LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன்

                                                                                                                                                                  குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்


லதா ராமகிருஷ்ணன்
   
நன்றி:     மே, 2018
  _______________________________________________________________________________

நிறைய பள்ளிக்கூடங்களில் மிகக்குறைவான கவனிப்பையும் பராமரிப்பையும் பெறுவது கழிப்பறையாகவே இருந்துவருவது கண்கூடுஅல்லதுஆசிரிய சிரியைகள் பயன்படுத்தும் கழிப்பறை மட்டும் ஓரளவு சுத்தமாக இருக்கும்

வகுப்புநேரத்தின்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றோமலம் கழிக்கவேண்டும் என்றோ குழந்தைகள் கேட்பதற்கே மிகவும் பயந்துகொண்டிருப்பதும்,கேட்டால் ஆயாவிடம் அல்லது ஆசிரியரிடம் திட்டும்அடியும்வாங்க வேண்டியிருப்பதும் வழக்கமாக நடந்துவருவது….

இதில் மழலையர் வகுப்பில் ஒரு பெண்குழந்தை மற்ற குழந்தைகளை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பதென்றால்…. அடிக்கடி சிறுநீர் கழிக்கச்செல்வதென் றால்அப்படித்தான் அந்த ஐந்துவயதிற்குட்பட்ட பெண்குழந்தை அடிக்கடி போய்வந்துகொண்டிருந்தாள். நடக்கும்போது கால்களை சற்று அகட்டி முகம் ஏதோ சொல்லொணா வலியில் சுளிக்க, போவாள்.

அந்தக் குழந்தையின் செய்கையில் ஏதோ வித்தியாசமுணர்ந்த ஆசிரியை குழந்தையை அழைத்து பரிவோடு கேட்டதில் மழலை மாறாத குரலில் அந்தச் சிறுமி கோர்வையற்றுச் சொன்ன விஷயம் ஆசிரியையை நிலைகுலையச் செய்தது. சிறுமியினுடைய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்எங்க சித்தப்பா ஒண்ணுக்குப் போற இடத்தை எப்பவும் அழுத்திக்கிட்டே, நோண்டிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப வலிக்குது மிஸ்

அதிர்ந்துபோன ஆசிரியை காட்டச்சொல்லிக் கேட்டபோது வலியை மீறிய வெட்கத்தோடு அந்தப் பெண்குழந்தை காட்டிய இடம் சிவந்து புண்ணாகிக் கிடந்தது. எத்தனை நாட்கள், எந்தெந்த வேளைகளில் அந்த வேதனையை அந்தக் குழந்தை அனுபவிக்கும்படியாகி யிருக்கும்? வலியோடு அந்தக் குழந்தைக்கு எத்தகைய infections ஏற்பட்டிருக்கக்கூடும்…. அந்த அத்துமீறலை தினந்தினம் மரணபயத்தோடு எதிர்பார்த்து, எதிர்க்க வழியின்றி அந்தக் குழந்தையின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்

குடும்பத்திற்குள்ளாக பெண்குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் இத்தகைய பாலியல் ரீதியான அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் பெரும்பாலான நேரங்களில் வெளியே தெரியவராமலேயே போய்விடுகிறது. சம்பந்தப்பட்ட ஆணின் அத்துமீறல் தெரிந்தும் தெரியாமலுமாய் அந்த வீட்டுப்பெண்கள் வாளாவிருந்துவிடுவதும் நடப்பதுதான்.

எல்லா வீடுகளிலும் இப்படித்தான், எல்லாக் குடும்பங்களிலுமுள்ள ஆண்களும் இப்படித்தான் என்பதல்ல. ஆனால், குடும்பங்களில் பெண்கள் மீது, குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் இத்தகைய பாலியல்ரீதியான துன்புறுத்தல் களிலிருந்து சம்பந்தப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றவேண்டுமா இல்லையா?

குடும்பங்களில் பலநேரங்களில் பெரியவர்கள் தங்கள் கோபம், ஏமாற்றம், விருப்புவெறுப்புகள் எல்லாவற்றிற்கும் வீட்டுக்குழந்தைகளை அடித்தும் திட்டியும் வடிகால் தேடிக்கொள்வதையும் பார்க்கிறோம்தானே. பெண்குழந்தையைக் கட்டுப்பாடாக வளர்க்கிறோம் என்று பெண்குழந்தையின் பிறப்புறுப்பில் சூடுபோட்டபாசமுள்ளதாய், பாட்டி என்றெல்லாம் நம்மிடையே இல்லையா என்ன? (மனித நேயத்தைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதும் எழுத்தாளர் ஒருவர் குழந்தையின் கண்ணை மட்டும் விட்டு மற்ற இடங்களில் அடித்து விளாசி, தோலையுரித்துப் பாடம் கற்பிக்கவேண்டும் என்று எழுதியிருந்தார்! இது என்னவிதமான மனித நேயம், சமூக அக்கறை என்று திகைப்பாயிருந்தது).

