அன்புப்போலிகள்
‘ரிஷி’
அன்பு ததும்பிக்கொண்டிருப்பதற்கு பதிலாக
தன் பெருந்தன்மை குறித்த கர்வமே அதிகம்.
கூடவே அதில் பாசாங்கும் பயமும்
பிழைப்பிற்கான யத்தனமும்.
எதிரியற்ற போரில் வெல்லும் பிரயத்தனமும்.
குதிரையை கழுதையென்றாலும் மறுத்துப்பேசத்
தடுத்துவிடும் தோழமை யென்ற
கணக்கும்.
எனத் தெரிந்து பல காலமாகிறது
எனக்கும் உனக்கும்.
முன்பும் பின்பும் அன்புப்பழமாக
அனைவருக்குமானவராக
நெஞ்சு நிமிர்த்தி புன்னகைத்துக்
கொண்டேயிருப்பவரிடம்
கேட்கவேண்டும்
பதில் கிடைத்துவிட்ட அந்த ஒரே கேள்வி:
நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
No comments:
Post a Comment