LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, August 20, 2023

INSIGHT, JULY 2023 - A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY

INSIGHT

A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY

www.2019insight.blogspot.com 

(*Poems translated by me between 2016 and 2019 are in this July issue of INSIGHT)




Tuesday, August 15, 2023

கவிஞர்கள் நட்சத்திரங்களைப் பரிசளிக்கப் பிறந்தவர்கள்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிஞர்கள் நட்சத்திரங்களைப் 

பரிசளிக்கப் பிறந்தவர்கள்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 

இத்தனை காலைவேளையில் யார் கதவைத் தட்டுவது என்று

கவிஞர் யூமா வாசுகி தூக்கக்கலக்கத்துடன் எழுந்துவந்து

கதவைத் திறந்தார்.

 

அன்று பூத்த மலராய் அதிகாலைச் சூரியக் கதிராய்

ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள்.

 

என் அப்பா ஒரு பள்ளிக்கூடம் திறந்திருக்கிறார்.

பிள்ளைகளை அடிக்காதஅவமானப்படுத்தாத நல்ல பள்ளிக்கூடம்.

அதை நீங்கள்தான் திறந்துவைக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டேயிருந்தார்அதனால்தான் அவருக்குத் தெரியாமல் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன் – உங்களைக் கையோடு கூட்டிச்செல்ல” என்று விவரம் தெரிவித்தாள்.

 

இதோ இறக்கைகள் – சீக்கிரம் மாட்டிக்கொள்ளுங்கள்” என்று சின்னவாயால் சிறுமி இட்ட அன்புக்கட்டளையைத் தட்டமுடியுமா என்ன?

 

இருவருமாக இறங்கக்கண்ட அந்தத் தந்தை முகம் தழுதழுத்துப்போனது.

 

என்னைத் தெரிகிறதாஉங்கள் ’சாத்தானும் சிறுமியும்’ கவிதைத்தொகுப்பில் மதுக்கடையில் வேலைபார்த்த சிறுவன் நான் –

என் சட்டைப்பையிலிருந்து உருண்ட கோலிகுண்டுகள் பற்றி அத்தனை கரிசனத்தோடு எழுதியிருப்பீர்களே – நினைவிருக்கிறதா?

இந்தத் தரமான இலவசப்பள்ளியை நீங்களே திறந்துவைக்கத் தகுதியானவர்!”

என்று தன் சின்ன மகளை நன்றியுடன் பார்த்தார் தந்தை.

 

ஏழைக் கவிஞனிடம் மாத முதலிலேயேகூட

அப்படி என்ன பணமிருக்கப்போகிறது?

 

ஆனாலும் இந்த நல்ல காரியத்தைப் பாராட்டி ஏதேனும் பரிசளிக்காவிட்டால் எப்படி?’

என்று கவி மனதிலோடிய எண்ணத்தைப் படித்தவளாய் சிறுமி

 

யாருமறியாமல் ரகசியமாய்

கவிஞரின் சட்டைப்பைக்குள்

போட்டாள் _

முதல்நாள் பின்னிரவில்

ஆகாயத்தை நோக்கி நீட்டிய கை நீண்டுகொண்டேபோய்

திரட்டியெடுத்துவந்த நட்சத்திரங்களை!

 

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா? - லதா ராமகிருஷ்ணன்

 பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?

          *August 13, 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது

C:\Users\computer\Desktop\images (3).jpgC:\Users\computer\Desktop\images (4).jpg

......................................................................................................................................................................

Section 509 IPC, as defined under the code states as, “Whoever intending to insult the modesty of a woman, utters any word, makes any sound, or gesture, or exhibits any object, intending that such word or sound shall be heard, or that such gesture or object shall be seen, by such woman, or intrudes upon the privacy of such woman, shall be punished with simple imprisonment for a term which may extend to three years, and also with fine”.