குடும்பங்களில் குழந்தைகள் மீது, குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற நாம் செய்யவேண்டியது என்ன என்று நாம் யோசித்தாகவேண்டும்.  குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch என்று சொல்லித்தருவதோடு நம் கடமை முடிந்துவிடுகிறதா? Bad Touch என்று தெரிந்தும் அதிலிருந்து மீளமுடியாத சூழல் குழந்தையிடம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தனை பெரிய, காலத்திற்குமான பாதிப்பை ஏற்படுத்தும்….

இந்த அத்துமீறல்கள் ஆண்குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்படுகிறது. பல நேரங்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ஆணுறுப்பை வீட்டிலுள்ள பெரியவர்களோ, வீட்டிற்கு வருகை தரும் பெரியவர்களோ கையால் அழுத்திப் பிடிப்பதும், ஆட்டுவதும் சகஜமாய் காணக்கூடிய காட்சிகள். குழந்தையிடம் செல்லமாய் விளையாடுகிறோம் என்ற போர்வையில் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம், அல்லது, தங்களுக்குத் தெரிந்த குழந்தை களிடம், குறிப்பாக பெண்குழந்தைகளிடம் இத்தகைய பாலியல்ரீதியான அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் சற்றே பெரிய சிறுவர்கள், விடலைப்பருவத்தினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என பலதரப்பினர் உண்டு. சிறுவர்கள், விடலைப் பருவத்தினர் பாலுணர்வின் தாக்கத்தால், கைக்குக் கிடைத்த பெண்ணிடம் அத்துமீறுகின்றனர். சிறுவர்களைப் பொறுத்தவரை அது அத்துமீறல் என்பதே தெரியாமல் இருக்கவும் வழியுண்டு.

அதுவும் சமீபகாலமாய் கைபேசி, இணையதளம் முதலியவற்றில் பெருகி யுள்ள நீலப்படங்கள் எத்தனை ஆண்களால் புணரப்பட்டாலும் அதை ஒரு பெண் அமோகமாய் விரும்புவாள் என்றவிதமாகவே விதவிதமாய் உருவேற்றிவரு கின்றன. திரைப்படங்கள் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவதை இணையமும், கைபேசியும் பன்மடங்கு அதிகமாக மிக அப்பட்டமாகக் காட்டுகின்றன. இவற்றைப் பலவழிகளிலும் பார்க்க முடிந்த சிறுவர்கள், இளைஞர்கள் மனங்களில் இதன்மூலம் பெண்ணுக்குநேரும் அக புற வலியைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமலும், விருப்பமில்லாமலும் தங்களால் சுலபமாகத் தொடமுடிந்த பெண்குழந்தைகளிடம் தங்கள் அத்துமீறல்களை நிகழ்த்துகிறார்கள்.

எல்லாம் தெரிந்த பெரியவர்கள் சிலரும் வீட்டிலுள்ள பெண்குழந்தையை பாதுகாப்பான போகப்பொருளாகக் கையாளும் அவலமும் நடக்கிறது. ‘பெண்ணைத் தொட்டால் இன்பம், நாம் தொட்டாலே அவளுக்கு இன்பம்என்ற மனப்பான்மையோடு, யாரைத் தொட்டால் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற மனக்கணக்கோடு தங்கள் வீட்டுப் பெண்குழந்தையை, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்பவர்கள்தங்கள் வீட்டிலுள்ள மற்ற பெண்களுக்குத் தெரியாமலும், தெரிந்தேயும் கூட இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது நடக்கிறது. (சில வருடங்களுக்கு முன்னால் ஒரு படித்த பெண்மணி தன் மகளிடம் தன் கணவர் தவறாக நடந்ததுண்டு என்றும் குடும்ப கௌரவத்தை நினைத்து அதை மனதிற்குள்ளேயே பூட்டிவைத்ததாகவும் கூறியிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது).

