மொழிபெயர்ப்பின் அரசியல் – 1
லதா ராமகிருஷ்ணன்
தனது மனவெழுச்சியை, பொற்குமிழ்த்தருணங் களை, ஆறா வலியைப் பதிவுசெய்து ஒருவித வடிகால் தேடும், ஒரு விஷயம் குறித்த தன் பார்வையை முன்வைக்கும் உட்தூண்டுதலே ஒருவர் கவிதை எழுதக் காரணமாகிறது.
அதை படித்த, தாய்மொழியைத் தவிர இன்னொரு மொழியும் தெரிந்தவர் – இங்கு ஆங்கிலம் என்று வைத்துக் கொள்ளலாம் - அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி முன்வருகிறார்.
இங்கே மூல கவிதை இல்லாமல் அதன் மொழி பெயர்ப்பு இருக்க வழியில்லை. எனவே, ஒரு கவிஞரை மொழிபெயர்ப்பதன் மூலம் அவருக்கு ஏதோ பெரிய FAVOUR செய்துவிட்டதாக எண்ணிக் கொள்வது அடாவடித்தனம்.
இன்று அலைபேசி குறுஞ்செய்தியும் சமூக வலைத் தளச் செய்திகளுமாக ஒரு மொழியை அதன் இலக்கணத்தை அசட்டை செய்து விருப்பம்போல் சுருக்கி திரித்து எழுதும் வழக்கம் மேலோங்கியிருக் கிறது. குறுஞ்செய்திகள் நட்பினருக்கிடையேயான தால் அதுகூடப் பரவாயில்லை.
ஆனால், அப்படித்தான் மொழிபெயர்ப்பையும் செய்வேன் என்ற மனப்போக்கு சரியல்ல.
ஒரு மொழி நமக்குத் தெரியும் என்பதற்கு என்ன அளவுகோல்? ஒரு மொழி பேசத் தெரியும், எழுதத் தெரியும் என்பதாலேயே எல்லோரும் அந்த மொழி யில் இலக்கியம் படைத்துவிட முடியுமா?
அதுபோல் தான் மொழிபெயர்ப்பும். மூன்றே நிமிடங் களில் மொழிபெயர்ப்பாளராகிவிட முடியும் என்று எண்ணிச் செயல்படுவது ஆணவம்; அபத்தம்.
யாரை இன்னொரு மொழிக்கு அறிமுகப்படுத்து வதாக எண்ணிக் கொள்கிறாரோ அந்தப் படைப்பாளிக்கு மொழிபெயர்ப்பாளர் செய்யும் நம்பிக்கைத் துரோகம் _ வெகு அலட்சியமாக ஒரு படைப்பை மொழிபெயர்த்து முடிப்பது.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் என்பதுபோல் ஒரு வார்த்தை சார்ந்த அப்பட்டமான தவறான மொழி பெயர்ப்பு ஒரு படைப்பையே மதிப்பழித்து விடும்; மொழிபெயர்ப்பாளரையும் படைப்பாளியை யும் மதிப்பழித்துவிடுவதாகும்.
எத்தனை கவனமாக மொழிபெயர்த்தாலும் தவறு நேர்ந்துவிடும் என்பது வேறு. அதற்காக படைப்பா ளிக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே என்ற மிதப்பில், ’நாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தால் அதில் யார் குற்றம் கண்டுபிடிக்கத் துணிவார்கள் என்ற அசட்டு தைரியத் தில் கைபோன போக்கில் மொழிபெயர்க்க லாகாது.
சிலர் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்'டில் பத்தி பத்தியாக ‘பேஸ்ட்’ செய்து’ தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு களை சுலபமாகச் செய்துவிடலாம் என்று சொல் வதைக் கேட்கும்போது சிரிப்பாக வரும். அதன் உதவியோடு இலக்கியப் படைப்பை மொழி பெயர்க்க முற்பட்டால் அதலபாதாளத்தில் விழவேண்டியது தான்.
ஆனால், அதில்கூட சரியாக பொருள் கிடைக்கும் சொற்கள் உண்டு. மூலமொழியிலான படைப்பின் ஒரு வார்த்தைக்கான பொருள் சரியாகப் புரிய வில்லையென்றால் அகராதிகளின் துணையை நாடலாம். Thesaurus இருக்கிறது. ஒரு வார்த்தை பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா, வட்டார வழக்குச் சொல்லா என்பதையெல்லாம் அறிய இணையத்திலேயே நிறைய வழிகள் இருக்கின்றன.
அப்படி எதையும் செய்யாமல் ஒரு சாதாரணச் சொல்லை அதன் நேரெதிரான அர்த்தத்தில் கவிதை மொழிபெயர்ப்பில் முதல் வரியில் தருவது என்பது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் இலக்கு மொழித் தேர்ச்சியை (மூலமொழித் தேர்ச்சியை என்றுகூடச் சொல்லிவிட முடியும்) அம்பலமாக்கு வதோடு அவர் மொழிபெயர்த்துள்ள படைப்பை மதிப்பழிக்கிறது. மேலும், மொழிபெயர்ப்பு என்ற இலக்கியப்பணி குறித்த அவருடைய மனப்போக்கை யும் எடுத்துக்காட்டுகிறது.
இது புரியாமல் தனது படைப்பு ஆங்கிலத்தில் வந்ததற்காகப் பூரித்துப்போய் அதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரை வானளாவப் புகழும், முதல் தர மொழிபெயர்ப்பாளராய் முன்னிறுத்தும் படைப்பா ளியை என்ன சொல்ல? அப்படி நம்பும், நம்ப வைக்கப்படும், பிறரை நம்பவைக்க முயலும் படைப்பாளியைப் பார்க்க உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது. தாம் நம்பும் யாரிடமேனும் மொழிபெயர்ப்பை சரிபார்த்தால்கூட இந்தப் பிழைகளைத் தவிர்த்துவிட முடியும்.
இன்று யதேச்சையாகக் காணநேர்ந்த தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பு
/அவனுக்குத் தேவை/ என்பது /He is hardly in need/ என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்த ஆதங்கத்தில்தான் இதை எழுதும்படியாகியது. Hardly in need என்றால் ’அறவே தேவையில்லை’ என்று பொருள். There is hardly any rain here என்றால் இங்கே மழையே இல்லை, மழை அரிதாகவே பெய்கிறது என்று பொருள்.
ஒரே துறையில் இயங்குபவர்கள் ஒருவரையொருவர் விமர் சிப்பது சரியல்ல என்ற எண்ண முடையவள் நான். ஆனாலும், ஒரு சிலர் செய்யும் அலட்சியமான, பிழையான மொழிபெயர்ப் பால் ஒட்டுமொத்த மொழி பெயர்ப்பாளர் தரப்பே அவதூறுக் காளாகும் நிலைமை ஏற்படுகிறது.


No comments:
Post a Comment