இந்தியக் குற்றவியல் சட்டம் விதி 509

விளக்கம்

எவரேனும்எந்த ஒரு பெண்ணின் நாகரீகத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில்எந்த வார்த்தையை சொன்னா லும்ஏதேனும் ஒலி 

அல்லது சைகை செய்தாலும்அல்லது எந்த பொருளை வெளிப்படுத்தினாலும்அத்தகைய வார்த்தை அல்லது ஒலி கேட்க வேண்டும் 

அல்லது அத்தகைய சைகை அல்லது பொருளை அத்தகைய பெண் பார்க்க வேண்டும்அல்லது அத்தகைய பெண்ணின் தனியுரிமை

யில் ஊடுருவினால்மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான எளிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றுடன் தண்டிக்கப்படுவர் .

………………………………………………………………………………………………………….....

பொதுவெளியில் கண்ணியமாக நடந்துகொள்ளத் தெரியாதவர்கள், வேண்டு மென்றே மரியாதைக்குறைவாக நடப்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். ஒரு நபர் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாக ஒரு பெண் நினைத்தால் அதற்கான கோபத்தை வெளிப்படுத்த அவருக்கு உரிமையுண்டு. 

அப்படித்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ம்ரிதி இரானி பேச ஆரம்பித்த போது திரு.ராகுல் காந்தி ‘பறக்கும் முத்தம்’ ஒன்றை அவரிருந்த திசை நோக்கி வீச அது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப் படுத்தியுள்ளனர். அதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக் கிறது.

திரு.ராகுல் காந்தி அதை ஏன் செய்யவேண்டும்? அவரு டைய ஆதரவாளர் களுக்கு, ரசிகர்களுக்கு, அவரை எதிர்கால இந்தி யாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்ப்பவர்களுக்கு அவர் எவ்வளவு வேண்டுமானாலும் ‘பறக்கும் முத்தங்கள்’ அனுப்பலாம். பிரச்சனையேயில்லை. 

ஆனால், யாரை நோக்கி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானா லும் அப்படிச் செய்ய அவருக்கு உரிமை யில்லை. அது கண்ணியக் குறைவான செயலே. 

ஆனால், இங்கே அறிவுசாலிகளாக அறியப்படும் சில பெண்கள் அவர் செய்ததை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள்! 

ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். ‘என் ஒழுக்கத் தைக்கூட நீங்கள் சந்தேகப் படுங்கள் – ஆனால் என் ரசனையைச் சந்தேகப் படாதீர்கள்’ என்று ராகுல் சொல்கிறாராம். – அதாவது, ஸ்ம்ரிதி இரானிக்கு ’பறக்கும் முத்தம்’ அனுப்பும் அளவு அவருடைய ரசனை மோசமான தல்லவாம். எத்தனை அயோக்கியத்தனமான பேச்சு. 

இன்னொருவர் ஸ்மிரிதி இரானி இன்னொரு பெண்ணின் கணவ னைப் பிடித்துக் கொண்டவர்’ என்று எழுதுகிறார். இதெல்லாம் என்னவிதமான தர்க்கநியாயம்? 

இன்னொருவர் முத்தத்தின் மகத்துவம், மனிதநேயம் பற்றிப் பேசுகிறார். 

அப்படியானால் முந்தைய தமிழக ஆளுநர் ஒரு பெண் பத்திரிகை யாளரின் கன்னத்தில் தட்டிப் பேசினாரே – அது எத்தனை பெரிய விவாதப்பொருளாயிற்று. 

இப்போது சென்னை மேயரை மேடையில் ஒருவர் கைபற்றி இழுத் தது எத்தனை பேசுபொருளாகியிருக்கிறது. அவரே இது குறித்து வெளிப்படை யாகத் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வில்லையென்றாலும் அவருடைய முகச்சுளிப்பைக் கண்டே கொதித்துப்போய் ‘எங்கள் மேயரை இப்படி நடத்துவது சரியில்லை’ என்று காரசாரமாக சிலர் கண்டனம் தெரிவிகிறார்கள். 

கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும்.

உயர் பதவியில் பொறுப்பில் இருக்கும் பெண்ணையே பொதுவெளி யில் இப்படி, அவர்களுக்குப் பிடிக்காத வகையில் கண்ணியக் குறைவாக நடத்த முடிகிறதென்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்ன? 

பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் தரலாமா? அன்பை வெளிப்படுத் தத் தருவதாகக் கூறினால், சாலையில் ஒரு இளை ஞன் இதை ஒரு பெண்கள் கூட்டத்தை நோக்கி இப்படிச் செய்தால் ஏதும் சொல்லாமல் போவதோ, எதிர்ப்புக்குரல் எழுப்புவதோ சம்பந்தப்பட்ட பெண்ணின் நிலைப்பாடு. 

சில சிறுமிகள் பயந்துகொண்டு மௌனமாயிருப்பார்கள். அதனால் அதை அவர்கள் ஏற்கிறார்கள் என்று அர்த்தமல்ல. வீசப்படும் ‘பறக்கும் முத்தத்தை’ப் பார்த்து பயந்து பேசாமலிருக்கும் சிறுமிக் காக, யுவதிக்காக சாலையில் செல்பவர்கள் சண்டைக்குப் போவ தும் உண்டு. 

இங்கே ராகுல் வீசிய பறக்கும் முத்தம் தங்களை மதிப்பழிப்பதாகக் கருதும் பெண் உறுப்பினர்கள் அது குறித்துக் கண்டனக்குரல் எழுப்பியதைக் கொச்சைப்படுத்தவும் கிண்டல் செய்யவும் முன் வரும் பெண்கள் தங்களை எண்ணி வெட்கப் படவேண்டும்.

இன்று Kismi என்ற பெயரில் ஒரு சாக்லேட் விற்கப்படுகிறது. இத னால் ஏற்படக்கூடிய Eve-Torturingஐ நினைத்தால் கவலையாயி ருக்கிறது. 

இங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படி ஒரு ‘பறக்கும் முத்தத்தை’ விட ஆரம்பித்தால் நாளை அவருடைய கட்சியின் ஆண்களுக்கும், ஆதரவாளர் களுக்கும் அது என்ன மாதிரி ’சமிக்ஞையைத் தருவதாக அமையும்?

திரு.ராகுல் காந்தி விடலைப்பையனில்லை. ஆளுங்கட்சியை எதிர்ப்பது என்ற பெயரில் கண்ணியக்குறைவாக நடக்கவேண்டிய தேவையென்ன?

அதற்கு சில பெண்கள் ஆதரவாகப் பேசவேண்டிய தேவையென்ன? 

¬அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுவதே இங்கேயான அவலங் களுக்கெல்லாம் ஆதிகார ணமாக, அவ்வகையில் ஆகப்பெரும் அவலமாக அமைகிறது.

***

AUGUST 15 - ON THIS DAY

 




















இதுவா ஊடக அறம்?

 இதுவா ஊடக அறம்?

 _ லதா ராமகிருஷ்ணன்

(*13.8.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

 

தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள்.

மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது

அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக, தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக்கும், கண்டனத்திற்கும் உரியவர்கள்

மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட கொடூர நிகழ்வு’’ குறித்து சில ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம் இப்படி யிருக்கிறது

//“யேய் அந்த ஆட்கள் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொளிகளை முடிந்தவரை தெளிவாகக்காட்டப் பாருங்கப்பாஆனால், சட்டப்பிரச்சனையிலே சிக்காத அளவு கவனமாகக் காட்ட வேண்டும். //


***

மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் மறந்துவிட்ட கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்புக் கலவரம்

ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியொன்றில் மாணவியொருவர் இறந்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பட்டப்பகலில் எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட, தமிழ்நாட்டையே உலக அரங்கில் தலைகுனியச் செய்த கொடூர நிகழ்வு.

