LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, January 31, 2015

PRAYER

PRAYER


Am I a believer or non-believer?
Whom should I believe? Whom should I believe not?
Am I to believe belief?  Am I to dis-believe?
Am I to believe or/and disbelieve
Everything or Something
At times everything becomes something
And vice-versa…..
Sea-saw I go up and down the scale of belief
Sea saw I long ago
To see again I must go
So belief also…
How is life?
So so…
So and so
said something about You me everybody
Buddy or enemy he or she is?
Bull-shit
Miss or hit _
should keep my mind fit
For what?
To change the sad lot
 of a twenty year old lad….
In ICU or general ward?
How nice it would be if we can
have the power of resurrection?
The pain of uncertainty …
hovering over the head of a hardworking noble lady
full of cheer, a well-wisher 
of not just me but the whole of humanity
Her son _
Her stars moon and sun…
gone are the days of fun?
Are his days numbered? Oh when?
Let it not be so
A face in the crowd
In one shuffle
Moves so close
Endearingly
Why so?
Eyes so full of tears
At this hour of midnight
 utterly paralyzed
even half-baked poetry providing relief
In willing suspension of disbelief
I beseech thee, gods of all religions
To come to her rescue
Save her boy , will you?
Please do…..





Thursday, January 29, 2015

Monday, January 26, 2015

நாடெனும்போது...

கவிதை

நாடெனும்போது.....

                  ரிஷி


1.

நந்தியாவட்டை,  மந்தமாருதம்
வந்தியத்தேவன்,  சொந்தக்காரன்
சந்தியா விந்தியா முந்தியா பிந்தியா

_ எந்த வார்த்தையை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்

”இந்தியா என் தாய்த்திருநாடு; வந்தனத்திற்குரியது”
என்று
நாக்குமேல் பல்லுபோட்டுச் சொல்லிவிட்டாலோ
வில்லங்கம்தான்.

தடையற்ற தாக்குதலுக்காளாக நேரிடும்.
எச்சரிக்கையா யிருக்க வேண்டும்.

2.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே, அவர் முந்தையர் ஆயிரம் _”

“_ மேலே பாடாதே. என்னவொரு தன்னலம்
உன் பெற்றோர் மட்டும் நலமாயிருந்தால்
எல்லாம் வளமாகிவிடும். அப்படித்தானே?”

_தவறாமல் வந்துவிழும் தப்படி யிப்படி.

3.

இந்தியா சகதி என்றார்.
வெறெங்கு சென்றாலும் நாம் இரண்டாந்தரக் குடிகள்  அல்லது
அகதிகள் தானே என்றேன்.
என்ன தகுதி உனக்கு மனிதநேயம் பேச என
மிகுதியாய் வசைபாடிச் சென்றுவிட்டார் வந்தவர்.

4.

”நம்பத்தகுதியற்றதாய் தன்னை மீண்டுமொருமுறை நிரூபித்துக்கொண்டுவிட்டது இந்தியா”
என்று வெம்பி வெடித்ததொரு மின்னஞ்சல்.

முப்பதாவது முறையா?
முந்நூற்றியைம்பதாவதா?

”தப்பாது எப்போதும் ஏமாற்றியே வரும் நாட்டை
இப்போதும் எதிர்ப்பார்ப்பதும் ஏன்?” எனக் கேட்டாலோ
மாட்டிக்கொள்வீர்கள் முடியா வசைப்பாட்டில்.

5.

”ஆயிரம் காதங்களுக்கப்பால் இறந்தவர்களுக்காக அழுகிறாயே நியாயமா?”
என்று வாரந்தோறும்
ஒளியூடகத்தில் முழங்கிக்கொண்டிருக்கிறார் ஒருவர்
அபிமானமும் வருமானமும் கொண்டு.
எல்லைப்புறத்தில்
மூன்றாம்பேருக்குத் தெரியாமல்
மடிந்துகொண்டிருப்போரில்
தென்கோடி குக்கிராம தனபாலும் உண்டு.

6.

போராளிகள் புரட்சியாளர்களின் நாட்டுப்பற்று போற்றத்தக்கது.
நீயும் நானும் கொண்டிருந்தால் அது நகைப்பிற்குரியது.

”_ எனவே, தேர்தலைப் புறக்கணியுங்கள்”
என்று திரும்பத் திரும்ப அறிவுறுத்திவருகின்றன
சில குறுஞ்செய்திகள்.
மாற்றென்ன என்று கேட்டால்
தூற்றலுக்காளாக வேண்டும்.

”மீள்நிர்மாணம் குறித்து மலைப்பெதற்கு
முதலில் கலைத்துப்போட்டுவிட வேண்டும்”.

7.

’இந்தியா என்றால் எந்தை உந்தையல்ல;
விந்தியமலையுமல்ல _
மத்தியில் குந்தியிருக்கும் அரசு’ என்பார்
வந்துபோகும் நாளிலெல்லாம் உதிர்த்துக்கொண்டிருக்கும்
வெறுப்பு மந்திரத்தில்
அந்தப் பிரிகோடு அழியும் நிலையை
என்னென்பாரோ…..?



