LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2

பாரதியார் கவிதையில் கிடைக்கும் வாசகப்பிரதிகள் -2


பாரதியாரின் இந்தக் கவிதையில் ஆரம்பம் முதல் இறுதிவரை யான கவிதைவரிகள் இணைந்தே கவிதை முழுமையடைகி றது என்று படுகிறது.

இருந்தாலும் கவிதையில் இடம்பெறும் ’சிவசக்தி’யின் பல்பரி மாணங்களே கவிதையைக் கவிதையாக்குகிறது என்று தோன்றுகிறது.

ஒரு கவியாய் பாரதியார் ‘சிவசக்தி’ என்ற சொல்லை ஒற்றைப் பரிமாண அர்த்தத்தில் கையாண்டிருப்பார் என்று தோன்ற வில்லை.

ஒரு வாசகராக நாம் அந்த வார்த்தையை எப்படி உள்வாங் குகிறோம் என்பதே நம் வாசகப்பிரதியாகிறது என்று தோன்று கிறது.


நல்லதோர் வீணை
மகாகவி பாரதியார்.

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

No comments:

Post a Comment