அது குறித்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இறந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஆஜராகவில்லையென்றும், அவருடைய மகளின் அலைபேசியை மிகவும் தாமதமாகவே உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார் என்றும், கலவரத்தில் ஈடுபட்ட இரண்டாம் நிலை ஆட்களே சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்நிலைக் கலவரக்காரர்கள், அவர்கள் மாநில அரசின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

அது தற்கொலை என்று இரண்டு போஸ்ட் மார்ட்ட அறிக்கைகள் சொல்லியபிறகும் தொடர்ந்து அந்த மாணவியின் மரணத்தை RAPE & MURDER என்றே , எந்தவிதமான ஆதாரங்களையும் முன்வைக் காமல், பேசி வரும் மாணவியின் தாயார், அவருடைய ஆதரவாளர் கள், இறந்த மாணவி மானபங்கப்படுத்தப் பட்டதாய் இறப்பின் பின்னும் அவரை மதிப்பழித்துக்கொண்டிருக்கும் ஏராளமான யூட்யூபர்கள், சில அச்சிதழ்கள் – இவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? 

3500 மாணாக்கர்கள் படிக்கும் பள்ளி பட்டப்பகலில் சூறையாடப் பட்ட, தீக்கிரையாக்கப்பட்ட இத்தகைய நிகழ்வு உலக அளவிலேயே கூட நடந்ததாக நினைவில்லை. ஆனால், தமிழின் ‘மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள்’ இந்த நிகழ்வை விவாதப்பொருளாக்கவேயில்லை. அந்த வழக்கு குறித்த எந்தச் செய்தியையும் வெளியிட ஆர்வங் காட்டுவதில்லை. ஏன்? 

***

 கோர விபத்துகள், கொலைகள் போன்ற நிகழ்வுகளை  நேரடியாக காணொளி வடிவில் காட்டக் கூடாது என்ற சட்டவிதியிருக்கிறது. ஆனால் இந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள், யூட்யூப்கள் போன்ற சமூக ஊடகங்கள் இப்போதெல்லாம் இத்தகைய விபத்துகள், கொலைகளையே அதிகம் காட்டுகின்றன – ஏன்? 

***
கோயில்களை கொலைத்திட்டம் தீட்டுவதற்கான களமாக, ஆள்கடத்தல் செய்வ தற்கான இடமாக தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கிறோம்’ என்பார்கள் இந்த ஊடகநாடகவியலாளர்கள். உண்மையில் இதுவரை இப்படி எந்தக் கோயிலி லும் நடந்ததில்லை. ’இப்படிச் செய்யலாமே’ என்று சொல்லிக்கொடுப்பதுபோல் இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? 

இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகளும், வேண்டாத சடங்கு சம்பிர தாயங்களும் கொண் டது என்றவிதமான கண்ணோட்டத்தையே இந்த மெகா நாடகத்தொடர்கள்  முன்வைக்கின்றன. இதுவா ஊடக அறம்?

ராகிங் கொடுமை

 ராகிங் கொடுமை


//*டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வெளியாகியுள்ள செய்தி இது. அதன் தம்ழ் வடிவம் விக்கிபீடியாவிலிருந்து எடுத்து இங்கே பகிரப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பில் சில இடங்கள் நெருடு கின்றன. இருந்தாலும் அந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் இங்கே வெளியிட்டுள்ளேன்//