சீசீ, இப்படியெல்லாம்கூட நடக்குமா என்ன? எங்கோ ஒரு வீட்டில் நடப்பதை இப்படி எல்லோர் வீடுகளிலும் நடப்பதாக எழுதுவது எத்தனை அநியாயம்? வீணாக குழந்தைகள் மனங்களில் பீதியைக் கிளப்புவதாய் எழுத லாமா?” என்றெல்லாம் அதிர்ந்துபோவதிலோ ஆவேசப்படுவதிலோ, அங்கலாய் ப்பதிலோ பயனில்லை. இத்தகைய அத்துமீறல்கள் ஒரு வீட்டிலும் நடக்க லாகாது; ஒரு குழந்தைக்கும் நடக்கலாகாது என்பதுதான் நம் குறிக் கோளாக இருக்கவேண்டும்.

கல்விக்கூடங்களின் பங்கு: பெண்குழந்தைகளுக்கு வீட்டில் நேரக்கூடிய பாலியல் ரீதியான அத்துமீறல்களைத் தெரிந்துகொண்டு அந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்துவதில் கல்விக்கூடங்கள் பெரும்பங்காற்ற முடியும். வீட்டில் தங்களுக்கு நேரும் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களை பயமின்றி யாரிடமேனும் எடுத்துரைக்கவும், அந்த பாதிப்பிலிருந்து விடுபடவும் உரிய வழிகளை பள்ளிக்கூடங்கள் உருவாக்கித் தரவேண்டும். தொடர்ந்த இடைவெளி களில் பள்ளிக் குழந்தைகளுக்குமழலையர் வகுப்பு முதல் – Good Touch, Bad Touch சொல்லிக் கொடுப்பதோடு, அவர்களை வீட்டிலோ, அக்கம்பக்கத்திலோஅசிங்கமாகத் தொடுபவர், துன்புறுத்துபவர் யார் என்று கேட்டு, சம்பந்தப்பட்ட நபரை அணுகி அவர்களிடம் இனி அவ்வாறு நடக்கலாகாது என்று அறிவுறுத்தலாம்.

குழந்தையின் மீது தான் நிகழ்த்திவரும் பாலியல்சீண்டல்கள், துன்புறுத்தல் கள், அத்துமீறல்கள் வெளியே தெரிந்துவிட்டதென்றாலே, அதை குடும்பத்தினர் கண்டுங் காணாமலும் இருந்தாலும் பள்ளி, சமூகத்திலுள்ள மற்றவர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள் என்று தெரியவந்தாலே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அச்சம் வந்துவிடும். தேவைப்பட்டால் அத்தகை யோர் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும்.

பள்ளிகளில் உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் ஆகியோரை வரவழைத்து பள்ளிக் குழந்தைகளிடம் இந்த குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இது தொடர்பாக அவர்களிடம் விவரங்களைக் கேட்டறியலாம். மாணாக்கர்களின் பெற்றோர் களுக்கு இது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தலாம்.

துண்டுப்பிரசுரங்கள் மூலம் இந்த அத்துமீறல்கள் தொடர்பான விழிப்பு ணர்வை சமூகத்தில் ஏற்படுத்தலாம்.

ஊடகங்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்ற முடியும்.

மிக முக்கியமாக, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, சிறுவர் சிறுமிய ருக்கு தொடர்ந்த இடைவெளிகளில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை களில் அவர்கள் மீது நிகழ்த்தப்படக்கூடிய பாலியல் அத்துமீறல்களைக் கண்டறியத்தக்க மருத்துவப் பரிசோதனைகளும் இடம்பெறவேண்டியது இன்றி யமையாதது.

குழந்தைகள் குறைகேட்பு மையங்கள், அவசர உதவிக்கான தொலைபேசி எண் ஆகியவையும் தேவையானவையே. என்றாலும், சிறு குழந்தைகள் தைரியமாக அந்த மையங்களை அணுகி குடும்பத்தினரால், அக்கபக்கத்தில் உள்ளவர்களால் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்களை எடுத்துரைத்து நிவாரணம் தேட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கவியலாது. பலவகையாக அவர்கள் அச்சுறுத்தப் பட்டிருப்பார்கள். எனவேஅவர்கள் தினமும் Home away from Home ஆக பாவித்துச் சென்றுவரும் பள்ளிக் கூடங்களில் மேற்குறிப்பிட்ட முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டியது அத்தியாவசிய மாகிறது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் முனைப்பாக கவனம் செலுத்துவதும், காலதாமதமின்றி செயல்படவேண்டியதும் மிக மிக அவசியம்.


