யாதுமாகி நின்றாய்…..
கனிவு துணிவு உணர்வு அறிவு எண்ணம் செயல்
எல்லாவற்றிற்கும் வடிவம் தந்து
எத்தனையோ வடிகால்கள் அமைத்துத் தந்து
நம்மை நாம் வெளிப்படுத்த
நம்மொத்தவர்களோடு நல்லுறவாட
நேற்றும் இன்றும் நாளையும்
நற்பாலம் கட்டித்தந்து
நம்முள் கலந்திருக்கும்
தாய்மொழியாம் தமிழை
காற்றென்பதோ
காலத்தின் ஊற்றென்பதோ
உலகென்பதோ
உயிர்த்துடிப்பென்பதோ….
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ஈடாகுமோ தமிழின் வழித்துணைக்கு!
No comments:
Post a Comment