 0

PROUD TO BE AN INDIAN!



















Thursday, January 22, 2015

[விமர்சன] வெறுமாண்டி _ சிறுகதை

சிறுகதை
[விமர்சன] வெறுமாண்டி
அநாமிகா
[கவிதாசரண் ஏப்ர-ஜூன், 2005இல் வெளியானது]






’விமர்சன வீரன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந் தால் அவர் வலுக்கட்டாயமாக மறுத்திருப்பார். வெறும் எதுகை மோனைக்காக ‘கட்டாயமாக’ என்பதை நான் ‘வலுக்கட்டாயமாக்கியிருப்பதாக உங்கள் வாசகப் பிரதிக்குப் பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. சிறு பத்திரிகைகள், பெரும் பத்திரிகைகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருபவர் நீங்கள் என்ற வகையில் ‘கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் ‘வலுக்கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் இடையேயான வேறுபாடு உங்களால் கட்டாயமாக உள்வாங்கப்பட் டிருக்கும். கவனிக்கவும் _ கட்டாயமாக; வலுக்கட் டாயமாக அல்ல. வீரன் என்பது கிட்டத்தட்ட பழந் தமிழ்ச்சொல். வெகுஜனங்களோடு, திராவிடக் கட்சி களோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சாத்தியப் பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘விமர்சனச் செம்மலு’ம் வலுக்கட்டாயமாக மறுதலிக்கப்பட்டி ருக்கும். ‘விமர்சன வள்ளல்’ என்பதும் வெகுஜன வாடை வீசுவதாக இருந்தாலும் அது தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் உள்மனத் திற்குப் பட்டது. எட்டாவது அதிசயம், ஒன்பதாவது அதிசயம் என்பதாக இன்று புதிதாகச் சேர்க்கப்படு வதைப் போல், பாரி, ஓரி, காரி முதலான கடையேழு வள்ளல்களின் வரிசை எண்ணிக்கையை இடம் மாற்றுவதால் தன் பெயர் இனி வரலாற்றில் இடம்பெறலாம்.

அதுவும் எப்படிப்பட்ட வள்ளன்மை! வேண்டியவர்களுக்கு அதீதப் புகழுரை களும், வேண்டாதவர்களுக்கு அதலபாதாளக் குழிகளுமாய் இரு துருவ சஞ்சாரங்களுக்கிடையேயான விரிபரப்பு அவருடைய வள்ளன்மையின்  அளவு. அந்தக் காலத்திலிருந்து அவர் ஆடிக்கொண்டிருக்கும் ’கூத்தை’ பம்மாத்து என்று சொல்லுகிறவர்கள் ஆத்தோடு போவார்கள். அதாவது, நதியில் முங்கிச் சாவார்கள். அப்படி நேரிடையாகச் சொன்னால் ‘சாப மிடுகிறவர்’ என்று நம்மை மற்றவர்கள் சரியாக, எளிதாக அடையாளங் கண்டு, காட்டிவிடுவார்கள். நாம் இலக்கியத்தில் இருண்மையைப் பழிக்கலாம். ஆனால், உள்ளத்தின் இருளைப் போற்றிப் பேணிவர வேண்டும். மற்றவர்க ளையும் அவ்வாறே நம் மனதின் இருளை மேதைமையாக இனங்காணப் பழகச் செய்ய வேண்டும்.

இதற்கென்று விமர்சன வீரன், இல்லை, விமர்சனச் செம்மல், இல்லை விமர்சன வள்ளல், இல்லை, விமர்சன மேதை, இல்லை, விமர்சனச் சக்கரவர்த்தி, இல்லை, விமர்சன வைபோகன், இல்லை, விமர்சன வித்தகன், இல்லை, வி….(அ) வி…., (அ) வி….., (அ) வி….. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பேசப்படுவோர் பெருமையைப் ஏசாமல், பேசுவோன் புகழைப் பறைசாற்றுவதாக ஆகிவிடும். அது முறையல்ல. அதைவிட முக்கியமாக, அது விமர்சனாதி பதியின் தனி பாணி. நான்காவது அல்லது ஐந்தாவது படித்த கட்சித்தொண்டர் ஒருவர், அல்லது, தொண்டர்களின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றிருப்பவர், ஹெலன் கெல்லரின் பிறந்த நாள் விழாவில் தனது உரையில் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு தரம் தன் தலைவருக்கு அடைமொழி களை உச்சரித்துத் தன்னை உயர்த்திக்கொள்ள முயல்வதைப் போல்(பல நேரங்களில் இந்த முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகி விடுமென்றாலும் விண்ணுலகில் அரைவட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற உண்மை நம் நினைவிலி ருந்து நீங்கிவிடலாகாது. சம்பந்தப் பட்ட ‘விமர்சன விற்பண்ணல்’ பேச எடுத்துக்கொண்ட புத்தகத்தைப் பற்றி, அதை எழுதியவரைப் பற்றி இரண்டொரு வரிகளும்,மற்ற வரிகள் பத்திகள், பக்கங்களில் தனது ஆப்பிரிக்கப் பயணம், அர்ஜெண்டீனியாப் பரிச்சயம் பேசப்படும் படைப்பாளி சின்னப்பையனாயிருந்த போது தன் மடியில் அமர்ந்து பம்பரம் கேட்டது (விமர்சனம் வசைபாடலாக இருக்கும்போது, ‘அந்தப் பையன் பள்ளிக்கூட வாத்தியார் கேட்ட ஒன்னாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க முடியாமல் முட்டி போட்டது’ என்பதாய் மூளை பிறவேறு அடுக்குகளி லிருந்து நினைவு களை வெளிக்கிளப்பும்) என்று தன் புராணமுமாய் பாடிவருவதன் விளைவா கவே ‘விமர்சனாழ்வார்’ என்ற பட்டமும் அவருக்குப் பரிந் துரைக்கப்பட்டது.

