படைப்பாளி இறந்துவிட்டால் உடனே அவருடைய படைப்புகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். அதுவரை படைப்பாளியைப் புரந்து காத்தவர்கள் அந்நியமாக்கப்படுகிறார்கள்; புறந்தள்ளப்படுகிறார் கள்.

பல நேரங்களில் படைப்பாளி இறந்த பின் அவருடைய படைப்பு களிலிருந்து கிடைக்கக்கூடிய பணமொன்றே குறியாக, வாழும் நாளில் அவரை அவமரியாதை செய்த பதிப்பகத்திடமே அவரு டைய படைப்புகளைக் கொடுத்து வெளியிடச் செய்வதும் நடக்கிறது. இது சம்பந்தப்பட்ட படைப்பாளியை அவமரியாதை செய்வது.

இந்த அவலநிலையிலிருந்து தானும் விடுபட்டு வாழும் நாளில் தன்னைக் காத்தவர்களையும் விடுவிக்க படைப்பாளிகள் வாழுங் காலத்திலேயே தங்கள் படைப்புகள் குறித்த உயிலை எழுதி வைத்து விட வேண்டும்.

ஒரு படைப்பாளியின் எழுத்து அவர் சுயமாய் சம்பாதித்த சொத்து. அதை அவர் மதிக்கும், அவரை மதிக்கும், புரந்துகாக்கும் யாருக்கும் தர அவருக்கு உரிமையுண்டு