LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, January 26, 2017

ஆளுமை

ஆளுமை
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


 ஆம், நான் ராணிதான்.
தங்கமும் வைரமும் இழைத்த கிரீடத்தைவிட
இந்தச் சிறகுகள் செருகப்பட்ட மணிமகுடம்தான்
விலைமதிப்பற்றது எனக்கு.
எனக்கு நட்சத்திரங்களோடு விளையாடப்போகவேண்டும்.
எனக்காக ஐஸ்க்ரீமும் பொம்மைக்காரும் வாங்கிவரப்போகின்றன
சிங்கமும் புலியும்.
நடுக்கடலில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது திமிங்கலம்
தின்பண்டம் ஏதாவது தரும்....

தத்துப்பித்தென்று பேசுவது குழந்தையின் இயல்பு;
வளர்ந்தவர்களுக்கு அழகு குத்திக்கிழிப்பது

இரங்கற்பா

இரங்கற்பா
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
   

பின்பக்கத்தாளின் கீழ்க்கோடியில்
பொடி எழுத்துகள் அடுக்கப்பட்ட வரிகளில்
கருப்பு-வெள்ளையிலோ
கண்கவர் வண்ணத்திலோ,

அல்லது _
இரண்டாம் பக்கத்தில்
சற்றே பெரிய அச்சிலான
இரு பத்திகளில்

இல்லை, டோலக்கு ஆட ஆட
அதற்கேற்ப தலையும் கையும் அபிநயிக்க
மைக்கை நேராக உங்கள் குரல்வளைக்குள் இறக்கி
கருத்துரைக்கச்சொல்லும்
இருபது தேசிய பிரதேசிய, பரதேசிய
முக்கியத் தொலைக்காட்சிச் சானல்களில்

சில சாவுகள் அடக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன
வெறும் செய்தியாக மட்டுமே.



எளிய வேண்டுகோள்

எளிய வேண்டுகோள்
'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 

 என் அன்பில் உயிர்க்கும் குட்டியானை.
நீங்கள் பழமும் தரவேண்டாம்;
பள்ளத்தில் விழச்செய்து 
கால்களில் சங்கிலியும் இடவேண்டாம்.
இன்னும் அரைமணிநேரம் 
எங்களை விளையாட விடுங்கள் போதும்.
பின் என் குட்டியானை மீண்டும் உங்கள் 
கைப்பாவையாகிவிடும்;

நானும்.

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

* * * * *

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை
(
நீயே)தானாக.


பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல்

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் -2
                                          ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 

1. 
பறவைப்பார்வையில் குக்குறும் புள்ளிகளாகத் 
தெரிந்தன தலைகள்.
உண்டிவில்லுக்கு அப்பால் பறப்பதே 
வாழ்வாயிருந்தது ஒரு காலம்
பின் துப்பாக்கிகள் வந்தன.
அநாதரவாய் ஆகாயத்தில் 
உயிர்தப்பிப் பறக்கும்போதெல்லாம்
எண்ணாமலிருந்ததில்லை:
அந்தரத்தில் கூடு கட்ட முடிந்தால் 
எத்தனை நன்றாயிருக்கும்

2. 
யாருக்கும் புரியாது அதன் மொழி;
எனவே அதற்குப் பேசத்தெரியாது என்கிறார்கள்.
ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அந்தப் பறவை
கற்றுக்கொண்டுவருகிறது
மந்திரமாகும் சங்கேதச் சொல் ஒன்றை
அதைக் கீச்சிட்டால்
தனக்கு இளைப்பாற இடம் தந்த
அருமை நண்பனை விரட்டி வெருட்டும் வியூகங்கள்
வெண்பனியாய் விலகி மறைய
தன்வழியேகிடுவான் தோழன்
திரும்பவேண்டிய தேவையின்றி.








INTO THAT HEAVEN OF FREEDOM LET MY COUNTRY AWAKE.....

INTO THAT HEAVEN OF FREEDOM 
LET MY COUNTRY AWAKE.....




DEMOCRACY MEANS... DR.AMBEDKAR



INDIA IS MY COUNTRY






குடியரசு தின கொடிவணக்கம்


























எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பாரதியார்

CULTURE

CULTURE

CULTURE

SOME DEFINITIONS
  • Culture refers to the cumulative deposit of knowledge, experience, beliefs, values, attitudes, meanings, hierarchies, religion, notions of time, roles, spatial relations, concepts of the universe, and material objects and possessions acquired by a group of people in the course of generations through individual and group striving.
  •  
  • Culture is the systems of knowledge shared by a relatively large group of people.
  •  
  • Culture is communication, communication is culture.
  •  
  • Culture in its broadest sense is cultivated behavior; that is the totality of a person's learned, accumulated experience which is socially transmitted, or more briefly, behavior through social learning.
  •  
  • A culture is a way of life of a group of people--the behaviors, beliefs, values, and symbols that they accept, generally without thinking about them, and that are passed along by communication and imitation from one generation to the next.
  •  
  • Culture is symbolic communication. Some of its symbols include a group's skills, knowledge, attitudes, values, and motives. The meanings of the symbols are learned and deliberately perpetuated in a society through its institutions.
  •  
  • Culture consists of patterns, explicit and implicit, of and for behavior acquired and transmitted by symbols, constituting the distinctive achievement of human groups, including their embodiments in artifacts; the essential core of culture consists of traditional ideas and especially their attached values; culture systems may, on the one hand, be considered as products of action, on the other hand, as conditioning influences upon further action.
  •  
  • Culture is the sum of total of the learned behavior of a group of people that are generally considered to be the tradition of that people and are transmitted from generation to generation.
  •  
  • Culture is a collective programming of the mind that distinguishes the members of one group or category of people from another.


அன்பு

அன்பு
இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் என்ற கோபிகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்பில் [தமிழினி வெளியீடு (2002)] மகான்கள் என்ற தலைப்பிட்ட சிறுகதையின் ஆரம்ப வரிகள் இவை:

நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் வளைத்துத் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை குதிரைகள் வட்டமாக ஓடுவதை, சிங்கம் தனக்கு சம்பந்தமில்லாத சிறு ஸ்டூல் மீது ஏறி நிற்பதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம் அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்கிறான். இதில் உறவு ஏதும் இல்லை. வன்மம், ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.”