LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, December 29, 2023

உள்ளங்கையுலகு - 1

 உள்ளங்கையுலகு - 1

எனது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் - இதுவரையான கவிதைகள்

நான்கு முழுத்தொகுப்புகளாக
உள்ளங்கையுலகு - 1,
உள்ளங்கையுலகு - 2,
உள்ளங்கையுலகு - 3,
உள்ளங்கையுலகு - 4
என்று புதுப்புனல் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்படவுள்ளன.

இவற்றில் முதல் தொகுப்பு
உள்ளங்கையுலகு _ 1 பிரசுரமாகிவிட்டது.
(500+ பக்கங்கள் - விலை ரூ.600)



நினைக்கப்படும் தெலுங்குக்கதைகள் – ஆங்கிலம் வழியாக தமிழில்!

 நினைக்கப்படும்

தெலுங்குக்கதைகள் –

ஆங்கிலம் வழியாக தமிழில்!



V.V.B.RAMARAO தெலுங்குமண்ணைச் சேர்ந்த, தெலுங்கி லும் ஆங்கிலத்திலும் சிறந்த எழுத்தாக்கங்களைத் தந்திருக்கும் மூத்த எழுத்தாளர்.
1938இல் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிர்லாபேட்டா ராஜம் (தற்போது பைதிபீமாவரம் என்று அழைக்கப்படு வது) என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆந்திர மாநிலப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, கற்பித்தலுக்கான பட்டயமும் பெற்றார். பிரெஞ்சு மொழியிலும் பட்டயம் பெற்றவர்.
1957இல் எம்.ஆர்.கல்லூரியில் கற்பிக்கும் பணியைத் தொடங்கினார். ஆந்தி ராவைச் சேர்ந்த 1961 முதல் 1995 வரை பல்வேறு கல்லூரிகளில் பல்வேறு உயர்பதவிக ளைத் திறம்பட வகித்தவர் திரு.ராமாராவ்.
தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் புதினங்கள், வாழ்க்கை சரிதைகள், சிறுகதைத்தொகுப்புகள், திறனாய் வுக் கட்டுரைகளடங்கிய நூல்கள், ஆங்கிலத்திலிருந்து தெலுங்கு மொழியிலும், தெலுங்கிலிருந்து ஆங்கிலத் திலும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு களும் அடங்கும். மேலும், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவை செய்தித்தாள்களிலும், இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றின் தமிழாக்கம் புதுப்புனல் வெளியீடாக சென்னைப் புத்தகக் கண்காட்சி யில் இடம்பெறுகிறது.
தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் எஸ்.ஆர்.தேவிகா. பக்கங்கள் 308. விலை: ரூ. 300
Like
Comment
Share

RAIN BEYOND AND OTHER POEMS By RISHI (Latha Ramakrishnan)

 RAIN BEYOND AND OTHER POEMS

By
RISHI (Latha Ramakrishnan)
Published by PUDHUPUNAL PUBLICATIONS


2016 அல்லது 2017இல் இந்த கவிதைத்தொகுப்பின் முதல் பதிப்பை என் அநாமிகா ஆல்ஃப்ஃபெட்ஸ் மூலம் வெளியிட் டேன். நான் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் 55 இடம்பெறும் தொகுப்பு இது.

இப்போது படிக்கும்போது கவிதை உருவான சூழமை வுகள், உள்தளும்பல்களை அறுதியிட்டுச் சொல்லமுடிய வில்லை. (இது உண்மையான உண்மையில்லை என்றும் உள்ளுணர் வுக்குத் தோன்றுகிறது!). DOWN MEMORY LANE எனப்படும் நினைவுப்பாதையிலான மீள்பயணம் சமயங்களில் மிகவும் களைப்பாகவும், கையறுநிலையிலிருப்ப தாகவும் உணரவைக்கும்.

இந்தத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு இப்போது புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது. தோழர்கள் ரவிச்சந் திரன் - சாந்திக்கு என் மனமார்ந்த நன்றி.

அட்டையின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் இருக்கும் ஓவியங்கள் என் தம்பியின் மகன் வரைந்தவை.
கைக்காசை செலவழித்துப் புத்தகம் வெளியிடுவதிலான பண நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு நான் கைபோன போக் கில் கற்றுக்கொண்ட அட்டை வடிவ மைப்பும், பக்கங்களின் வடிவமைப்பும் இந்தத் தொகுப்பில் பயன்பட்டிருப்பது நிறைவாக இருக்கிறது.



All reactions:
Sri N Srivatsa, Ragavapriyan Thejeswi and 13 others