LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, July 26, 2023

THE ART OF BEING A PSEUDO - By ‘rishi’ (Latha Ramakrishnan)

 THE ART OF BEING A PSEUDO

By
‘rishi’
(Latha Ramakrishnan)
*[Translation of my Tamil poem captioned அம்பலம்)

When Her[His] Excellency, wielder of pen most powerful,
pushing aside the person who was to talk before,
so elegantly[ being the euphemism for arrogance] rose ,
with ever-swelling great expectations of hearing
the lilting symphony of the waves,
the soft fluttering of the wings,
the roar of thunder,
shower of flowers
deadly noise of earthquake,
the sound of boulders and rocks rolling down,
deluge and
the birth of a new world
many would have sharpened their ears
and listened intently
and some would have believed
that they did hear them all
and some others would have looked down
wondering whether Her[His] feet were touching
the ground
or that He[She] was in fact an angel,
astonished and spell-bound_
the person went on harping on the point
that She[He] as a rule never attend any meeting
and yet He[She] had chosen to come,
that She[He] as a rule couldn't find time for such meeting
and yet He[She] had chosen to attend
and on and on
with the explicit implication being
'taking pity on
He[She] went on and on
in this vain the pain of it
proving indescribable
leaving me wondering
whether it could have been taken as a great boon
given all too mercifully
or that it could indeed have pricked and stung
or that it too could have been [mis]construed as poetic lines
between lines
of course yesterday today and tomorrow
there are those
ready to interpret them as highly poetic
utter nonsense
the way some or many of those wondered
whether that which oozed out of the mouth
that kept on blabbering
was honey or ghee or sacred water,
oh, branding your ancestors my parents
your taste my intelligence
his choice her concern
and so on and so forth
not leaving anything unscathed
attacking them all as with a calculative precision
set out to slice the heads seen all around
such as the one with curly hair and the one
with no hair
the head seen and unseen
lovely head ugly head tonsured head,
that which had undergone surgery
the head born, unborn still-born
head neatly combed and head with hair entangled
so heads infinite were squeezed and smashed
demolished destroyed
all their distinct identities erased and wiped out
and all squeezed into one big ball of mass
and the bodies felled and made into
invisible corpse
and then
with the joy and satisfaction of having
Her[His] place safe and secure
as a palanquin floating on earth did He[She]
sway and move ahead
leaving the hall
heading towards the
massive auditorium well air-conditioned
where the preview of a movie
funded or produced or sponsored
by a multi-national corporate sector
was to be held,
where ascending the dais
She[He] went to the seat assigned at the corner
sure to remain there till the very end
with no intention of leaving in the middle

Tuesday, July 25, 2023

அம்பலம் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அம்பலம்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
 //2016, ஜூலை 25இல் பதிவேற்றப்பட்டது//


பெருந்தகை யவர் அருமருந் தெழுத்தாளர்
தனக்கு முன்பாகப் பேச வேண்டியவரை மனிதநேயத்தோடு
மிக லாவகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப்
பேசஎழுந்தபோது
அலைகளின் சலசலப்பும் சிறகுகளின் மென் படபடப்பும்
இடி முழக்கமும் பூமாரிப் பொழிவும்
நிலநடுக்கமும் பாறைச்சரிவும் பிரளயமும்
புது உலகப் புறப்பாடும்
கேட்கக் கிடைக்கிறதோ என்று
சிலர் செவிகளைக் கூர்மையாக்கிக் கொள்ள
சிலர் கேட்டதாகவே நம்பத் தொடங்க
இன்னும் சிலர் அந்தப் பாதங்கள் தரையில் பதிந்துள்ளனவா
அல்லது அவர் உண்மையில் தேவதையே தானோ வென
திகைப்பும் பிரமிப்பும் சேரக் குனிந்துபார்க்க
நேரமில்லை என்றாலும் வந்தேன்
எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை என்றாலும்வந்தேன்
என்றாலும் என்றாலும் என்றாலும்
என்று அடுக்கிக் கொண்டே போனதில் சுரந்திருந்த
‘போனால் போகட்டும் என்று’
பேரருள் பாலிப்பாய்புரிந்து கொள்ளப்பட்டிருக்குமோ
அல்லது சுட்டிருக்குமோ சுளீரென
யாமறியோம் பராபரமே
அன்றி அதையும் கவித்துவ வரியாகப்
பரவசங் கொள்வோர் என்றும் உளர் தானோ ஏனோ
என்றும் உளறிக்கொண்டிருக்கும் வாயிலிருந்து ஒழுகுவது
தேனோ நெய்யோ தீர்த்தம் தானோவென
சிலர் மயங்க
சிலர் மருள
உன் முன் னோர் என் முன்னோர் அவர் முன்னோர்
இவர் முன்னோர்
உன் ரசனை என் அறிவு அவர் தெரிவு இவர் பரிவு
எல்லாமே
வெத்துவேட்டுபித்தலாட்டம் நச்சுப்பாம்பு நாராசம் என
மிச்சம் மீதி வைக்காமல் ஒரு கச்சிதக் கணக்கோடு
கண்ட தலை விண்ட தலை கண்கொள்ளாத் தலை
விள்ளவியவியலாத் தலை
சொட்டைத் தலை மொட்டைத் தலை
அறுவைச் சிகிச்சைக்கு ஆளான தலை
பிறந்த பிறவா இறந்த இறவா வாரிய வாரா
இன்னும் ஏராளம் ஏராளம் தலை களை யெல்லாம்
தனி அடை யாளங்களை அழித்துக் கூழாக்கி
வெட்டிச்சாய்த்துக் காணாப் பொணமாக்கிய பின்
தன் இடம் உறுதிப்பட்டுவிட்ட திருப்தியோடு
தரையில் மிதக்கும் பல்லக்கே போன்ற அசைவுடன்
புறப்பட்டுச்சென்றவர்
பன்னாட்டுப் பெருமுதலாளி தயாரிக்கும்
திரைப்பட விழா வொன்றின்
குளிரூட்டப் பட்ட பேரரங்கிற்குள் நுழைந்து
மேடையேறிப் பொருந்தி யமர்ந்துகொண்டார்
கட்டாயம் இடையில் கிளம்பிப் போகமாட்டார்
இறுதிவரை அங்கேயே தான் இருப்பார்.


பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிப்பிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….

புரியும்போல் கவிதைகள் சில….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) - ’இப்போது’ தொகுப்பிலிருந்து

2016இல் சிறிய அளவில் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்தேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa Alphabets). முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. அதில் என்னுடைய கவிதைத்தொகுப்பும் ஓன்று. தலைப்பு - இப்போது அதிலிருந்து ஒரு கவிதை. 

...................................................................................

புரியும்போல் கவிதைகள் சில…..

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


(1)
 

குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

(2)

ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

(3)

சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

(4)

ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.

(5)

திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

(6)

இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

(7)

இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”

(8)
அனா, ஆவன்னா, இனா ஈயன்னா உனா
ஊவன்னா
ஏனா ஏயன்னா ஐயன்னா ஃன்னா….
ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா
உர, ஊதா, எர, ஏற, ஐய, ஃப்பா இல்லை
யென்ற கேள்வியின்
எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு
செல்கையில்
எதிரே வந்த சிறுமி
“உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப்
பிய்னடிக்குமா?”
என வினவிச்
சென்றாளே, சென்றாளே….

வாக்குமூலம் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) - ‘இப்போது’ தொகுப்பிலிருந்து

 


2016இல் சிறிய அளவில் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்தேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa Alphabets). முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. அதில் என்னுடைய கவிதைத்தொகுப்பும் ஓன்று. தலைப்பு - இப்போது அதிலிருந்து ஒரு கவிதை.


வாக்குமூலம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா….

உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்;
உதார்விட்டுக்கொண்டிருப்பேன்
ஒருபோதும்
உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….

ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….....
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….?
எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில்
‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித்
தப்பித்துவிடும் உலகில்
பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது.

ஊ….........லல்லல்லா……….ஊ…....லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…

இணையற்ற என்னைப் பார்த்தா வினவத் துணிகிறாய்?
இல்லாத நூலிலுள்ள எழுதாத பக்கங்கள் எனக்கு மனப்பாடம் தெரியுமா?
பார்த்தாயல்லவா – மார்க்வெஸ்ஸின் ஒரு வரியில்
(மாங்காய் மடையர்களிடம்) என்னை மேல்தாவியாக்கிக் காட்டும்
மேலான வித்தை தெரிந்துவைத்திருக்கிறேன்.

ஊ…......லல்லல்லா………......ஊ…...லல்லல்லா….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா...

தர்க்கநியாயங்களை கணமேனும் எண்ணிப்பார்ப்பேன் என்றா நினைக்கிறாய்?
அநியாயம், அக்கிரமம் என்றே அலறுவேன் அரற்றுவேனே தவிர
தப்பித் தவறியும் தெளிவா யொரு பதிலைத் தரமாட்டேன்.
பின்வாங்கலை கடந்துபோவதாய் பொருள்பெயர்த்துவிட்டால் போயிற்று.

ஊ…........லல்லல்லா………..ஊ….லல்லல்லா…...............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

துணிவிருந்தால், தில்லாலங்கடியோ, கேட்டுப் பார் கேள்வியை
திரட்டிவைத்திருக்கும் கருத்துமொந்தைகளை
விறுவிறுவென விட்டெறிவேனே தவிர
மறந்தும் பதிலளிக்க மாட்டேன்.

ஊ….....லல்லல்லா………...ஊ…......லல்லல்லா….............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

மீண்டும் அறிவுறுத்துகிறேன், புண்ணாக்கு விடைவேண்டி
வலியுறுத்தினாலோ
மளமளவென்று கிளம்பும் என் அய்யய்யோ வென்ற அலறல்கள்;
அதி வன்மம் நிறை உளறல்கள்.

ஊ….......லல்லல்லா………..ஊ….......லல்லல்லா…...........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

காலோ, அரையோ முக்காலோ, தெக்காலோ வடக்காலோ
எங்கெங்கு காணினும் தமிழ்க்கவிதைக் காவல்தெய்வம் நானாகி
ஊனாகி உயிராகி பேனாகி அரிக்கும் பணியில்
இருபத்திநான்குமணிநேரமும் என்னை இயக்கிக்கொண்டிருப்பது
வன்மம் என்பார் உன்மத்தர்கள் ஆம்.

ஊ…........லல்லல்லா……… ஊ…......லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

அடுத்தொரு கேள்வி கேட்டால் பின்னும் எட்டியுதைப்பேன் வெட்டிப் புதைப்பேன்….
இன்னும் பல செய்தவாறு செய்வதெல்லாம் நீயே என்பேன்
தின்பேன் என்னென்னவோ இவ் வின்னுலகம் உய்யவே.
என்னையா கேள்வி கேட்கிறாய் அப்போதைக்கப்போது?
இந்தா உனக்கொரு பெப்பே;. இப்போதைக்கு இது.

ஊ…........லல்லல்லா……….....ஊ…......லல்லல்லா…..........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா ….
0