LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, September 1, 2014

என்ன தவம் செய்தேன்....! _ கவிதை

கவிதை

                                           என்ன தவம் செய்தேன்!

ரிஷி’


கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்…..
இன்னும் பல துலக்கியவாறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு -
சின்னஞ்சிறு செவ்வகத்திறப்புக்கு வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ…!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிலடங்கா சுகம், சோகம்
எல்லாவற்றிற்கும்.







0

No comments:

Post a Comment