கல்லுக்குள் தேரை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
"குளிரை வெய்யிலென்றும்
வெயிலைக் குளிரென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
"கடலை அருவியென்றும்
அருவியைக் கடலென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
குளிருக்கும் வெயிலுக்கும் மூலாதாரமான தட்பவெப்பத்தில்
அதன் அடிவேரான அற்புத இயற்கையில்
இரண்டறக் கலந்த பின்னே
யார் என்பதும் அதிகாரம் என்பதும்
குளிரும் வெய்யிலும் பிறவும்
இருமையற்றதாக
வெறுங்கால் நடைபழகிக்கொண்டிருக்கும்
இறை உறை திரு வுளமெலாம்
மறைபொருளாகி வலம்வரும் அண்டம்
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்….

No comments:
Post a Comment