வழக்கொழிந்த நாட்டியக் கலைஞர்கள் சிலர் நடாப் பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பதைப் போல் இந்த ‘விமர்சனச் சித்தரு’ம் ஒரு பள்ளியை நாக்பூரி லும், இன்னொரு பள்ளியை நாகாலாந்திலும் திறந்திருக்கிறார். மூன்றாவது பள்ளி ‘நோய்டா’வில். விரை வில் ‘நியூயார்க்’கிலும் திறக்கலாம்.

அந்தப் பயிற்சிப் பள்ளிகளின் ஒரே பாடத்திட்டம் இதுதான்: நிர்வாணமாக ஒருவரைக் குதிரையில் ஏற்றி வலம்வரச் செய்வார்கள். பயிற்சி மாணவர்கள அந்த மனிதர் எந்த நிறத்தில் ஆடையணிந்திருக்கிறார், என்னவிதமான அணிகலன்கள் அணிந்திருக் கிறார் என்று கவனித்துப் பார்த்துச் சொல்லவேண் டும். அவர் ஒருவரே ‘விமர்சன விசுவரூபி’யாய்த் திகழும் காரணத்தால் பன்மையில் குறிக்கப்படுகிறார் ’ஆசிரியர்கள்’ என்பதாய்.  ஒருமை, பன்மை இலக்கணப் பிழைகளைக் கவிதைகளில் தோண்டித் துருவிக் கண்டெடுப் பவர்கள் இந்த ‘விமர்சன தேவனி’ன் ‘பன்மை’ அந்தஸ்தைப் பற்றிக் குரல் எழுப்புவதேயில்லை. எளிய கவிஞனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ள லாம். மேல்மட்டத்தாரோடு மோதாமலிருப்பதே நயத்தக்க நாகரிகம்.

ஒருமுறை கட்டுவிரியன் பாம்பைப் பற்றிய கதை யொன்று அந்த ‘விமர்சன சிங்க’த்தின் கைகளில் கிடைத்தது. வெகு கவனமாய், தான் அதுகாறும் நேர்கொள்ள, எதிர்கொள்ளவேண்டியிருந்த சட்டை யுரித்த பாம்பு, பெருமாளின் படுக்கைப் பாம்பு, சிவன்தலைப் பாம்பு, பல்பிடுங்கிய பாம்பு, மிருகக் காட்சிச்சாலைப் பாம்பு, மற்றும் நெடுஞ்சாலைப் பாம்பு, குறுக்குத் தெருப் பாம்பு என எல்லாவற் றையும் பட்டியலிட்டுக் காட்டி ‘இந்தப் பாம்பு மகோன்னதமாகச் சட்டையுரிக்கிறது என்று புக ழாரம் சூட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த கட்டுவிரியன், புத்தகத்தின் பக்கங்களிலிருந்து படம் விரித்தாடிக்கொண்டே வந்து ‘விமர்சனக் கோமகனை’க் கட்டிக்கொண்டுவிட்டது! ஆனால், மாணிக்கம் ஒன்றும் தராமல் வெறுமே ‘ஜங்கிள் புக்’ ‘மோகிளி’யிடம் கண்கிறங்கக் கிசுகிசுத்து வசியம் செய்ய முயலும் தளுக்குப் பாம்பைப் போல் நடந்துகொண்டு போய்விட்டதே என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டார் ’விமர்சன வாள்’. பல்லியின் வால் வெட்டப்படவேண்டியதே என்பார். ‘பல்லியும் முதலையே; முதலையும் பல்லியே’ என்பார். ஆனால், வெகு கவனமாக முதலையின் வாலை வெட்டுவது பற்றி மூச்சு விட மாட்டார். வெட்டுப்பட்ட பகுதி தன் கைக்கு வருமா, அதைத் தன்னால் விற்க முடியுமா, எவ் வளவு விலை பெறும் என்பதெல்லாம் திட்ட வட்டமாகத் தெரியாத நிலையில் எதற்கு முதலையின் வாலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப் பது! அவரால் வாழ்த்தப்பட்டவர்கள் அவரை ‘விமர்சனச் செங்கோலன்’ என, அவரால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் அவரை ’விமர்சனக் கடுங் கோலன்’ என்றார்கள். அதைப்பற்றி அவருக் கென்ன? விமர்சனச் சக்கரவர்த்தியோ, விமர்சனச் சர்வாதிகாரியோ _ பீடம் கிடைத்துவிடுகிறது. அது தான் முக்கியம்.

முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், தன்னி கரற்ற விமர்சனப் பயிற்சி மையம் நடத்திவந்த அவரே அந்தப் பள்ளியின் பாடபுத்தகங்களுக்கான கோனார் உரை நூல்களையும் எழுதினார். ‘ஊரெங் கும் நடப்பது தானே, இதில் என்ன முரணைக் கண்டோம்? வெங்காயம்’ என்று நீங்கள் சொன் னால் எதிர்த்துச் சொல்ல என்னிடம் எதுவு மில்லை என்பது உண்மை. ஆனால், ’விமர்சன வேந்தனி’ன் பயிற்சி மைய அடிப்படைக் கோட் பாட்டின்படி பார்த்தால் ‘என்னிடம் எதுவுமில் லா ததே என்னை எல்லாம் இருப்பவராக்குகிறது அல் லவா!

‘விமர்சன பூபதி’யின் [சம்பந்தப்பட்ட திரைப்படத் தில் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடல் எப்படி கதைக்கு சம்பந்தமேயில்லாத போதிலும் சக்கை போடு போட்டது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவும்] தனித்தன்மை வாய்ந்த நபும்சகத்தனத்தை, இல் லையில்லை, நிபுணத்துவத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு ஒருநாள் சூரியனும் நிலாவும் அவரைத் தேடி பூலோகம் வந்தார்கள். அவர்கள் வந்த சமய த்தில் அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தனது தனித்துவம் வாய்ந்த தராசுக்கோலில் நிறுத்திப் பார்ப்பதில் மும்முரமாய் இருந்தார். முப்பது படைப்பாளிகள் கொண்ட நூல் இது. தொகுப்பாசி ரியர்கள் தங்களது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள் :”சிலர் அவர்களுடைய சிறு கதைகளைத் தர விரும்பவில்லை. சிலருடைய முகவரிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னொரு தொகுப்பில் இதில் காணும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வோம்.”

தப்புக்குறியைத் தாளின் ‘நடுமையத்தில்’ போட்டு விட்டு எழுதத் தொடங்கினார் ’விமர்சன வேதா ளம்’. [ஒரு விஷயம், வேதாளம் என்பது வஞ்சப் புகழ்ச்சியல்ல. அதே சமயம் இந்த விமர்சனப் பெருச்சாளி’ வஞ்சப் புகழ்ச்சிக்குப் பெரிதும் தகுதி வாய்ந்தவரே]. ’இங்கே விடுபட்டுப் போயிருக்கும் படைப்பாளிகள் ஏன் இடம்பெறவில்லை? நான் அவர்களை எப்படியெல்லாம் எள்ளிநகையாடியி ருக்கிறேன் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்… இப்பொழுது அவர்கள் உரிமைக்காக நான் போராடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்… இதில் இருபது முப்பது நல்ல படைப்பாளியைத் தொகுப்பாசிரியர்கள் புறக்க ணித்தது ஏன்? இதிலுள்ள உள் நோக்கம் என்ன? (மற்ற இருபது பேரைக் குறிப்பிடவில்லையே என் கிறீர்களா? அதனால் எனக்கு என்ன பயன், மன விகாரம் பிடித்தவர்களே!)

இப்படியே இருபது வரிகள் நீட்டிய பின், சிறு கதைக் கோட்பாடு என்பதாய் இரு வரிகளைப் போட்டு, ‘அடுத்த முறை அதிக கவனத்தோடு தொகுப்பு உருவாக்கப்படுவது அவசியம்,’ என்ற ‘அக்மார்க்’ வாசகத்தோடு(அப்படியொரு கோட் பாடே கிடையாது என்று யார் மறுத்தாலும், அது வெளியாக குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகி விடும். தவிர, இப்பொழுது வெளியாகும் இலக் கிய இதழ்களில் சிலபல நின்றுபோய்விடும் வாய்ப்புகளும் அதிகம்.)

தன்னுடைய திருத்தமான மனக்கணக்கை சிலா கித்தவாறே, பேனாவை மூடி, நெட்டி முறித்து நிமிர்ந்தபோது, எதிரே நிலவும் சூரியனும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உங்களுக்கு?”

“எங்களைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இங்கு வந்தோம், ‘விமர்சன சற்குருவே’,” என்றது நிலவு.

“எத்தனை பயபக்தியோடு பேசுகிறாய்!” என்று மகிழ்ந்து கூறினார் ‘விமர்சன சீமான்’. “என்னு டைய பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றால் விமர்சன ஏணியின் மேல்படிக்கு நீ விரைவில் சென்றுவிடலாம்!”

“மேலே இருந்து அலுத்துப்போய்த் தானே இங்கே வந்திருக்கிறோம்” என்று நறுக்கென்று சொன்னது சூரியன்.

