LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 29, 2013

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன் கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர் வினைகளும்

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான 
பாலியல் வன் கொடுமையும் 
அது தொடர்பாய் பெறப்பட்ட 
சில எதிர் வினைகளும்

_  லதா ராமகிருஷ்ணன்

26.5.2013 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை


*இந்த என்னுடைய கட்டுரை திண்ணை இணையதள இதழில் வெளி யாகியது.ஒட்டியும் வெட்டியும் நிறைய கருத்துகள் வெளியாகின விரும்புவோர் அவற்றை திண்ணை இணையஇதழில் படித்துக் கொள்ள முடியும்.  
                                                                                                                                 
– லதா ராம கிருஷ்ணன்]



தில்லியில் 
ஓடும்பேருந்தில் நடந்தபாலியல் வன்முறை
இந்தியாவை ட்டுமல்ல,  
உலகத்தையே  உலுக்கியது எனலாம். 
அந்த ஃபிஸியோதெரபி மாணவியின்அகபுற  வலியை எண்ணியெண்ணி,
அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் 
அவளுடைய தோழனின் மனம்  எப்படியெல்லாம்தவித்திருக்கும்;
அலைக்கழிந்திருக்கும்....



தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன் முறை இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோ தெரபி மாணவியின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவிய லாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும்.



இப்போது, ஐந்துவயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக் கள் அணி திரண்டு போராட முன்வருவது நல்ல அறி குறி. ஆனால், வட இந்தியாவில் இப்படி எத்தகைய மக்கள் எழுச்சி நடந்தாலும் அதை விமர் சனம் செய் வதும், நையாண்டி செய்வதுமே தமிழகத்தில் சில சமூகப் பிரக்ஞையாளர்கள்/போராளிகளின் வழக்க மாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

தில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களை கற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியா வில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா? இந்த தேசிய ஊடகங்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல்லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. 


இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவி லேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக் கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன் கொடு மைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம் வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே.  அப்படிச் செய்யாதது ஏன்? 


தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற் குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணி யொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதி ராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்து வதில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடு மைக்கு எத்தனை யோ அடித்தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்திவெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.

கொடூரமான  விதத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண் – நிர்பயா, என்றும் தாமினி என்றும் ப்ரேவ் ஹார்ட் என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்ட வள். உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே – அந்தப் பெண் குறித்து அரசியல்வாதிகள் சிலர் தெரி வித்த பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அளவு க்குக் கண்டனத்திற்குரியவையோ அதேயளவு கண்ட னத்திற்குரியவை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொச் சைப்படுத்துவதாய் ‘மற்ற அநீதிகளுக்கு அவர்கள் குரல் கொடுத்தார்களா’, என்று விமர்சனம் செய்து மட்டம் தட்டுவதும். இப்படி எதிர் விமர்சனம் செய்வது சுலபம். அப்படிச் செய்பவர்கள் ஒன்று சேர்ந்து அநீதிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங் களையும் எதிர்ப்பியக்கங்களையும் கட்டமைக்க லாம்; அப்படித் தாங்கள் கட்டமைக்கும் எதிர்ப்பியக் கங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் வருவதில்லை யென்றால் அதற்கான காரணங்களை பரிசீலனை செய்துபார்க்க முன்வரலாம்.

பிறகு, தில்லிப்பேருந்தில் பாலியல்வன்கொடுமை க்கு ஆளான பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும் [பெண்ணின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற் காக எங்கள்குடும்பம் பல நாட்கள் வெறும் உருளை க்கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறது என்று அந்த மாணவியின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்], தில்லியில் ஒரே அறை கொண்ட குடியிருப்பில் அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்ததும், தன்னுடைய படிப்புச்செலவுகும் குடும்பச் செலவுக் குமாய் அந்த மாணவி ஓய்வுநேரங் களில் ‘ட்யூஷன்’ எடுத்துவந்ததும் தெரிய வந்தது. 