Ø  

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல்


நான் ஏன் 
நரேந்திரமோதியை ஆதரிக்கிறேன்?
திரு.மாரிதாஸின் நூல்  
 கிழக்கு பதிப்பக வெளியீடு
(பக்கங்கள் : 256 /  விலை  ரூ.225
-    தொடர்புக்கு: 044 4200 9603 / maridasm@gmail.com




நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்
_ லதா ராமகிருஷ்ணன்

(*திண்ணை இணைய இதழில் வெளியானது)










கேப்டன், உலகநாயகன், தளபதி, கவிப்பேரரசு போன்ற அடைமொழிகளை வெகு இயல்பாகப் பயன்படுத்தும் அறிவுசாலிகளுக்குக் கூட இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு. நரேந்திர மோதி வெறும் மோதி அல்லது வக்கிர வசைகளுக்குரிய மோதியாகவே இருப்பது இன்றைய நிலவரம்.
.
ஆளுக்கொரு கட்சியைச் சார்ந்திருப்பவர்கள், அவரவருக்கென்ற மத அடையாளங்களுடன் இருப்பவர்கள் பொதுவெளியில் திரு. மோதியை எத்தனை ஆக்ரோஷமாக, கொச்சையான வார்த்தைகளால், மிக வன்முறை யார்ந்த வார்த்தைகளால் தொடர்ந்து வசைபாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வியப்பாயிருக்கும். 

அரசியல் மேடைகளிலெல்லாம் அமைதிப்புறாவோ, நியாயத்தராசோ, நிஜம் எழுதும் பேனாவோ தரப்படாமல் வீரவாளே பெரும்பாலும் பரிசாகத் தரப் படுவதைப் பார்க்கும்போது ஒருவேளை நாம் இன்னும் வாரிசுதார மன்ன ராட்சித் தாக்கத்திலிருந்து விடுபடவில்லையோ, எளிய வாழ்க்கைப் பின்பு லத்திலிருந்து வந்தவர் என்பதுகூட பிரதமர் மோதிக்கான சிலரின் எதிர்ப் புக் உளவியல்ரீதியான காரணமாக இருக்கக்கூடுமோ என்று தோன்றும்.

இனக்கலவரம், மதக்கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததேயில்லை என்பது போன்று சிலர் பேசிவருவதையும்,  பா.ஜ.க ஆட்சியில் இனக்கலவ ரமும் மதக் கலவரமும் தலைவிரித்தாடுவது போலவும், மத அடிப்படை வாதத்துக்கு ஊழலே மேல் என்று சில கட்சிகள் வெளிப்படையாகவே ஊழலை ஆதரித்துப் பேசிவருவதையும், இந்தியாவின் மற்ற மாநிலங் களில் சமத்துவம், சமநீதி குறித்த விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் குறைவு, தமிழ்நாட்டில்தான் அவை அதிகம் என்பதாகவும், அச்சு ஊடகங் களிலும் ஒலி-ஒளி ஊடகங்களிலும் நாள் தவறாமல் சிலர் கருத்துரைத் தபடியிருப்பதையும் அவர்களுக்கு ஊடக வெளிச்சம் அதிகம் கிடைப்பதையும் காணமுடிகிறது. 

மோதி ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தி னருக்குப் பாதுகாப்பில்லை என்பதாய் ஒரு பயம் திட்டமிட்டரீதியில் மக்களிடையே பரப்பப்பட்டுவருவதைப் பார்க்கமுடிகிறது. ஊரில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் பிரதமர் மோதியே காரணமாகச் சுட்டப்படுகிறார். இது எவ்வளவு தூரம் சரி என்று யாரேனும் கேட்கத் துணிந்தால் அவர்கள் பிற்போக்குவாதிகள், அடிப்படைவாதிகள், அராஜகவாதிகள் என்று பகுப்பதே அறிவுசாலித்தனமாக இருக்கிறது.

முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் கட்சிகளால் நடத்தப்படுபவை, கட்சி சார்புடையவை, என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே இவற்றில் ஒரு விவாதம் நடத்தப்படும்போது எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருள் குறித்த வல்லுனர்கள் அதிகம் இடம்பெறு வதில்லை என்பதோடு சேனல் ஆதரிக்கும், அல்லது சேனலை நடத்தும் அரசியல்கட்சி எந்தக் கருத்தை பொதுவெளியில் வைக்க, வலியுறுத்த விரும்புகிறதோ அந்தக் கருத்தை ஆதரிக்கும் பேச்சாளர்கள் மூவரும் எதிர்க்கும் பேச்சாளர் ஒருவரும் என்ற விகிதாச்சாரத்திலேயே விவாதத் தின் பங்கேற்பாளர்கள் தேர்வுசெய்யப்படுவது கண்கூடு.

