LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம் _ லதா ராமகிருஷ்ணன்

ஊர்ப்பஞ்சாயத்து - ஊர்விலக்கம்

_ லதா ராமகிருஷ்ணன்


.................................................................................

அண்மையில் ஜூனியர் விகடனில் வந்த செய்தி இது.

தமிழகத்தில் சேலம் மாவட்ட கொளத்தூரைச் சேர்ந்த ஊர்ப்பஞ்சாயத்தில் கலப்புமணம் செய்தவர்களை ஊர்விலக்கம் செய்கிறார்கள்,
பெண்ணுக்கு கைம்பெண் என்ற பொருளைக் குறிக்கும் ‘மயிலு’ என்ற பட்டம் கட்டுகிறார்கள், ஊர்க்குத்தம் என்று பஞ்சாயத்து பகுத்தால் அதற்காக அம்மணமாய் பஞ்சா யத்தார் காலில் விழ வேண்டுமாம்.
பெற்றோர்களின் சம்மதத்துடன் நடந்திருக்கும் கலப்புத் திருமணத்திற்காக சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஊர் விலக்கம் செய்திருக்கிறார்களாம்.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ‘ஊர் வழக் கத்தை மீறி உங்களால் வாழ முடியுமா’ என்று கேட்கிறார் களாம் காவல் அதிகாரிகள்.
படிக்கப் படிக்க தலை சுற்றியது; சூடேறியது.
இந்திய அரசியல் சாஸனப்படியான ஆட்சி நடக்கும் நாட் டில், நாட்டைச் சேர்ந்த மாநிலத்தில், அதுவும் மற் றெல்லா மாநிலங்களை விடவும் பகுத்தறிவில் சிறந்து விளங்குவதாகச் சொல்லிக் கொள்ளும் மாநிலத்தில் இப்படியொரு நிகழ்வு (இது விதிவிலக்கல்ல, வழக்கமாக நடைபெறுவது என்கிறார்கள்.
சட்டத்திற்குப் புறம்பான இந்த ஊர்ப்பஞ்சாயத்து நடை முறையை எதிர்க்கவும், ஒழிக்கவும் தற்போதைய அரசு முந்தைய அரசுகள் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக் கின்றன?
உண்மையாகவே எடுத்திருந்தால் இந்த நடைமுறைகள் இன்னமும் ஏன் கிராமப்புறங்களில் வழக்கத்திலிருக் கின்றன?
திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பெரும் பாலானவற்றில் புகை பிடிக்கும் காட்சிகள், மதுவருந்தும் காட்சிகள் தவறாமல் இடம்பெறுகின்றன. கூடவே அதன் கீழே ’இக்கிணியூண்டு’ எழுத்துகளில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ போன்ற வாசகங்கள் மின்னல் வேகத்தில் ஓடிமறைகின்றன.
கோயில்களில் கொலை செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவது, தடபுடலாக சீர் செனத்தி செய்வது, இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகள், முரட்டுத்தனமான சடங்கு சம்பிரதாயங்கள் என்றவிதமாய் காட்சிகளை அமைப்பது என்று வண்ணமயமாய் காட்சிகள் இடம்பெறு கின்றன.
ஊர்ப்பஞ்சாயத்து முறையை , கட்டப்பஞ் சாயத்து முறையை விலாவாரியாகக் காட்டாத மெகாத்தொடர் களே இல்லையெனலாம்.
இத்தகைய காட்சிகளை யெல்லாம் வெகு தாராளமாக அனுமதிப்பது எப்படி? இவை பார்வையாளர்கள் மனங்க ளில் என்னவிதமான தாக்கங்களை ஏற்படுத்தும்?
திரைப்படமோ, தொலைக்காட்சித்தொடரோ கருநிறப் பெண்கள், தேன்வண்ணப் பெண்கள் வெகு அரிதாகவே இயல்பான கதாபாத்திரங்களாக இடம்பெறுகிறார்கள்.
மாவு அப்பிய வெண்முகங்களும், மேனிகளாகவுமே பெண்களைக் காட்டவேண்டிய அவசியமென்ன?
அப்படியே கருநிறப் பெண்கள் இடம்பெற்றாலும் அவர்க ளுடைய கருநிறத்திற்காக அவர்கள் கேவலப்படுத்தப் படுவதாக, கண்ணீர்விட்டழுவதாகவே பெரும்பாலும் இருப்பார்கள். பகுத்தறிவுப் பாசறைகளிலிருந்து வெளிவரும் பிரம்மாண்டப் படங்களிலும் இதுவே வாடிக்கை.
உண்மையாகவே சமூக சீர்திருத்த நோக்கமும் இலக்கும் இருப்பின் அரசுகள் ‘எண்டெர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் இத்தகைய மக்கள் விரோதப் படைப்பம் சங்களை எப்படி அனுமதிக்கலாம்?
இதுவா FREEDOM OF EXPRESSION?
கிராமங்களில் இன்னும் ஊர்ப்பஞ்சாயத்துமுறையை, அந்த அமைப்பு தரும் தண்டனைகளை அனுமதித்துக் கொண்டிருப்பது அரசுக்கு அழகா?
சமூகப் பொறுப்பு ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு. அரசுக்கு அதிகம் உண்டு. Disclaimer, BlameGame உத்திக ளைக் கையாண்டு தம்மை தமக்கான சமூகப்பொறுப்பிலி ருந்து விலக்கிக்கொள்ள முயற்சித்தல் முறையல்ல.

No comments:

Post a Comment