LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள் - லதா ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள் - லதா ராமகிருஷ்ணன். Show all posts

Thursday, July 19, 2018

அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள் - லதா ராமகிருஷ்ணன்

அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள்  
 லதா ராமகிருஷ்ணன்





வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்பார்கள்.

இங்கே காது கேளாத வாய் பேசவியலாத சிறுமியொருத்தியை systematic ஆக மாதக்கணக்கில் சீரழித்த கொடூரன்களை அடித்தட்டு ஆண்களின் பிரதிகளாக்கி, பிரதிநிதிகளாக்கி, அவர்கள் சார்பில் வாதாடும் வழக்குரை ஞர்களாக, ஆளாளுக்கு உளவிய லாளர்களாகி சில எழுத்துலகப் பெருந்தகை யாளர்கள், பேரறிவுசாலிகள், ஈடு இணையற்ற மனிதநேயவாதிகள் முன்வைக்கும் சில கருத்துகளைப் படிக்கும்போது அந்தக் குழந்தையை அதன் ரணவலியை, கையறுநிலையை இதைவிட மோசமாகக் கேவலப்படுத்த முடியுமா, இதைவிட இலகுவாகக் கடந்துபோக முடியுமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

இவர்கள் யாருக்காகப் பேசுவதாக இப்படியெல்லாம் வக்கிரமாகக் கருத்துரைக்கிறார்களோ அந்த சமூகத்தட்டு மக்களிடம் போய்க் கேட்கட்டும் – எந்த சாதியைச் சேர்ந்தவளா யிருந்தாலும், எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவளாயிருந்தாலும் ஒரு பெண்ணை, சிறுமியை, வாய் பேச முடியாத காது கேளாத குழந்தையை இப்படிச் சீரழிப்பவர்கள் மனிதர்கள்தானா என்று

யார் சார்பாகவோ பேசுவதாக, வாதாடுவதாக சிலுப்பிக் கொண்டு இப்படியெல்லாம் அநாகரீகமாக, அராஜகமாகக் கருத்துதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் தமக்கான சுயமதிப் போடும், வாழ்நெறிக ளோடும் வாழும் அந்த மக்களை உண்மையில் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள், மனித நேயம், சமூகப் பிரக்ஞை என்ற பாவனையில் தங்கள் மன வக்கிரங்களையெல்லாம் அம்மக்கள் மீது வலிந்தேற்றி அவர்களை மதிப்பழித்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதை உணரவியலாதவர்களாய் இப்படித்தான், இறுதிவரை புண்மொழி உதிர்த்துக் கொண்டேயிருப்பார்களோ இவர்கள்?