LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, September 9, 2019

மொழிவழி….


மொழிவழி….


லதா ராமகிருஷ்ணன்

நிறைய சொல்கிறோம். ஆனால் மொழிப்பற்று என்ற பெயரில் எழுத்தா ளர்கள் கூட மொழி குறித்து நடுவண் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள ஆரம்ப கட்ட வரைவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலேயே ‘இந்தித் திணிப்பு’ என்று சாடத்தொடங்கி யாயிற்று.

தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கட்சிகளுடையதாய் (நேரடி யாகவும், மறைமுகமாகவும்) இருப்பதால் அவற்றில் நடைபெறும் விவாதங்களிலெல்லாம் பெயருக்குக் கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் இடம்பெருகிறார்களே தவிர மற்றபடி பேச எடுத்துக் கொள்ளப்படும் கருப்பொருளும் சரி, அது நெறிப்படுத்தப்படும் விதமும் சரி அவரவர் கட்சிக்கான (indoor) பிரச்சாரமேடையாகவே அமைவது கண்கூடு.

இன்று உலகமே ஒரு Global Village ஆக சுருங்கியிருக்கும் நிலையில் எத்தனை மொழிகள் கற்றுக்கொண்டாலும் நல்லதுதான். அதுவும், இன்று மொழிபெயர்ப்புக்கான தேவையும் அதன் வழியான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியோடு வேறு ஓரிரு இந்திய மொழிகளும், மேலைநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்று எண்ணு வதைத் தவிர்க்கமுடிவதில்லை.

திணிப்பு என்று சொல்பவர்கள் பள்ளிப்படிப்பு என்பது மாணாக்கர்கள் விரும்பும் விதமாகவா அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதுவும் ஒருவகைத் திணிப்பு தான். ஒரு விஷயம் தம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகிறதா என்று அதனால் பாதிக்கப் படுகிறவர்கள் தான் சொல்லவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் பிள்ளைகளே தமிழ் உச்சரிப்பிலும் வாசிப்பிலும் எத்தனை பின் தங்கியிருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்தால் தெரியும். அவர்கள் நாளும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக் காட்சி சேனல்களில் எல்லாம் தமிழ் எத்தனை பாடுபடுகிறது, பிழையாக உச்சரிக்கப்படுகிறது என்று நாம் எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தாய்மொழி வழியான கல்வி தான், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு மிகவும் ஏற்றது என்பது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொண்டுள்ள உண்மை. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதை ஆக்கபூர்வமான வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

அதைவிட்டு, இந்தி கற்றுக்கொண்டாலே நாம் வடநாட்டவருக்கு அடிமைப்பட்டுவிடுவோம், இரண்டாந்தரப் பிரஜை களாக்கப்பட்டு விடுவோம் என்பதாகவெல்லாம் மக்களை, பள்ளி மாணாக்கர்களைக் கலவரப்படுத்து வதும், இந்தி வந்தால் இந்தியா (அல்லது குறைந்தபட்சம் தமிழகம்) கந்தகபூமியாகும் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டுவதும் தேவையற்ற விஷயம். தமிழகத்தில் எந்தக் கலவரமாவது வெடித்து ரத்த ஆறு ஓடாதா என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருப்போரை எண்ணி வருத்தமா யிருக்கிறது.

இப்படி சூளுரைப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழிக் கல்வி கற்கச் செய்திருக்கிறார்கள், செய்துகொண்டிருக் கிறார்கள் – தெரியவில்லை.

அரசுப்பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளிலேயே படிக்கவேண்டும். அவர்கள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விவாதம் சில நாட்கள் முன்னர் எழுந்தபோது, அது தனிநபர் உரிமை என்றவிதமாய் எதிர்வினையாற்றப்பட்டது.

ஆனால் இப்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ள ஒரு வரைவுத்திட்டத்தை எதிர்த்து இத்தனை ஆக்ரோஷமாகக் குரலெழுப்பவேண்டிய அவசியம் என்ன? நிதானமாக எதிர்வாதத்தை முன்வைக்கலாமே? தமிழகத்தை நடுவண் அரசு வஞ்சிக்கிறது என்று ஏன் திரும்பத் திரும்ப இளைய தலைமுறையினர் மனங்களில் உருவேற்றப் பார்க்கவேண்டும்? அப்படிச் செய்வதால் யாருக்கு என்ன லாபம்?

முன்பொரு சமயம் இத்தகைய சூழல் ஏற்பட்டபோது ஒரு பத்திரிகை தமிழ் வழிக் கல்வி, இந்தி கற்கக்கூடாது என்று முழங்குவோரின் பிள்ளைகள் எந்தெந்த பள்ளிகளில் எந்த மொழி மூலம் பயில்கிறார்கள் என்ற பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட்டது.

ஒரு மொழியைக் கற்கவிடாமல் பாமர மக்களைத் தடுத்து, அதே மொழியின் பயன்களைத் தாமும் தம் பிள்ளைகளும் அனுபவித்துக் கொண்டிருப்பது என்பது என்னவிதமான மனிதநேயம்? சமூகப் பிரக்ஞை?




No comments:

Post a Comment