LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 1, 2023

எது கவிதை? - லதா ராமகிருஷ்ணன் (ஓர் எளிய எதிர்வினை)

  எது கவிதை? 

லதா ராமகிருஷ்ணன்

(ஓர் எளிய எதிர்வினை)

INSIGHT இருமொழி வலைப்பூவில் இப்போது பதிவேற்றப்பட்டுள்ள கவிதைகள் குறித்து கீழ்க்காணும் கருத்து ‘கமெண்ட்’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.

..............................................................................................................................
//நான் இதில் உள்ள கவிதைகளை (தமிழ்) படித்தேன். அவ்வள வாக ஈர்க்கவில்லை. ஒரு வகையான புகை மூட்டத்துக்குள் இவர்கள் இருப்பது போல் தெரிகிறது. இவர்கள் வெளிப்படுத் துவதாய் நினைக்கும் வாழ்க்கை எதார்த்தத்தில் இல்லை. இவர்களின் "தேடல்" குருட்டுப் பூனை ஒன்று இருட்டில் தேடும் "தேடல்?"போல் உள்ளது.//
........................................................................................................................................
பொதுவெளியில் எழுத்தாக்கங்கள் வந்துவிட்டால் பின் அவற் றைப் பற்றி கருத்துரைக்கும் உரிமை வாசகர்க ளுக்கு உண்டு. அதுபோலவே அதற்கு பதிலளிக்கும் உரிமையும் படைப்பாளிக ளுக்கு உண்டு என்று எண்ணு கிறேன். பதிலளிப்பதும் அளிக் காததும் அவரவர் விருப்பம்.

அந்தக் கவிதைகளைத் தேர்வு செய்தவள் என்ற அளவில் அதற்கான எதிர்வினையாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கிருப் பதாகத் தோன்றியது. சுருக்கமாக பதிலளித்திருக்கிறேன். அதை யும் இங்கே தந்திருக்கிறேன்:_
................................................................................................................................
//உங்களுக்கு என்னவகையான கவிதைகள் பிடிக்கு மென்று தெரியவில்லை. அவற்றைத் தேடி நீங்கள் படித்துக்கொள்ள லாம்.
’குருட்டுப்பூனை ஒன்று இருட்டில் தேடும் "தேடல்?’ என்று நீங் கள் எள்ளலாகக் கூறியிருந்தாலும் உண்மையில் அதுதானே வாழ்க்கையின் சாராம்சம்.

நேற்று ஒரு தெருநாயைப் பார்த்தேன். ஒற்றைக்கால் முழுவது மாக இல்லை. அதுவும் அங்கேயிங்கே எதையோ ஆர்வமாகத் தேடிக்கொண்டிருந்தது.

அதன் தேடலையும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தனதாக்கிக் கொள்வதே கவிமனம்.

இந்த வகைக் கவிதைகளைத்தான் படிக்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.

அதே போல் இந்தவகைக் கவிதைகளைத்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

கவிஞர்கள் எழுதுவதைத் தராசிலிட்டு நியாயத்தீர்ப்பு அளிப்ப வராக உங்களை நீங்களே பீடமேற்றிக் கொள்ள எந்த அவசிய முமில்லை என்றே நினைக்கிறேன்.

எண்ணிறந்த வாசகர்களில் நீங்களும் ஒருவர்.
அவ்வளவே.

No comments:

Post a Comment