உடனே அகில உலகஅறிவுஜீவியாகக் கொண்டாடப் படும் அருந்ததி ராய் ‘தில்லிப்பேருந்தில் அந்தக் கல் லூரி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வர்கள் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் தில்லியில் அத்தனைபெரிய கொந்தளிப்பு எழக் காரணம். இதுவே, இராணுவத்தாரும், காவல் துறை யினரும் நடத்தும் பாலி யல் அத்துமீறல்களு க்கு இவர்கள் இப்படி எதிர்ப்பு காட்டுவதில்லையே’ என்று கருத்துரைத்தார்.

முதலில், இராணுவத்தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் கொந்தளிப்பதில்லை என்பது தவறு. வெவ்வேறு விதங்களில் மக்களின் கொந்தளிப்பு வெளிப்படத் தான் செய்கிறது. 

அதேபோல், சீருடையணிந்த காவல்துறை. ராணுவத் தில் பணிபுரியும் அத்தனை பேரும் பெண்களை வன் கொடுமை செய்பவர்கள் என்று பொதுப்படையாகப் பழித்தலும் தவறு.

முன்பு இத்தகைய மக்கள் எழுச்சி இயக்கங்கள் கட்ட மைக்கப்படவில்லையே என்று விமர்சிக்கும் சமூகப் பிரக்ஞை யாளர்கள் அதைக் காரணமாகக் காட்டி இப் போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பியக் கத்தைக் கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நியா யம்? குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா?அவர்கள் பெண் களைக்கேவலப்படுத்தினால் அது பரவாயில்லையா

இதை குடிசை வாழ் பகுதி மக்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தில்லிப்பேருந்துக் கொடூரத்தில் ஈடு பட்டுள்ளவர்கள் குடிசைவாழ் பகுதி மக்களில் விதி விலக்குகள் மட்டுமே என்பதை நாம் மறந்து விடலா காது.

அடித்தட்டுமக்களுக்கு இந்தச் சமூகத்தில் நீடிக்கும் அவல நிலைமைகளை எடுத்துரைத்து அவற்றால் அவர்கள் உளவியல் ரீதியில் அடையும் பாதிப்பு களை அகல்விரிவாய் பேசவேண்டியதும், அலசியா ராய வேண்டியதும் கண்டிப்பாக அவசியம். அதற் காக, மேற்கண்ட விதமான வாதத்தை, அதுவும் ஒரு கொடூர நிகழ்வை அறிவுபூர்வமாக அலசுவதான பாவத்தில் முன்வைப்பது height of insensitivity, to say the least.

இத்தகைய எதிர்ப்பியக்கங்களை மட்டந்தட்ட மேற் கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று middle class mentality [ மத்திய தர வர்க்க மனோபாவம்] என்று முத்திரை குத்துவது. இந்த அடைமொழி இலக்கற்ற வர்கள், இறுதிவரை ஒரு போராட் டத்தை நடத்தத் திராணியில்லாதவர்கள், ஒரு பிரச்னையை நுனிப்புல் மேய்வதாய் அணுகுபவர்கள்,முற்போக்குச் சிந்தனை யற்றவர்கள், உணர்ச்சி வேகத்தில் சில வீரவசனங் களை முழங்குபவர்கள், பயந்தாங்கொள்ளிகள், சொரணையற்றவர்கள், சுயநலவாதிகள், ஏட்டுச்சுரை க்காய்கள் என மிகப் பல எதிர்மறைப் பொருள்களை உள்ளடக்கியதாய் பயன்படுத்தப்பட்டுவரும் சொற் றொடர். அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மட்டந்தட்ட இந்த அடைமொழியைத் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்த இயக்கக் கூட்டங்களை நேரில் சென்று பார்த்தவர்கள் அங்கே அடித்தட்டு மக்கள் உட்பட பலதரப்பினரும் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.

எனில்,தாங்கள் இழுத்தஇழுப்புக்கு மந்தைத்தனமாக வராமல் கேள்விகேட்கத் தெரிந்தவர்களும், மாற்றுக் கருத்துகளை முன் வைக் கக் கூடியவர்களும் மத்திய தர வர்க்க மனோபாவக்காரர் களாய் மதிப்பழிக்கப் படுகிறார்கள் என்பதே பல நேரங்களில் நடப்புண் மையாக இருக்கிறது.