“ஆவேசப்படாதே, அமைதியாயிரு.” என்றார் விமர் சன விற்பன்னர்.

“நான் அழுத்தமாய் என் கருத்தைப் பதிவுசெய்வது உனக்கு ஆவேசமாய் படுகிறது. உமி மெல்வதாய் எப்பொழுதும் ‘கிசுகிசுப் பேச்சே உனக்குப் பழகி விட்டதால் அப்படித்தான் தோன்றும்.”

“அப்படியா சொல்கிறாய்?.... உன்னைப் பற்றிய என் மதிப்புரை எப்படி யிருக்கும் தெரியுமா?”

“சொல், கேட்கிறோம்,” என்று சமாதானப்படுத்து வதாய் மென்மையாய் கூறியது நிலவு.

“தேவைக்கு அதிகமாய்க் கதிர்களைக் கொட்டி உயிர்களைச் சூறையாடுகிறான் சூரியன்.”

“இது மிகவும் ஒருதலைப்பட்சமான மதிப்புரை.” என்று கோபமாகக் கூறியது சூரியன். “நான் பகலை உங்களுக்கு வரவாக்குவதில்லையா? பயிர் வளர்ப்பதில்லையா? எத்தனை செய்கிறேன் உங்களுக்கு.”

“அதெல்லாம் நீ எனக்கு ‘சலாம்’ போட்டால் தான் பட்டியலிடப்படும். சரி, அங்கே பார், அதோ ஆரோ கணித்திருப்பவர்கள் எத்தனை நிறங்களில் உடை தரித்திருக்கிறார்கள், சொல்.”

கூர்ந்து கவனித்துப் பார்த்துவிட்டு, பின், உதடு களைப் பிதுக்கியது சூரியன். “எல்லோரும் நிர் வாணமாய்த்தானே இருக்கிறார்கள்.”

“என்ன அநியாயம், எதைப் பார்த்தாலும் நிர்வா ணத்தையே நாடும் ‘மஞ்சள் பத்திரிகை’க் கண்கள் உனக்கு.”

“நான் நிர்வாணத்தைக் கேவலப்படுத்தவில் லையே.”

“அப்படியானால், நிர்வாணத்தை உயர்த்திப் பிடிக் கிறாய், அப்படித்தானே? அக்கிரமம்.”

“அவர்கள் உடையணிந்திருப்பதாய் நீ கூறுகிறாய். இல்ல என்கிறேன் நான். இதில் எதற்கு ஏதேதோ பேசுகிறாய்?”

“நீ ஒரு ஒளிக்கீற்றாய் இருந்தபோது நான் படம் பிடித்திருக்கிறேன். அந்தப் படம் ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிட்டது என்பது ஒரு விஷய மில்லை. ஆனால், உன்னை நான் பொருட்படுத்திப் புகைப் படம் எடுத்ததற்கான துளி நன்றியுணர்வு கூட உன்னிடமில்லையே,” என்று ’விமர்சனப் பேரொளி’ வினவ,

“எல்லாம் அந்த விமர்சனக் கழிவாளர் வெளி யேற்றிய நச்சுவாயுப் படலம்தான், நீங்காத கறை யாக என்மேல் படிந்துவிட்டது. சும்மாவா சொல் கிறார்கள், ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிச் செல்’ என்று….”

“அப்படியே விட்டுவிடவும் முடியாதே. கேட்க ஆளில்லை என்று காட்டுச்செடியாய் வளர்ந்து விடுவார்கள். அவ்வப்போது சுட்டெரிக்க வேண்டி யதும் அவசியம். அதோ, அங்கே பார்…”

கதிரவன் கீழ்முகமாய் தன் ஒளிக்கீற்றைக் கொண்டு சுட்டிக்காட்டிய இடத்தில் ஓர் ‘இடை நிலை’ இதழின் நடுப்பக்கம் விரிந்துகிடக்க, அதன் அரைவட்டப்பகுதியில் ‘விமர்சன வீர்யன்’(ஓரள வுக்குப் பின்- நவீனமாக இருப்பதால் ‘விமர்சன விதூஷகர்’ புன்னகைத்துக்கொண்டிருக்க) என்ற வார்த்தைகளின் கீழான புகைப்படத்தின் வலப் புறமாய் கீழ்க்கண்ட வாசகங்கள் காணப்பட்டன:

“உலக விமர்சகன்! இவரைத் தேடி விண்ணு லகமே தரையிறங்கி வந்தது! ஆனால் சில தறுதலைகள் இவரை மறுதலித்துவருகிறார்கள். அவதூறு பரப்பியே தீருவோம் அவர்களைப் பற்றி. அதுவே எங்கள் இலக்கிய தர்மம். ‘அக்கப்போர்’ வெல்லும்.”