......................................................................................................................................
2023 ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமையால் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆகஸ்ட் 2023 இல், ஒரு புதிய மாணவர் ஸ்வப்னதீப் குண்டு - கொடூரமான ராகிங்கை எதிர்கொண்ட பிறகு - பால்கனியில் இருந்து விழுந்தார், இது தற்கொலை அல்லது கொலையாக இருக்கலாம். முன்னாள் மாணவர் சௌரப் சவுத்ரிக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஸ்வப்னதீப் குண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பெங்காலி விருதுகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர் . அவரது தந்தை ராம்பிரசாத் குண்டு கூட்டுறவு வங்கி ஊழியர் மற்றும் அவரது தாயார் ஸ்வப்னா குண்டு ஆஷா பணியாளர். இவர் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பகுலா பகுதியை சேர்ந்தவர்
சௌரப் சௌத்ரி 2022 இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத் தில் கணிதத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அவர் மேற்கு வங்க சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி கடுமையாகப் படித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், சௌரப் ஒரு முன்னாள் மாணவராக இருந்தும் கூட, சிறுவர்கள் பிரதான விடுதியில் காட்சிகளை அழைப்பது வழக்கம், தொடர்ந்து அங்கேயே தங்கி, ஹாஸ்டல் மெஸ்ஸின் பொறுப்பாளராக அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்தார். இவர் மேற்கு வங்க மாநிலம் சந்திரகோனாவை சேர்ந்தவர் .
அஃப்ரீன் பேகம், இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர் . ஜே.யு.வின் கலை மாணவர் சங்கத்தில் அதிகாரத்தில் உள்ள (வங்காளத் துறையின் கீழ்) அதிகாரத்தில் இருக்கும் சௌத்ரி போன்ற மாணவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் அபார அதிகாரத்தைப் பெற்றுள்ளனர் - மேலும் இந்த மாணவர்கள் விடுதியில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், குறைவாகவே உள்ளனர்.
எந்தவொரு புதிய மாணவரும் தங்கள் விரிவான ராகிங் சடங்குகளிலிருந்து தப்பிக்க முடியும். “இந்த மாணவர்கள் தங்களை அரசியல் ரீதியாக நடுநிலையானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள், ஆனால் எதுவும் இல்லை. பலர் பட்டம் பெற்ற பிறகு டிஎம்சி அல்லது பிஜேபியில் இணைகிறார்கள் ,” என்கிறார் அப்ரீன்.
ஆகஸ்ட் 3 வியாழன் அன்று, ஸ்வப்னதீப் மற்றும் அவரது தந்தை கல்லூரி வளாகத்திற்குச் சென்றனர். விடுதி பட்டியலில் ஸ்வப்னதீப் பெயர் இடம் பெறவில்லை. விடுதிக்கு வெளியே உள்ள ஒரு டீக்கடையில், ஸ்வப்னதீப்பும் அவரது தந்தையும் சோகமான தொனியில் இதைப் பற்றி விவாதித்தனர், சௌரப் சௌத்ரி மற்றும் மனோதோஷ் மோண்டல் தங்குமிடம் கிடைக்காதது பற்றிய அவர்களின் விவாதத்தைக் கேட்டனர். அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி தந்தையை அணுகினர். சௌரப் ஒரு போர்டரின் விருந்தினராக தங்கலாம் என்று கூறினார், அதற்காக அவர் 1000 ரூபாய் எடுத்தார். மெஸ் கமிட்டி தலைவர் என்ற முறையில், ஒரு படுக்கையை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார் - பல்கலைக்கழகத்தில் 'விருந்தினர்' கொள்கை இல்லை என்றாலும். மாணவர்களின் டீன், ரஜத் ரே, அதிகாரப்பூர்வ மெஸ் கமிட்டி எதுவும் இல்லை என்றார். மேலும், "ஸ்வப்னதீப் தங்குவதற்கு அவர் பணம் எடுத்திருந்தால் அது சட்ட விரோத மானது" என்று கூறினார்.
