விட்டுவிடுதலையாகி….
LIFE GOES ON.....
Monday, May 31, 2021
விட்டுவிடுதலையாகி…. ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
Sunday, May 30, 2021
பிரார்த்தனை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
பிரார்த்தனை
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நடுநிசியில் நட்டநடுவீதியில்
தன்னந்தனியாய் நின்றுகொண்டிருக்கும் சின்னஞ்சிறுமி உணரும்
அநாதரவில் அதிபயத்தில்
இருளைத் துளைத்துக்கொண்டு வரும்
மின்மினியின் துளி ஒளி
கருமையைப் பன்மடங்கு அதிகரிப்பதாய்……
முதுகுப்பக்கம் ஏதோ மூச்சுக்காற்று படர
திரும்பிப்பார்த்தால்
அத்தனை உயரமாய் குத்திக்கிழிக்கவரும்
வாட்களனைய நீண்ட தந்தங்களோடு
காட்டுயானையொன்று நிற்கக் கண்டு
வீறிடாமல் என்ன செய்வாள்.
சித்திரக்கதைப் புத்தகத்தில் வரும் யானையே
சிரித்துவிளையாடத்தக்கது.
வழிதவறி வந்துவிட்டாளா இந்த வனாந்திரப் பிரதேசத்துக்கு?
தொலைந்துவிட்டாளா, தொலைத்துவிட்டார்களா?
தொலைதலும் தொலைத்தலுமே வாழ்வெனும்
பேருண்மையை எட்ட
இன்னும் எத்தனை தொலைவு அழுதுகொண்டே கல்தடுக்கி முள்குத்தித் தட்டுத்தடுமாறிசெல்லவேண்டுமோ
இந்தக் குட்டிப்பெண்....
கரிய பெரிய இருளில் சிறுமியின் விசும்பல்
பசும்புல் மீது பதிந்த காலடியோசையாய்
அவளைச் சுற்றிலும் படர்ந்துள்ள
சன்ன வெளிச்சமொரு ஒளிவட்டமாக,
ஆகட்டும் சிறுமி
இறக்கைகள் தரித்த தேவதையாக…….
வலியின் நிறம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
வலியின் நிறம்
Tuesday, May 26, 2020
நோய்மை ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)
நம்மாலாகும் கடுகளவு சகமனிதக்
கடமையைக்கூடச் செய்யாமல்
காலெட்டிவைத்து அப்பால் போய்க்கொண்டிருக்கப்
பழகிவிட்டவர்கள்….
நடிப்புக்கு நோபெல் விருது இருந்தால்
அது கண்டிப்பாக நமக்குத்தான்.
பழிப்பதும் சபிப்பதுமே
நம் மனிதநேயத்தின் ‘அக்மார்க்’ முத்திரையாக _
ஆகப்பெரிய சமூகப்பணி இருக்கமுடியுமா என்ன?
சிறிய அறையில் முடங்கிக்கிடக்கும் நேரம்
திரும்பத்திரும்ப துயருரும் வறியவர்கள்
சிறிய இன்னும் சிறிய சதுர,நீள்சதுரக் கண்ணாடிப்பெட்டிகளிலிருந்து
அத்தனை நெருக்கத்தில் கண்ணீர்பெருக்கும்போது
தன்னையுமறியாமல் மேலெழும்பும் மனசாட்சி
நம்மைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது.
பாதிக்கப்பட்டவராக நம்மை முன்னிறுத்தும் முயற்சியில்
உரக்கக் கூவுகிறோம்; கதறுகிறோம்
தாவி குதித்துத் தரையில் புரண்டு துடிக்கிறோம்;
தெரிந்தே பொய் பேசுகிறோம்.
இந்தப் பேரிடர்
என்று அடித்துச்சொல்கிறார் நம்மில் ஒருவர்
அடிக்கடி அவர் பல நாடுகளுக்குப் பறந்தவர்; பறந்துகொண்டிருப்பவர்;
பறக்கப்போகிறவர்.