இது கூட்டணிஅரசுகளின் காலம். இரு துருவங்களாக இயங்கிவருபவர்கள்கூட ஒரு common minimum progra mme–ன்கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது இன் றைய காலகட்டத்தின் தேவையாகியிருக்கிறது. சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், தமிழகச் சூழலில் சமூகச் சீர்கேடுகள் சார்ந்த எதிர்ப்பியக்கங்களை பல தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டமைப் பது ஏன் சாத்தியமாகவில்லை? இதற்கு middle class mentality தான் காரணம் என்று சொல்லி விடுவதோ, அல்லது, படித்த வர்க்கம் இங்கே சொரணையற்று இருக்கிறது என்று சொல்லிவிடுவதோ சுலபம். ஆனால், அதுவா உண்மை?

ஒரு குறிப்பிட்ட சமூகச் சீர்கேடு தொடர்பாய் எதிர்ப் பியக்கங்களைக் கட்டுபவர்களில் பெரும்பாலோர் package deal என்பதாய் பல்வேறு விஷயங்கள் தொடர்பான அவர்களுடைய கருத்துகள், நிலைப் பாடுகள் எல்லாவற்றிற்கும் ‘கட்டாய ஆதரவு’ திரட் டும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள் கிறார்கள். 

எடுத்துக்காட்டாக, ‘ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண் டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக் கையில் செய்து கையெழுத்தி டும்படி கோரப்படுகி றது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.

இன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெய ரால் புறமொ துக்கி விடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது.

சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயி ருந்தபோது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கிய வாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பி ருந்த  இலக்கியவாதிகளும்,அவருடைய கருத்து களை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக் காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு  குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] ’முந்தைய தலைமுறை இலக் கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக் கறை கிடையாது என்று ஒரே போடாகப் போட்டு, எழுத்தை தவமாகக் கொண்டு வறுமையில் உழன்ற வர்களையெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளி விட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முத லில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கி றார்கள் என்று கேட்கும் அக்கறையின்றி போயே போய் விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக் கின்றனவே!

இது ஒரு அனுபவமென்றால் வேறு சில கூட்டங்க ளுக்கு சமூகப் பொறுப்போடும், அக்கறையோடும் மூன்று பேருந்துகள் மாறி [தமிழகப் பேருந்துகளில் பயணமாவோர் சம்பளமில்லாத தாற்காலிக உதவி நடத்துனர்களாகக் கட்டாயம் பணியாற்றியே தீர வேண்டும். ஒரு கையால் அலைபேசியில் பேசிக் கொண்டே மறு கையால் நாணயத்தை நீட்டுபவர் களிடம் பவ்யமாக அதை வாங்கி, பத்து கரங்கள் வழியாக அது பத்திரமாகக் கடத்தப்பட்டு நடத்து னரைச் சென்றடைந்து பின் அந்த அதி மெல்லிய துண்டுக் காகிதம் – டிக்கெட் எனப்படுவது – பறந்து விடாமல், நழுவி விடாமல், அதேவிதமாய் நம் கையை அடைய, அதீதப் பதற்றத்தோடு அதை வாங்கி, இன்னும் அலைபேசியில் மும்முரமாய் அளவளாவிக்கொண்டிருப்பவரிடம் ஒப்படைக்கும் போது மிகவும் பலவீனமாக உணரும் மனது] சென்ற டைந்தால் ‘மேல் சாதியினர்’, ஆதிக்க சாதியினர்’ என்று எல்லாப் பிரச்னைக்கும் இப்படிச் சாடுவதே ‘சகல ரோக நிவாரணி’ என்ற கண்ணோட்டத்தைக் கொண்ட ’நட்சத்திரப் பேச்சாளர்கள்’, காரிலும் விமா னத்திலும் விழா அரங்கிற்கு வருகை தந்திருப்பவர் கள் மேடையில் முழங்கிக்கொண்டிருப்பார்கள்.