ராகிங் குறித்து ஸ்வப்னாதீப்பின் தந்தையை சில வளாக மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்வப்னதீப் குண்டு தனது வீட்டை விட்டு வெளியேறினார். சௌரப் ஸ்வப்னதீப்பை 108 அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கு சமூகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் தங்கினார். அங்கு மேலும் இருவர் இருந்தனர்: இரண்டாம் ஆண்டு பொருளாதார மாணவர் மற்றும் மூன்றாம் ஆண்டு இயந்திர பொறியியல் மாணவர். ஸ்வப்னதீப் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவராக காணப்பட்டார். அவருடைய 'பாதகங்கள்' ஏராளம். அவர் பெங்காலியைத் தேர்ந்தெடுத்தார் - ஆங்கிலம் போன்ற கலைப் பாடங்களுக்கு எதிராக ஒரு 'மென்மையான' விருப்பமாகப் பார்க்கப்பட்டது, மேலும் அறிவியல் அல்லது பொறியியலை ஒப்பிடும்போது, குறிப்பாக ஆண்களுக்கு. தூர மாவட்டத்திலிருந்து வந்தவர். மேலும் அவருக்கு கொல்கத்தாவில் உடனடி நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரும் இல்லை, விடுதியில் ராகிங் நடந்ததாகக் கூறப்படும் போது அவர் யாருடைய வீடுகளுக்குத் தப்பிச் செல்ல முடியும். ஸ்வப்னதீப் உடனடியாக ராகிங்கை எதிர்கொண்டார் , செவ்வாயன்று அது மிகவும் தீவிரமாக இருந்தது, அவரால் தூங்க முடியவில்லை.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி புதன்கிழமை, ஸ்வப்னதீப் தனது வகுப்புத் தோழர்களுடன் பிரச்சினையைப் பற்றி விவாதித்தார், அது எப்போது நிறுத்தப்படும் என்பதை அறிய விரும்பினார். ராகிங் காரணமாக நேற்றிரவு தூங்க முடியவில்லை என்று ஸ்வப்னதீப் அவர்களிடம் கூறியதாக இந்த வகுப்பு தோழர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
JU ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதித்துவ ப் படுத்தும் JU இயற்பியல் பேராசிரியர் பார்த்தா பிரதீம் ராய், விடுதிக்குச் சென்றபோது, பல முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஒரே இராணுவ ஹேர்கட் விளையாடுவதைக் கண்டதாகக் கூறுகிறார் - அவர்கள் அனைவரும் ராகிங்கிற்கு ஆளாகியிருப்பதற்கான அறிகுறி யாகும். ஸ்வப்னதீப்பும் முடி வெட்டப்பட்டிருந்தார்.
மாலை 5:30 மணியளவில், ஸ்வப்னதீப், தனது தாயை மகிழ்ச்சியுடன் பேசி அழைத்தார், மேலும் அவர் இறந்த நாளில் பெங்காலி பிரிவில் தனது முதல் சில வகுப்புகளில் ஆர்வத்துடன் இருந்தார். இராணுவ வெட்டுக் கேட்கப்பட்டதாகவும் அவர் தனது தாயிடம் கூறினார். சமீபத்தில் முடி வெட்டப்பட்டதால் அவரது தாய் தயக்கம் காட்டினார். ஆனால் இது சில சீனியர்களின் உத்தரவு என்று கூறினார். இதனால் புதன்கிழமை சலூனில் முடி வெட்டினார். 40 ரூபாய் செலவழித்து முடி வெட்டினான் என்று அம்மாவிடம் கூறினார்.
அதே நாளில் இரவு 8 மணியளவில், அந்த இளைஞன் மீண்டும் ராகிங் செய்யப்பட்டு, 'துஷ்பிரயோகமான மற்றும் ஆபாசமான கருத்துகள், சைகைகள் மற்றும் செயல்களை' சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் ஒரு அறையில் அடைக்கப்பட்டார், அங்கு சௌரப் தவிர பலர் இருந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ராகிங் பற்றிய உறுதியான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஸ்வப்னதீப் மனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டார், மூத்தவர்கள் அவரை கேலி செய்தார்கள் மற்றும் ஓரினச்சேர்க்கை