LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Thursday, January 26, 2017

அன்பு

அன்பு
இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில் [தமிழினி வெளியீடு (2002)] மகான்கள் என்ற தலைப்பிட்ட சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை:

நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் வளைத்துத் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை குதிரைகள் வட்டமாக ஓடுவதை, சிங்கம் தனக்கு சம்பந்தமில்லாத சிறு ஸ்டூல் மீது ஏறி நிற்பதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம் அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்கிறான். இதில் உறவு ஏதும் இல்லை. வன்மம், ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.”