இதை வாசித்ததும் மூண்ட வெஞ்சினத்தில் விண் ணிலுள்ள கோள்களும் ஒளிமீன்களும் தங்களை மறுவரிசைப்படுத்திக் கொண்டதில், இங்கிருந்தே உற்றுப் பார்த்தாலும் போதும், தொலைநோக்கி யின் உதவியின்றியே நம்மால் படிக்கக்கூடிய அளவில் ஆகாயப்பரப்பில் காணத்தொடங்கி யுள்ள வார்த்தைகளே இந்தக் கதைக்குத் தலைப் பாக்கப்பட்டுள்ளன.




0

Tuesday, January 20, 2015

வரையறைகள் _ சிறுகதை - அநாமிகா(லதா ராமகிருஷ்ணன்)

சிறுகதை
வரையறைகள்
அநாமிகா
[பன்முகம் காலாண்டிதழ், ஜூலை-செப்டம்பர் 2004]



 ஆவின் பாசம் ஆபாசம்” 

சொல்லிவிட்டு அமெரி க்காவைக் கண்டு பிடித்த கணக்காய் தனக்குத் தானே ஷொட்டு கொடுத் துக் கொள்வதாய் சிரித்தவளை பார்த்து எரிச்சலாய் வந்தது.

இப்படித்தான் தீவிர அவ தானிப்புக்கான விஷயத்தை நொறுக் குத் தீனியாக்கிவிடுவார்கள் இவளைப் போன்றவர்கள். ‘To hell with them’ _ நினைப்பின் இறுக்கம் பரவிய முகத்துடன் அவளை முறைத்தேன். “யாருக்கு ஆபாசம்? எப்படி ? விளக்கு.” 

அதாகப்பட்டது எப்படி விளக்குக்கு இருட்டு ஆபாசமாகிறதோ அதே மாதிரிஆவின் பாசம் _ அதாவது பசுவுக்குத் தன் கன்றின் மேல் உள்ள பாசம் நமக்கு, அதாவது, மனிதர்களுக்கு ஆபாச மாகிறது.”


அவள் சிந்தனைப்போக்கு ஒருவிதமாய் புரிபட்டாலும் அவள் பேசிய விதம் சிலாகிப்பிற்குரியதாக இல்லை.

இதுதான் எனக்கு ஆபாசமாகப் படுகிறது,” என்றாள் எங்கள் வட்டத் தின் இன்னொரு கண்ணி.

எது?”

இங்க இத்தனை பேர் இருக்கிறப்போ ஏதோ அவள்தான் ஆபாசங் கற வார்த்தைக்கு அத்தாரிட்டி மாதிரி, அவளையே திரும்பத் திரும் பக் கேட்கிறது.”

சரி, நீ தான் சொல்லேன் _ எது ஆபாசம்?”


இதுதான்.”

எது?”


பப்பா ,மாதிரி புருவத்தைச் சுருக்கிப் பார்வையாலே கேள்வி கேட் காதே. ’சரி, நீதான் சொல்லேன்னு போனாப்போவுது, சொல்லுங் கறா மாதிரி என்னை ஒப்புக்கு உன் பேச்சுஎன்றலெவலுக்குக் கீழிறக்கிட்டியே, அது.”

விஷயத்தை விட்டுட்டு வம்புச்சண்டை போடாதே. சொல்லு, உன் னைப் பொறுத்தவரைக்கும் எது ஆபாசம்?”

இப்ப நீ சொன்னே பாரு, அதுதான் ஆபாசங்கற விஷயத்துல முக்கி யம்.”

அதாவது?”

ஆபாசத்தைப் பொறுத்தவரைக்கும் உன்னைப் பொறுத்த வரைக்கும் என்னைப் பொறுத்தவரைக் கும்ங் கறது இருக்கு.”

அப்ப, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம்னு எதுவும் இல் லையா?”

எல்லோருக்கும் பொதுவான பொறுத்தவரைகள், பொறாத வரைகள் இருப்பதும் சாத்தியம் தானே. அதுபோல, எல்லோருக்கும் பொதுவான ஆபாசம் இருக்கிறதும் சாத்தியம் தான்.”

ஆபாசம்னு சொல்றதே தவறு. ஆபாசங்கள்னு தான் சொல்ல வேண்டும்.”

தமிழரசி, நீ சொன்னதுகூட ஆபாசம்தான்.”

வாட்?”


ஆமாம். பேசற விஷயத்தை விட்டு அதுல உன் தமிழ்ப் புலமையை அடிக்கோடிட்டுக் காட்டற மாதிரி பேசற பாத்தியா, அதைத் தான் சொன்னேன்.”

நான் நியயமா ஒரு விஷயம் சொன்னதுக்கு நீ இப்படி வியாக்கி யானம் தரதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப ஆபாசமா இருக்கு.”


ஆக, இப்ப நாம ஆபாசத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்திருக் கோம்.”

ஸே, குழப்பறே அனிதா.”

இல்லை, நான் சொல்வது ரொம்ப அரிச்சுவடியான விஷயம். அதை நீ புரிஞ்சுக்க மறுப்பது தான் ஆபாசம்.”

அப்படிப் பார்த்தால், அரிச்சுவடிங்கறது எத்தனை அடிப்படையான விஷயம். அதை இந்த விதமா இலேசான விஷயமாக்கிப் பேசுவதே ஆபாசம்தான்.”