அவதூறுகள் என்று அழைத்தனர், இவை அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய மன அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரவு 9:30 மணியளவில், ஸ்வப்னதீப் தனது தாயை மீண்டும் பலமுறை அழைத்தார், இப்போது கண்ணீருடன். அவரது தாயார் பலமுறை அவரை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை. அவர் செய்தபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது உயிருக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், வீட்டிற்குத் திரும்பும்படி கூறினார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்று அவளிடம் திரும்பத் திரும்ப கூறினார். மேலும் அவர் உயிருக்கு பயந்துவிட்டதாகவும், வீட்டிற்கு திரும்புமாறும் கூறினார். அவளை சீக்கிரம் வரச் சொன்னான், வீட்டில் அவளிடம் சொல்ல நிறைய இருக்கிறது என்று. ஏன் என்று அவனுடைய அம்மா கேட்க, சௌரப் அவனுடைய போனை பிடுங்கி “பயப்பட ஒன்றுமில்லை. ஸ்வப்னதீப் நலமாக இருக்கிறான்” என்று சொல்ல ஆரம்பித்தான். சௌரப் தனது பெற்றோரை மேலும் தொடர்பு கொள்ள விடாமல் போனை பறிமுதல் செய்தார். அவரது தாயார் அவரை பலமுறை அழைத்தும் பதில் இல்லை. பின்னர், மற்றொரு மாணவியின் போனில் இருந்து பெற்றோருக்கு போன் செய்துள்ளார். அவரது தந்தை தனது பிரச்சினைகளை விரிவாகப் பகிர்ந்து கொள்ளும்படி அவரிடம் கேட்டபோது, அந்தப் பிரச்சினைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார் - 'போல்லே பைபாட் ஆச்சே' (நான் பகிர்ந்து கொண்டால் எனக்கு சிக்கல் ஏற்படும்). அப்பாவை மறுநாள் மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு அம்மாவை அந்த நிலையில் பார்க்க முடியாது என்பதால் அழைத்து வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அப்போது, ஸ்வப்னதீப் ஆடை கழற்றப்பட்டார். அவர் ஹாஸ்டல் மொட்டை மாடியில் நிர்வாணமாக ஓட வைக்கப்பட்டார், அது 'தண்டனையாக' இருக்கலாம். ஸ்வப்னாதீப்பின் கைகள் மற்றும் கால்களை சில மாணவர்கள் பிடித்து வைத்திருந்தனர், மற்றொருவர் அவர் மீது தடியால் அடித்து, சாட்டையால் அடித்துள்ளார். அவரது உடல் முழுவதும் சிகரெட் எரிந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ராகிங் இரவு 10 மணி வரை நீடித்தது, அதன் பிறகு, மன அதிர்ச்சி ஸ்வப்னதீப்பை அசாதாரணமாக நடந்து கொள்ள வைத்தது.
சில மாணவர்கள் இரவு 10 மணியளவில் ஸ்வப்னதீப்பின் அசாதாரண நடத்தை பற்றி டீன் ரஜத் ரேக்கு தெரிவிக்க அழைத்தனர், ஆனால் அடுத்த நாள் காலை அவர் பிரச்சினையை பேசுவார் என்று கூறப்பட்டது.
ஸ்வப்னாதீப்பின் மன நிலை காரணமாக, அவருக்கு ஒரு 'கவுன்சிலிங்' ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் சௌரப் மீண்டும் கலந்து கொண்டார் - இரவு 10 மணி முதல் 11:45 மணி வரை.
ஸ்வப்னதீப் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மாணவர்கள் டீன் ரஜத் ரேயை மீண்டும் அழைத்தனர், ஆனால் அவர்களின் அழைப்புகள் பதிலளிக்கப் படவில்லை.
இரவு 11:45 மணியளவில், ஜாதவ்பூர் பல்கலைக்கழக முதன்மை விடுதியின் இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து ஸ்வப்னதீப் கீழே விழுந்தார் - தற்கொலை அல்லது கொலை.