மேலும், கூட்டத்தில் ‘நட்சத்திரப்பேச்சாளர்கள்  முன் வைக்கும் கருத்துகள், தீர்மானங்களில் ஏதேனும் ஒன் றோடு நாம் முரண்பட்டாலும் கூட ஆதிக்க வாதிகள், பழமை வாதிகள், அடிப்படைவாதிகள், சமூகப்பிரக் ஞையற்றவர்கள்  போன்ற  முத்திரைகள் சரமாரியாக நம்மீது குத்தப்பட்டுவிடும். இந்தப் போக்கின் காரணமாகவே ’கூட்டங்களுக்குப் போகாமலிருந்து விடுவதே மேல் என்று ‘மத்திய தர மனோ பாவக் காரர்கள்’ பலருக்குத் தோன்றவிடுகிறது.

இப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி தில்லியில் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவு கொடூரமான முறையில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறாள். குழந்தையின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, சிறிய புட்டி என்று செருகப்பட்டு, அவள் கழுத்து நெரிக்கப்பட்டு 40 மணிநேரங்கள் சோறு, தண்ணியில் லாமல் துடித்துக்கிடந்திருக்கி றாள் சிறுமி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறாள். இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பவர்கள் இருபது இருபத்திரண்டு வயதான இளைஞர்கள்.

அந்தச் சிறுமிக்காக தில்லியில் மீண்டும் மக்கள் திரண்டெழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டி ருக்கிறார்கள்.பிரதமர்,சோனியாகாந்தி வீடுகள் முற்று கையிடப்பட்டிருக்கின்றன. காவல்துறையினரின் தடுப்புகளையும்,  தடியடிகளையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

‘இதற்கு முன் எத்தனையோ சிறுமிகளுக்கு இத்த கைய கொடுமை நிகழ்ந்தபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று இப்பொழுதும் சில சமூகப் பிரக்ஞையாளர்கள் தமிழ் மண்ணிலும், பிற வேறு நிலங்களிலும் கூட அறிவுபூர்வமாகக் கேள்வி யெழுப்பக் கூடும். May be, with the best of intentions or may be with some hidden agenda. எப்படியாயினும், பாலி யல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…

சமீபத்தில் நடந்தேறியுள்ள ஆய்வொன்றின்படி  ’சிறு வர்-சிறுமிய ரு’க்கான காப்பகங்கள் பலவற்றில் இத் தகைய பாலியல் வன்கொடுமைகள் வாடிக்கையாக, அந்தக் குழந்தைகளைப்பாதுகாக்கும்பொறுப்பிலுள் ளவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழ கத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள  காப்பகம் ஒன்றில் அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் அவ்வாறு தனக்கிழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசுவ தையும் புதிய தலைமுறை தொலைக் காட்சி அலை வரிசையின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சி ஒளிபரப்பி யது. ஒவ்வொரு காப்பகத்திலும் அவசியமாக இருக்கவேண்டிய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப் பினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற  ‘கண்கா ணிப்புக் குழு’ அறவேயில்லாத நிலையை அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 

சமீபத்தில் CNN-IBN செய்தி அலை வரிசையில் தில்லி யில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன் கொடுமை குறித்து ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் ‘வளரிளம் பருவத்தினரையும் சரி, வளர்ந்த ஆண்க ளையும் சரி, இத்தகைய கொடூரச் சிந்தனைகளையும் செயல்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதில் சின்னத்திரை, வெள்ளித் திரைகள் முன்வைக்கும் பெண் பிம்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பங்கேற்ற உளவியலாளர்கள் கருத்துத் தெரி வித்தது கவனத்திற்குரியது. 


இந்த சம்பவம் தொடர் பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஊடக வியலாரை அங்கிருந்த ஒரு பள்ளிப்பேருந்தில் அமர் ந்திருந்த மாணவர்கள் கொச்சையாக கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் ஒளிபரப்பட்டது. இதிலிருந்து, பள்ளிகளில் பெண் குறித்த, நல்லொ ழுக்கம் குறித்த விழிப் புணர்வும், நுண்ணுணர்வும் மாணவர்களிடையெ பரவலாக்கப்படப் போதுமான கவனமும், முயற்சிகளும் கல்விக்கூடங்களில் மேற் கொள்ளப்படுகின்றனவா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர் ந்து அதிகரித்த வண்ணம். அவ்வாறே அரசியல் சார், சமூகம்சார் சீர்கேடுகளும். இந்நிலையில், இவற்றைக் கண்டித்து உருவாகும் எதிர்ப்பியக்கங்களை அக்கறை யோடல்லாமல், எள்ளிநகையாடுவதாய், மதிப்பழிப் பதாய் விமர்சனம்செய்வதைக் காட்டிலும், இவற்றை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தில்லியில் நடந்த வன்கொடுமைபோன்றசமூகச்சீர்கேடுகளை வேரறு ப்பதற்கான வழிவகைகளை முனைப்போடு கண்ட றிந்து prevention is better than cure என்ற அளவில், இனி இத்தகைய வன்கொடுமைகள் நடவாதிருக்க சமூகத் தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து குர லெழுப்பத் தேவையான அணுகுமுறைகளைக் கைக் கொள்வதே ஏற்புடையது; இன்றியமையாதது.