கருத்துச்சுதந்திரம் எல்லோருக்கும் பொது என்ற உண்மையை ஏற்க மறுப்ப வர்களாய் இந்துமதம் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும் சில கருத்துகளை வெளியிடுபவர்களை மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்துவதும், அறிவீலிகளாய், அகங்கார மனிதர்களாய் அவர்களை அடையாளம் காட்டுவதும் மறைமுகமாய் அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மாற்றுக் கருத்துடையவர்களை முட்டாள்கள் என்பதும், மனிதநேய விரோதிகள் என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பவர்களும் கடைப்பிடிக்கும் வழிமுறையாக இருக்கிறது.

இந்தச் சூழலில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும்,  திரு. மாரிதாஸ் எழுதியுள்ள, ‘நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்’ என்ற நூல் படிக்கக் கிடைத்தது. இந்தியாவை நேசிக்கும் இளைய தலைமுறையின ருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்த நூலில் இடம்பெற்றிருப் பவை மாரிதாஸின் முகநூலில் வெளியாகியவற்றின் செழுமைப்படுத்தப் பட்ட வடிவம் – பலர் அவரிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு முகநூலில் பதில் அளித்திருந்தார்’ என்ற விவரம் நூலில் தரப்பட்டிருக்கிறது.

’ஒர் ஏழை இந்துக் குழந்தை முதல் இஸ்லாமிய வீட்டு ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை வரை அனைத்து இந்தியக் குடும்பங்களின் வாழ்வும் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்பதுதான் என் எண்ணமே ஒழிய வேறு இல்லை. என் அக்கறை என்பது மதவாதம் சார்ந்த விஷயம் அல்ல; இந்த மண்ணின் எதிர்காலம் சார்ந்த விஷயம்’ 
என்று என்னுரைப் பகுதியில் குறிப்பிடும் நூலாசிரியர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எது தவறு, எது சரி என்று கூறுவதைவிட எது உண்மை என்று கூறிவிடவேண்டும் என்பதால் இந்தப் புத்தகத்தை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாகக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

நூலாசிரியர் பற்றிய சிறு அல்லது விரிவான விவரக்குறிப்பு நூலில் தரப் படவில்லை. அவசியம் தரப்பட்டிருக்கவேண்டும். இந்த நூல் என்றில்லை. பொதுவாகவே நம் தமிழ்நூல்களைப் பொறுத்தவரை பல நூல்களில் பரவலாகத் தெரிந்த படைப்பாளி என்ற எண்ணத்தாலோ என்னவோ நூலாசிரியர் குறித்த சிறுகுறிப்பு இடம்பெறுவதில்லை. இன்று எத்தனை பரவலாகத் தெரிந்தவராயிருந் தாலும் வருங்கால சந்ததியினரும் இந்த நூல்களைப் படிப்பார்கள் என்ற உண்மையைக் கணக்கிலெடுத்துக்கொண்டு அவர்களுக்கு நூலாசிரியர் யார் என்று அறிமுகம் செய்துவைக்கவேண்டிய தேவையிருக்கிறது. எனவே, தமிழில் வரும் புனைவு, அ-புனைவு நூல்க ளுக்கும், மொழிபெயர்ப்புநூல்களுக்கும் நூலாசிரியர் குறித்த அறிமுகம் விரிவாகவே இடம்பெறவேண்டியது அவசியம். இதை நூலாசிரியர்களும், பதிப்பாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

’இந்தப் புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம், பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், கறுப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலையேற்றம், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு சீர்திருத்தம், இணையம், துறைமுகம், மீத்தேன் வாயுத்திட்டம், சாகர்மாலா திட்டம் போன்றவை தொடர்பான அவதூறுகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன’ என்று தெரிவிக்கும் பின்னட்டை Blurb ’இந்த நூல் குறித்து எழுதப்பட்டுள்ள மக்களும் இளைய தலைமுறையினரும் வாசிக்கும்போது நரேந்திரமோதியின் மீதும் பி.ஜே.பி அரசின் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் படிக்கவும். இந்தப் புத்தகம் பிஜேபி மீதான அக்கறையுடன் அல்ல; உங்களின் மீதான அக்கறையிலேயே எழுதப்பட்டுள்ளது’ என்று தன்னிலை விளக்கம் தருகிறது.

நூலில் இடம்பெறும் கேள்விகளும் அவற்றிற்குத் தரப்பட்டிருக்கும் அகல் விரிவான பதில்களும் சிந்திக்கத் தூண்டுபவை. சில பதில்கள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களுக்கும் படிக்க சுவாரசி யமான நூல். இத்தகைய நிதான மான, தர்க்கரீதியான உரையாடலுக்கான வெளி விரிவடைவது மக்களாட்சிக்கு நல்லதே.

Ø