பல்கலைக்கழகத்தின் பிரதான விடுதியின் 'ஏ' பிளாக்கில் இருந்த மாணவர்கள் பலத்த சத்தம் கேட்டு தங்கள் அறைகளை விட்டு வெளியேறினர். வெளியே வந்து பார்த்தபோது, அவர் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தையடுத்து சில மாணவர்கள் இரவு விடுதியை விட்டு வெளியேறினர். ஸ்வப்னதீப் மரணத்திற்குப் பிறகு ஒரு பொது மாணவர் குழுக் கூட்டம் நடந்தது, ஆசிரியர்கள் என்ன விவாதித்தார்கள் - "ஆதாரங்களை மறைத்தார்களா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அவர் பல காயங்களுக்கு உள்ளானார் மற்றும் KPC மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி வியாழன் அன்று காலை, ஸ்வப்னாதீப்பின் தாய்க்கு தனது மகனின் துரதிர்ஷ்ட வசமான மரணம் குறித்துத் தெரிவிக்கும் அழைப்பு வந்தது. விடுதியில் இருந்த முன்னாள் மாணவர்களின் வலையமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்று சில தகவல்கள் கூறுகின்றன.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு இடுப்பு, விலா எலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு மற்றும் பிற காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
ஸ்வப்னாதீப்பின் தந்தை ஒரு புகாரை சமர்ப்பித் திருந்தார், அதில் அவர் தனது மகனின் மரணத்திற்கு பிரதான விடுதியின் சில தங்கியிருப்பவர்களே காரணம் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஜாதவ்பூர் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சௌரப் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் சவுத்ரி கைது செய்யப்படு வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சௌரப் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் ஸ்வப்னதீப்புக்கு விடுதியில் இடம் கிடைப்பதை உறுதி செய்தவர் தான் என்று கூறினார். சௌரப் தீவிரமாக விசாரிக்கப்பட்டார், ஆனால் முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டார் மற்றும் போலீசாரை தவறாக வழிநடத்த முயன்றார். அவர் ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவரது வழக்கறிஞர் முன்மொழிந்தார்,
மேலும் அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவரை தண்டிக்குமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டார், அதே நேரத்தில் அவரது தாயார் தனது மகன் எதுவும் செய்யவில்லை என்று உறுதியாக நம்புகிறார். சௌரப்பை அறிந்தவர்கள், அவர் நிச்சயமாக அப்படிப் பட்டவர் இல்லை என்று கூறுகின்றனர். நீதிமன்ற அறையில், அவர் குற்றமற்றவர் என்று கதறினார். ஆகஸ்ட் 22ம் தேதி வரை சௌரப்புக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சௌரப் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்வப்னாதீப்பின் தாயார் உணவை மறுத்து கதறி அழுதுள்ளார். இரண்டு முறை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பொதுமக்களின் அமைதியின்மை, போராட்டங்கள் நடந்தன.
இதனால் மனமுடைந்த முதல்வர், நீதி வழங்குவதாக உறுதியளித்தார் . ஜாதவ்பூர் பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் அவருக்கு நீதி கிடைக்க முயல்கின்றனர் மேலும் இது போன்று இனி நடக்காமல் இருக்க முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் மூன்று கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப் பட்டுள்ளன. பல்கலைக்கழகம் ஏற்கனவே முதலாம் ஆண்டை வளாகத்தில் உள்ள புதிய விடுதிக்கு மாற்றியுள்ளது, மேலும் விடுதியில் இன்னும் வசிக்கும் வெளியாட்கள் மற்றும் முன்னாள் மாணவர் களை வெளியேற்றுவதாக உறுதியளித்துள்ளது.
விடுதியில் பாதுகாப்புக்கான சோதனைகள் நடந்துள்ளன, மேலும் பயந்துபோன மாணவர்களுக்கு தனி அறைகள் உறுதியளிக்கப் பட்டுள்ளன.