தரிசனம்
பின் உனக்கு எதற்கு தனிவீடு?”
”நீக்கமற நிறைந்திருக்கும் காற்று
ஒவ்வொரு உடம்புக்குள்ளும் நிரம்பி
தனித்தனி உயிராவதுபோல்
என்று வைத்துக்கொள்ளேன்” _
கண்ணிமைப்போதில்
ஒலியின்றிக் கேட்கும் அசரீரியுடன்
பார்வைப்பரப்பிற்கு அப்பால்
தெரிகிறதொரு சிறு புன்னகை.

No comments:
Post a Comment