Saturday, July 27, 2013

நாள்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

               ரிஷியின் கவிதைகள்

நாள்கள்


1. ஒரு நாள்

ள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது
கொள்ளிவாய்ப் பிசாசாய்.
கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி.
திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம்
 கரை மீறும் ஆத்திரம். 
பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய்
விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில.
திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத்
துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் ஹிட்-லிஸ்ட்’.
இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்....
கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ  ஒரு பொருட்டில்லை யெப்போதும்   _
விருப்பம்போல் கருப்பொருளைத் திரிக்கத் தெரிந்தால் போதும் 
கொய்துவிடலாம் எளிதாய் வேண்டுமட்டும் தலைகளை....


2. இன்னொரு நாள்

ன்று இணைய இதழைத் திறந்ததும் இதயமே நின்றுவிட்டதுபோல்..
கதை கவிதை கட்டுரை யெதிலும் இடம்பெறவில்லை ஓரெழுத்தும்.
எல்லாம் வெள்ளைமயம்.
கொள்ளை போய்விட்டதே எல்லாம்.... அய்யோ,
இனி எதைச் சாட, எதைக் குதற…?  
_ரொம்பவே பதறித்தான் போய்விட்டார் பாவம்.
குய்யோ முறையோ வெனக் கூவத் தொடங்கியது உள்.
மறுகணம் பிறந்தது ஞானம். ஐயோடீ!
கைபோன போக்கில் பதிவு செய்யும் கருத்துக்கு
கதை கட்டுரையில் எழுத்துகள் இருந்தால் என்ன,
இல்லாவிட்டால்தான் என்ன?
ஆனபடியால் வழக்கம்போல்,
இல்லாத படைப்புகளையும்
சொல்லியடிக்கத்தொடங்கிவிட்டார்
வில்லாதிவில்லனார்;
பின்னூட்டப் பவர் ஸ்டார்‘!


3. அன்றொரு நாள் 

இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று
தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள்
அந்த நவீன தமிழ்க்கவிஞன்.

செலக்டிவ் அம்னீஷியாவில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான்.

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள்.

அண்டசராசரமெங்கும் விண்டில கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன!

வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய மரியாதையோடு
அந்த வரலாற்றாசிரியர் குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்:

அவர் எழுதிய ஒரு கவிதையும் நினைவுகூரப்படுவதில்லை.

விலக்கப்பட்ட கனியான கவியிலிருந்து கிளர்ந்தெழும் வித்துகள் தமிழ்க்கவிதை வெளியெங்கும் பிறவிப்பெருங்கடலாய்!


4. என்றொரு நாள்

தக்க இடத்தில் தூய தமிழ்; தேவைப்பட்டால் சமசு[?]கிருதம்.

அரசுப்பணம் ஆயிரங்கோடி விரயமாகலாம், 2ஜி, கல்மாடி, நிலக்கரியில்.

ஆன்ற மொழிபெயர்ப்புப்பணிகளுக்குப் பயன்படலாமோ?  அநியாயம்.

ஆங்கிலப்புலமை யிங்கே யாருக்குமில்லை; தான் பெற்ற இன்பத்தை ஊருக்குக் கைமாற்றும் மாண்புடையோர் இல்லவே யில்லை.
என்றவாறு புறப்படும் வன்மம்நிறை வசவுகள்.

