LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 20, 2025

காலமும் கவிஞர்களும் _ லதா ராமகிருஷ்ணன்

 காலமும் கவிஞர்களும்

_ லதா ராமகிருஷ்ணன்

(*மீள்பதிவு)







கவிஞர் பிரம்மராஜனின் கவிதை ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இது அவருடைய மஹாவாக்கியம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தருணமிது
பிரம்மராஜன்

எனதருள் தந்தை என்னை அழைக்கும் தருணம்
அமிலப் புண்கள் ஓட்டைச் சல்லடையாய் ஆக்கியிருக்கக்கூடாது இந்த இரைப்பையை.
தலையில் ஒருவன் கொல்லன் உலை நடத்துவது
நிறுத்தப்பட்டிருந்தால் நலம்.
மாமிசச் சிலையின் சுவடுகள் பதிந்த தடம்கூட
இல்லையாக வேண்டும்.
கருணை மிச்சமிருக்கும் கோயில் வளாகங்களில்
பிச்சைபுக முடிவதாயிருக்க வேண்டும்.
ஆகாய நிறத்தில் மனமும் நிற்கவேண்டும் சற்றேனும்
இவ்வளவு அறிவினால் என்ன பயன் என்பது பொய்த்திருக்கவேண்டும்.
காலையில் கேட்கும் பண்கள்
இரவில் ஒலியாது
இருக்கவும்._

நவீன – பின் நவீனத்துவ புனைகதை எழுத்தை மாற்றியமைத்த அர்ஜெண்டீனிய எழுத்தாளர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்-இன் கவிதை கீழே தரப்பட்டுள்ளது. கவிஞர் பிரம்மராஜன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தது.

கவிஞன் தன் பெருமையை அறிவிக்கிறான்
_ ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

சொர்க்கத்தின் வீச்செல்லை என் புகழை அளக்கிறது.
கிழக்கு நாடுகளின் நூலகங்கள் போட்டியிடுகின்றன என் படைப்புகளுக்காக.
எமீர்கள் என்னை நாடிவருகின்றனர்
என் வாயைத் தங்கத்தால் நிறைக்க.
தேவதூதர்களுக்கு என் மிக சமீபத்திய பாடல்வரிகள் தெரியும்.
நான் பணி செய்யும் கருவிகள் வலியும் அவமதிப்பும்
நான் இறந்து பிறந்திருக்கக் கூடாதா.

(* யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ள 320 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் தொகுப்பும் மொழிபெயர்ப்பும் கவிஞர் பிரம்மராஜன். இதில் பிரம்மராஜனின் ஆழ்ந்த வாசிப்பின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ள, போர்ஹெஸ் ஸின் 26 சிறுகதைகள், ஏழு கட்டுரைகள், பதினைந்திற்கு மேற்பட்ட கவிதைகள், மற்றும் போர்ஹெஸ்ஸின் படைப்பும் வாழ்வும் குறித்து கவிஞர் பிரம்மராஜனால் எழுதப்பட்ட அகல் விரிவான அறிமுகக்கட்டுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.)



No comments:

Post a Comment