அமைதி, அமைதி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு _ க்ருஷி, ஆபா சத்தின் அடுத்த கட்டம்னு சொன் னியே.”

ஆமா, எது ரொம்ப ஆபாசம், எது கொஞ்சம் ஆபாசம், எது மீடியம் ஆபாசம்?”

ஆபாசமே ஒரு மீடியம் தான்.”

ஐயோ, ’வார்த்தைச்சித்தி ஆரம்பிச்சிட்டாளே

நோ, நான் நெஜமாத்தான் சொல்றேன். ஆபாசம்ங் கறதும் ஒரு மீடியம் தான்.”

ஆபாசம்ங்கறது இருபொருளில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டி யது/” 
    
இருபொருள் மட்டும்தான்னும் உறுதியாச் சொல்லி விட முடியாது.”

ஆபாசம் என்பதுஆபாசம் என்ற விஷயம்?”

ஆபாசம் என்பது என்ற சொற்றொடரே நீ சொன்ன இரண்டை யும்  குறித்துவிடுமே!”

சரி, அதை விடு. எது ரொம்ப ஆபாசம்_ எது கொஞ்ச ஆபாசம்/”

கரெக்ட். கொஞ்சலுக்கு ஆபாசம் கைகொடுக்குமே!”

கொஞ்சலே ஆபாசம்னு சொன்னா?”

அப்படி சொல்றவங்களை கொதிக்கும் கொப்பரை யிலெ பிடிச்சுத் தள்ளணூம்.”

பொறு…. கொஞ்சலே ஆபாசமாவதும் உண்டு தானே…  ஒருவரை வலுக்கட்டாயமாகக் கொஞ்சு வது, தன்னுடைய வெற்றிக்கனியாக நினைத்துக் கொஞ்சுவது, சம்பந்தப்பட்ட இரண்டு பேர்ல ஒருத்தர் அந்தரங்கமா நடக்கணும்னு நினைக்கிற கொஞ் சலை அவருடைய இணை அம்பலப்படுத்திக் காட்டு வது, குழந்தையை பயங்காட்டிக் கொஞ்சுவதுஇப்படி நிறைய சொல்லலாம்.”

ஐயோ, கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள் அனிதா. ‘ட்ராக்மாறாதே.”

ட்ராக் மாறாதேன்னு எனக்கு நீ அறிவுறுத்துவது கூட என்னைப் பொறுத்தவரை ஆபாசம் தான். ஏன்னா, என்னைப் பொறுத்தவரை நான்ட்ராக்மாறாமல் தான் பேசிக்கிட்டிருக்கேன்.”

என்னைப் பொறுத்தவரை, என்னைப் பொறுத்த வரைன்னு எந்த வொரு விஷயத்தையும் பேசுவது கூட ஆபாசம் தான்.”

இல்லை, உன்னைப் பொறுத்தவரையானது இது வென்று நான் பேசுவதுதான் ஆபாசம். என்னைப் பொறுத்தவரையானதை நான் பேசாமல் வேறு யார் பேச முடியும்?”

நீங்களிருவரும் just playing on the words.”


வார்த்தை விளையாட்டு. தாங்க்ஸ் ஷாலினி. என் கவிதைக்கு ஒரு நல்ல தலைப்பு கிடைத்துவிட்டது. Back to ஆபாசம் _ ’கூடத்தில் குளிக்க முடியுமா? இல்லை, வெளிக்குப் போக முடியுமாங்கற கேள்வியை நீ எப்படி எதிர்கொள்வே?”


“Bloody shit”

இதையே தமிழ்ல சொன்னால் ஆபாசமாயிருக் கும்னு தானே ஆங்கிலத்தில் சொல்கிறீர்கள்?”

குட் மார்னிங்னு நீ சொல்வதை இதேவிதமா பகுத் தால் உனக்கு ஆபாசமாகப் படும், இல்லியா? நல் லது, மேற்படி கேள்வி என்னைப் பொறுத்தவரைஷிட்கேள்விதான். கூடம், குளியல், வெளிக்குப் போதல் முதலிய எல்லா விஷயங்களைப் பொறுத்த அளவிலும் நம்முடைய கடிவாளப் பார்வைகளைத் தான் இந்த மாதிரி கேள்விகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முன்னொரு காலத்தில்வெளிக்குப் போதலில் தான் எல்லா மனிதர்களின் சமத்துவ மும், ஏற்றத்தாழ்வுகளற்ற தன்மையும் வெளிப்படு கிறது என்பதால் அரசன் முதல் ஆண்டி வரை ஒரே இடத்தில் மலங்கழிப்பார்களாம் தெரியுமா?”

வ்வே

என்ன வ்வே? இப்பவும் தானே பார்க்கிறோம். காலைவேளையில் ரயில் போகும் வழியெல்லாம் முகங்களை மறைத்துக்கொண்டு அதன் மூலம் சமூகத்திலான தங்கள் தோற்ற அடையாளங்களை இல்லாமலாக்கிக்கொண்டு வெறும்குறிகளும், ’குதங்களுமாய் காலைக்கடன் கழித்துக்கொண்டி ருப்பவர்கள் எத்தனை பேர்…. அது வறுமையா? ஆபாசமா?”