இங்கே உழைப்புக்கேற்ற ஊதியமின்றி பிழைத்துவரும் இனம் படைப்பாளிவர்க்கம்.

இதை எள்ளிநகையாடுவோரை உன்மத்தர் என்னாமல் வேறென்ன சொல்லியழைக்க?

விடங்கக்கும் நாகங்களைக் கண்டால் விலகிவிட வேண்டுமா? நையப்புடைத்துவிட வேண்டுமா?

ஐயம் தீர்ந்தபாடில்லை.

என்றொரு நாள் எழுத ஆரம்பித்த கவிதை.

நீளும் இன்னும்.


 5. முன்பொரு நாள்

சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை
சிலருக்கு கயமை;
சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி;
சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்;
சிலருக்கு அறவியல் சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு ஞானரதம்;
சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம்
காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம்
உறவில் துறவு, துறவில் உறவு
அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _

ஒரு சொல் ஒரு இல் ஒரு வில்லுக்கப்பால்
விரி பரிமாணங்கள்.....

அறிந்தவரையான க்வாண்டம் தியரிப்படி _
இருந்தேன் நானும்
வனவாச ராமன் வாழ்ந்துமுடித்த
முன்பொரு நாள்!

 
6. பின்பொரு நாள்

மரங்களிடமும் மனம்விட்டுப் பேசும் அன்புராமன்கள் -
மற்றவரெல்லாம் முட்டாளென் றேசும் அகங்கார ராமன்கள் -
பலராமன்கள் - பலவீன ராமன்கள் -

சொல்லிலடங்கா ராம ரகங்கள்......

அகமும் புறமும் செறிவடர்ந்து, திறந்தமுனைகளோடு
தன்னை வாசகப்பிரதியிடம் ஒப்படைக்கும் நவீன தமிழ்க் கவிதையாய்
கைத்தட்டலோ, கல்லடியோ சித்திரத்தன்ன செந்தாமரை மனம் படைத்த
ராஜாராமனின் கவித்துவம்
இத்தரையில் எத்தனையோ ஆண்டுகளுக் கொருமுறை பூக்கும்
குறிஞ்சிமலராய் புலப்படும்
பின்பொரு நாள்.

0


சாத்தானும் சிறுமியும் ’யூமா வாசுகி’யின் கவிதைத்தொகுப்பு குறித்து.... _ லதா ராமகிருஷ்ணன்

சாத்தானும் சிறுமியும்

யூமா வாசுகியின் கவிதைத்தொகுப்பு குறித்து....
_ லதா ராமகிருஷ்ணன்

[May. 18 2013இதழ் 26 மலைகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை]



கல்லூரி நாட்களில்தாகூரின் கீதாஞ்சலி கவிதை கவிதைத் தொகுப்பைப் பற்றிய தனது முன்னுரையில் W.B. யேட்ஸ் என்ற புகழ்பெற்ற கவிஞர், ‘பேருந்தில் பயணமாகும்போது கீதாஞ்சலிக்  கவிதைகளைப் படிப்பது தன் வழக்கம் என்றும் அப்படிப் படித் துக்கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியா மல் கண்களில் நீர் நிரம்பிவிடும் என்றும் எழுதியிருந்ததைப் படித்து, ‘இது என்ன மிகையான விவரிப்பு என்று மனதில் எதிர் வினையாற்றி அதைப் பொய்யென்று நிரூபிப்பதாய் பேருந்தில் கீதாஞ்சலி கவிதை களைப் படிக்கத் தொடங்கிஒவ்வொரு முறையும் அதேவிதமாய் கண்களில் நீர் நிறைந்துவிடும் ஒருவித மனம் வெளுத்தல்’ அனுபவத்தைப் பெற்றதுண்டு.

கவிஞர் யூமா வாசுகியின்  சாத்தானும் சிறுமியும்  கவிதைத்தொகுப்பைப் படித்தபோதும் அதேவிதமான நெகிழ்ச்சி யும் மனம் வெளுத்தலும்’ ஏற்பட்டது.

நவீன தமிழிலக்கிய வெளியில் கவிதைகதைகுழந்தை இலக்கி யம்மொழிபெயர்ப்பு என பல பிரிவுகளிலும் ஆரவாரமில்லாமல் தடம் பதித்திருப்பவர் தோழர் யூமா வாசுகி. கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவருபவர்தரம் நீர்த்துப் போகாமல் இயங்கிவருபவர்.

