LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

தினம் நிகழும் கவியின் சாவு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தினம் நிகழும் கவியின் சாவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத்
தின்னும்போதும்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும்
அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ
சிறு கவிதையொன்றில்
குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு
தரச்சென்றவனை
ஒரு கையில் கடப்பாரையும்
மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி
வழிமறித்த வாசக - திறனாய்வாளர் சிலர்
கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ
கொடூர நீச மோச நாச வேச தாரி
யென் றேச, பழி தூற்ற
ஏதும் பேசாமல் காற்றுவெளியிடைக் கண்ணன் மனநிலையைக் கண்டுவர
தன்வழியே காலெட்டிப்போட்ட கவி
தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்:
’கிட்டும் வாசகப் பிரதிகள் வரம் மட்டுமல்ல...
கட்டுடைத்தலில் தட்டுப்படுவது
படைப்பாளியின் அடையாளம் மட்டுமல்ல’.

No comments:

Post a Comment