”Lack of civic sense ஆகவும் இருக்கலாமே.”


இப்படி, சமூக அவலங்களை இலேசாகப் பேசி முடித்து நம் வழி போவதுகூட ஆபாசம் தான்.”

சமூக அவலங்களைக் கைத்தட்டலுக்காகப் பேசு வதும் ஆபாசம் தான்.”


என்னிலிருந்து தான் கவிதை ஆரம்பமானதுதான். என்று பேசுவது மட்டும் ஆபாசமில்லையா?”

மூளைச்சலவை செய்வதற்காக அப்படிப் பேசினால் ஆபாசம். மன தார நம்பி அப்படிச் சொன்னால்…?”

மனதார நம்பிச் சொன்னால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?”

கைத்தட்டலுக்காகப் பேசுகிறார்களா, மனப்பூர்வமா கப் பேசுகிறார் களா என்று கண்டறிய என்ன அளவுகோல்?”

அந்த அளவுகோலும் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் இல்லையா?”

அவரவர் நுண்ணுணர்வு, மனசாட்சி தான் இந்த அளவுகோல்கள்…”

இந்த வார்த்தைகள்கூட ஆபாசமானவைதான்.”

அது அவற்றின் பயன்பாட்டால், அதாவது, அவற் றின் அளவில் ஆபாசமானவையல்ல. அவற்றை அவற்றின் மெய்ப்பொருள் கெட பயன்படுத்துபவர் கள் ஹ்டன ஆபாசமானவர்கள்.”

ஏய், நேரமாகிவிட்டது. நாளை மீண்டும் சந்திக்க லாம்!”

என்னடீ இவ, செந்தமிழ்ல பேசறா!”

நிச்சயமா நம்மகிட்டே செந்தமிழ்ல பேசி அவ பொற்கிழி வாங்கிடப் போற தில்லை. அதனால, அவ செந்தமிழ்ல பேசு வதை ஆபாச மாக்கிவிடாதே”.

அப்ப, பலனைக் கருதி பேசுவதுதான் ஆபாசம்ங்கறேஅதாவது, உள்நோக்கத்தோடு பேசுவது?”

அனிதா, நீ எதுக்கு இந்த விஷயத்தை இங்கே எடுத்து ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்துவைத் தாய் என்று எனக்குத் தெரியும்”, என்றாள் க்ருஷி.. “அடுத்த மாதம் தில்லியில் நடக்கப் போகும் அகில இந்திய இலக்கியப் படைப்பாளிகள் மாநாட்டில் நீ வேலை பார்க்கும் பத்திரிகையின் சார்பாக உன்னை அனுப்புவார்கள். உன்னு டைய பத்திரிகையின் பொறுப்பாசிரிய ருக்குப் பிடித்த விஷயம் இந்த விவாதம். ஆக, இதைப் பற்றி நிறைய பேருடைய கருத்துகளைக் கேட்டு, சேகரித்து உன்னு டையதாக மாநாட்டில் வெளியிட்டு பொறுப்பாசிரியருடைய நல்ல மதிப்பை சம்பாதித்து பதவி உயர்வைப் பெற்றிட வேண்டும். அப்படித்தானே!”

மெதுவாகக் கீழே பரப்பியிருந்த எனது புத்தகங் களை எடுத்துக் கொண்டு எழுந்தேன். “நேரமாகி விட்டது அனி. நான் கிளம்புகி றேன்.”

யேய், பதில் சொல்லாமல் போகிறாயே!”


க்ருஷி, உனக்குத் தெரியும். காம்ப்ரமைஸ் செய்ய முடியதவளா நான் எத்தனை வேலை மாறியிருக்கிறேன் என்று. வகுப்புத் தேர்வு தானே என்று நீங்கள் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டு விடையெழுதும்போது கூட பிடிவாதமா எனக்குத் தெரிஞ்சதை மட்டும் தான் நான் எழுதுவேன். அதுவும் உனக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் இப்படியொரு அனுமா னத்தை, அதுவும் எந்தவித முகாந் திரமுமில்லாமல் ரொம்ப சுலப மாக, without any second thought வெளியிடுகிறாய் பார்த் தாயா…. ‘நான் சிரித்தால் தீபாவளின்னு  I live for the present நல்லாவே தெரிந்தும் யாரையோ தாஜா செய்து அவர் எழுதும் வரலாற்றில் இடம்பெறுவதற்காகவே நான் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன்என்றுகூட நாளை நீ என்  conviction ஐக்  கேவலப்படுத்தலாம்எனவே, நான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆபாசம் என்றால் என்ன என்று தெளிவாகப் புரிய வைத்ததற்கு. உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படும் முகாந்திர மற்ற அனுமானங்கள் தான் உச்சபட்ச ஆபாசம்…..so long”


0