அவருடைய இரவுகளின் நிழற்படம்’, ‘என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளிலிருந்து  தேர்ந் தெடுத்த கவிதைகள் இடம்பெறும் இத்தொகுப்பு – சாத்தானும் சிறுமியும் – நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் நலவாழ்வுக்காக மனமுருகஒரு ஆத்மார்த்தமான பிரார்த்த னையே போல் குரல் கொடுக்கின்றன.

 இந்தக் கவிதைகளில் இடம்பெறும் குழந்தைகளைஅவர்களின் அற்புதக் கனவுகளைஅவை குரூரமாகக் கலைக்கப்படும் அவ லத்தைகுழந்தைகளுக்கு நாம் அளித்திருக்கும் சீர் கெட்ட சமூகச் சூழலைஅதற்குள்ளாக குழந்தைகள் தங்களுக்கென்று கட்டி யெழுப்பிக் கொள்ளும் மாயக் கோட்டைகளைகுழந்தைகளின் பல முகங்களைசிரிப்பின் வாசனையைஅழுகையின் வேதனையை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்அவற்றின் மத்தியில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆனால்நம்முடைய வாழ் வின் அவசரங்களில் அவற்றை நின்று நிதானித்து உள்வாங்கிக்கொள்ளப் பொழுதற்றுபொறுமை யற்றுகடந்துபோய்க் கொண்டேயிருக்கிறோம். அவ்வப்போது குற்ற வுணர்வின் கனம் தாங்க முடியாமல் போவதும் நடக்கிறது.

இத்தனை விஷயங்களையும் யூமா வாசுகியின் சாத்தானும்சிறுமி யும் நமக்கு மிக நுட்பமாகப் புலப்படுத்துகிறார்கள். குழந்தைக ளின்பெரியவர்களின் பல முகங்கள் இந்தக் கவிதை களில் துல்லியமாக வெளிப்படுகின்றன.

குழந்தைகளின் அண்மையில் குதூகலங்கொள்ளும் கவிமனம் அவர்களின் ஏமாற்றங்களிலும்காயங்களிலும் தீராத வலியுணர்கிறது.

 ‘பத்து வயது கூட நிரம்பாத மீனா பக்கத்து வீட்டில்

வேலைக்காரியாகப் பாடுபடுகிறாள்

 

அரைத்த மாவு நிரம்பிய வாளியை எங்கிருந்தோ

சுமக்கமுடியாமல் கொண்டுவருகையில்,

என் தங்கையாயிருந்து திருவிழா களித்து

பரிசுகளுடன் திரும்புவதாய் சமாதானங்கொள்வேன்

என்று தொடங்கும் தொகுப்பின் முதல் கவிதை தொடங்கி இறுதிக் கவிதை வரைபல்வேறு சமூக அவலங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை மனசாட்சி யென்னும் நீதிதேவனின் முன்னிலையில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி மௌனமாய்க் கேள்வி கேட்கிறார்கள்தீர்ப்ப ளிக்கிறார்கள். சமயங் களில் நம்மைக்கைபிடித்து அழைத்துச் சென்று அவர்களுக்காகவும்நமக்காகவும் நம் கண்களில் நிறைந்து வழியும் கண்ணீரை அன்போடு துடைத்துவிட்டு அதியழகாய்ச் சிரிக்கிறார்கள்!

 பூமொழிமதுக்கடையில் உருளும் கோலிக்குண்டுகள்சாத்தானும் சிறுமியும்மாலை நேர வீடுஒரு மனிதன் முய லான போதுஈரம்மற்றும்தலைப்பிடப்படாத சில கவிதை கள் என இருபது இருபத்தியிரண்டு கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் அனாவசியம் அல்லது  மெலோடிராமா’ என்று சொல்லத் தக்க ஒரு வரியோவார்த்தையோ கிடையாது. நம் அடிமனதை ஊடுருவி மனம் வெளுக்க’ வழி செய்யும் கவிதைகள் இவை.

பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்

உன் குழந்தை என் கால்களைத் தொட்டு

கை மலர்த்தும்படி செய்தாயே,

பரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது

எவ்வளவு பாடுபட்டது

அதைவிடவும் நீ என்னை

முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்

 _என்று கூறுவதிலுள்ள பரிதவிப்பை வாசக உள்ளம் ஒவ்வொன் றிலும் கண்டிப்பாக பரிவதிர்வை உண்டாக்கும்.

 ஏதொரு குழந்தையும்

எங்கோ கனவில் துடித்தழுதால்

எப்படிப் போய்த் தேற்றுவேன் கர்த்தரே

_ என்று எத்தனை கலங்கிப்போகிறது கவிமனம்! இந்தத் தொகுப்பி லுள்ள கவிதைகளை வாசிக்க வாசிக்க கவிமனதின் பரிதவிப்பு நம் மனதில் பாரமாய் இறங்கிக்கொண்டேபோகிறது. [இந்த மன பாரத்தை உணரவில்லையானால் நாம் மனிதனாயிருந்து என்ன பயன்?]

 ஆனால்இதே குழந்தைகளே கவிஞரின் மனபாரத்தை மயிலிற காக்கி விடுபவர்களாகவும் இருக்கிறார்கள்!

 ‘இன்றைய பகலெல்லாம்

சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தவன் யார் என்று

அகால இரவுக் கனவில்

தேடியலைந்தது ஒரு குழந்தை.


  _ என்று தொடங்கும் கவிதை


  நீ தானே?” என்றது குழந்தை.

ஆம்!” என்றேன் நான்.

தூக்கச் சொல்லிக் கை விரித்தது.

அள்ளி அணைத்துக்கொண்டேன்.

கனவின் கடைசி நொடியில் ஒரே ஒரு முத்தம்.

விடிந்தது.

காலையில் மனம் தெளிந்திருந்தது

 என்று முடிகிறது.


ஓவியர் மணிவண்ணனின் கைவண்ணங்கள் யூமா வாசுகியின் கவிதைகளுக்கு உரிய மரியாதை செய்வதோடு தம்மளவில் தனிக் கவிதைகளாகவே விளங்குகின்றன எனலாம்! என்றாலும்குழந்தை களைப் பற்றிய கவிதைகள் இடம்பெற்றிருக்கும் தொகுப்பில் குழந்தைகளின் முகபாவங்களும்அசைவுகளும்இடம்பெற்றிருந் தால் நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றியது. அப்படி இருக்கலாகாது என்று பிரக்ஞாபூர்வமாகவே முடிவெடுத்திருக்கக் கூடும் கவிஞரும் ஓவியரும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

 தொகுப்பிற்கு எழுத்தாளர் கவின்மலர் அத்தனை அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார்! முன்னுரையின் அரசியல்’  குறித்து நிறைய எழுதலாம். ஆனால்கவின்மலரின் முன்னுரை அன் பும்தெளிவும் நிறைந்த ஒரு வாசக மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது. 

 “உயிரை உலுக்கும் வரிகளை எழுதிவிட்டு யூமா வாசுகி அவர் பாட்டுக்குத் தன் வேலை யைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் கிரீடத்தை கீழே வைக்காமல் சுமந்து கொண்டு திரிகிறவர்கள் இருக்கும் இச்சமூகத்தில் நான் எழுத்தாளன் என்கிற கர்வமோகவிஞன் என்கிற செருக்கோ அற்ற எளிமை யான மனிதராகவே எப்போதும் இருக்கும் யூமாவை வாழ்த்தும் தகுதி எனக் கில்லை. வாசிப்பின் மீது தீராத தாகத்தை ஏற்படுத் திய யூமா வாசுகி என்கிற அற்புத மனித ருக்குஅவருடைய எழுத்துக்குஅவர் அளித்திருக் கும் இந்தக் கவிதைத் தொகுப்பிற்குப் பரிசாக அல்ல…. கைமாறாகபெரும் அன்பும்முத்தங்களும் தவிர வேறெதுவும் கைவசம் இல்லைஎன்று கவின் மலர் முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொரு வாசக மனதிலும் கண்டிப்பாக எதிரொலிக் கும்!

 

 

 

000