LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 19, 2023

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா?

மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிப்பதா? 

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளுக்காகப் பணியாற்றும் அமைப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) அ.ராசாவின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன

டைம்ஸ் ஆஃப் இண்டியா, செப்டெம்பர் 9, 2023.
[DISABILITY RIGHTS BODIES PROTEST AGAINST A.RAJA’S STATEMENT]
Times of India, Saturday 9, 2023
........................................................................................................................................

சனாதன தர்மத்தை எய்ட்ஸ்(HIV), தொழுநோய் (LEPROSY) ஆகியவற்றுடன் ஒப்பிட்டு திமுகவைச் சேர்ந்த முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ராஜா பேசியதற்கு மாற்றுத்திறனா ளிகள் உரிமை அமைப்புகள் (DISBAILITY RIGHTS ORGANIZATIONS) கண்டனம் தெரிவித்துள்ளன.
THE LEPROSY MISSION OF INDIA இது குறித்து சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தனது கூற்றை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும், அவருடைய கூற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாகும் பாதிப்புக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டு மென்றும் கோரப்பட்டிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் மற்ற உடற்குறபாடுடைய மாற்றுத்திறனாளி களுக்கான அமைப்புகளோடு தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப் பவர்களுக்காக இயங்கிவரும் ASSOCIATION OF PEOPLE AFFECTED BY LEPROSY (APAL)யும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பவர்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘உடற்குறைபாடுகளுடையவர் களுக்கான அதிகார-உரிமை அளித்தல் தொடர்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் DEPARTMENT OF EMPOWER MENT OF PERSONS WITH DISABILITY என்ற துறையின் தலை வருக்குக் கடிதமெழுதவும் திட்டமிட்டிருக்கிறார் கள்.

2016ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உடற்குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டி ருக்கும் 21 வகையான உடற்குறைகளில் தொழுநோயிலிருந்து மீண்ட நபர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு (NATIONAL PLAT FORM FOR DISABLED PERSONS மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்படுத்தலுக்கான தேசிய மையம் [NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE (NCPEDP)] போன்ற அமைப்பு களை நடத்திவரும் சமூகநலச் செயல் பாட்டாளர்கள் திரு. ஏ.ராஜாவின் பேச்சு குறித்து ஆட்சேபணை யும் கண்டனமும் தெரிவித்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட திமுக தலைவருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் நிகிதா ஸாரா, THE LEPROSY MISSION TESTன் COMMUNICATION AND ADVOCACY பிரிவின் தலைவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கும் மக்கள் பிரதி நிதிகள் தொழுநோய் போன்ற உடல்நலன் சார்ந்த விஷயங் களைப் பற்றிப் பேசும்போது மிகவும் கவனத் தோடும், பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது”, என்று குறிப்பிட்டுள்ளார்.
”தலைவர்களின் வார்த்தைகளும், கண்ணோட்டங்களும் பொது மக்களின் பார்வையிலும் நடத்தையிலும் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தும்” என்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அமைப்பின் (NATIONAL PLATOFROM FOR THE RIGHTS OF THE DISABLED) பொதுச் செயலர் திரு. முரளி தரன, “முன்னாள் மத்திய அரசின் அமைச்சராக இருந்த வரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருப்பவருமான ஒருவர் இப்படிப் பேசியிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. எய்ட்ஸ், தொழுநொய் போன்ற உடல்நலன் சார் ந்லைமைகளை இவ்வாறு மதிப்பழிக்கும் தொனியில் பேசி யிருப்பது மன்னிக்க முடியாதது”, என்று கூறியுள்ளார்.
NATIONAL CENTRE FOR PROMOTION OF EMPLOYMENT FOR DISABLED PEOPLE [NCPEDP)]யின் நிர்வாக இயக்குனரான திரு. அர்மான் அலி “தொழுநோயானது, மற்ற எந்த உடற்சார் நிலைமைகளைப் போலவே, சமூகப்புறக் கணிப்புக்கானதாய் பேசப்படலாகாது. தனிநபர்களை மதிப்பழிக்கும் வழியாகப் பயன்படுத்தப்படலாகாது. இம்மாதிரி மொழிப் பயன்பாட்டை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். இத்தகைய பேச்சு தொழுநொயால் பாதிக்கப்பட்ட வர்களைப் புண்படுத்துவதோடு மட்டு மல்லாமல் இந்த நோய் ஒருவருக்கு இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து குணப் படுத்தும் முயற்சிகளை மேம் படுத்துவதற்கும் முட்டுக்கட்டையாகிறது”, என்று அழுத்தமாய் எடுத்துரைத்திருக்கிறார்.

(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)

No comments:

Post a Comment