LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 17, 2023

நிழலும் நிஜமும்…. லதா ராமகிருஷ்ணன்

நிழலும் நிஜமும்.....

லதா ராமகிருஷ்ணன்




திரைப்படத்தின் கனமான காட்சிகளை, படத்தின் நடுவில், அல்லது இறுதியில் இடம்பெறும் உச்சக்கட்டக் காட்சியை, திருப்புமுனைக் காட்சியை நடிப்பதற்கு முன் அதில் பங்குபெறும் கதாநாயக நாயகி கள் யாரிடமும் பேசமாட்டார்கள், அந்தக் காட்சியின் கனத்தை மன தில் உள்வாங்கியவர்களாய் பாத்திரமாகவே மாறியிருப் பார்கள், அதிலிருந்து மீள அவர்களுக்கு கொஞ்ச நேரமா கும்’ என்றெல் லாம் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளிலும், பேட்டிகளிலும் படித்ததுண்டு.

ஒரு நடிகர் தான் நடிக்கும் எல்லாப் பாத்திரங்களாகவும் எந்நேரமும் வாழ்ந்துகொண்டிருக்க இயலாது. எழுதும் படைப்பிலேயே அமிழ்ந்துவிட்டால் படைப்பாளியால் அந்தப் படைப்பை சிறப்பாக எழுதவியலாது என்றும் சொல்ல முடியும்.
ஆனால், ஒரு அழுத்தமான கதைக்கருவைக் கொண்ட திரைப்படத்தில் நடித்தவர்கள் படப்பிடிப்பில் நடந்த வேடிக்கைகளை மட்டுமே பேசி வெடிச்சிரிப்புகளை அவையோரிடம் உண்டாக்கும்போது அந்தப் படம் உருவாக்கப்பட்ட நோக்கமே அடிபட்டுப்போய் விடக்கூடிய அபாயமிருக்கிறது.
மாமன்னன் படம் பார்க்கவில்லை. ஆனால் அதன் கதை குறித்துப் படித்தேன். சிற்சில காட்சிகளை யூட்யூபில் பார்த்தேன். அதில் நடிக்கும் கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார் கள் என்று பரவலாகப் பேசப் படுகிறது. படமும் முக்கியமான கதைக்கருவைக் கொண்டிருக்கிறது.
ஆனால், யூட்யூபில் இந்தப் படம் குறித்து பார்க்கக் கிடைக்கும் காணொளிகளிலெல்லாம் நடிகர்கள் அதிலுள்ள கனமான காட்சிகளையெல்லாம் பற்றிச் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள். கனமான காட்சிகளை நடிக்கும்போதெல்லாம் என்னவெல்லாம் வேடிக்கை பேசினோம், குறும்பு செய்தோம் என்று சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டே யிருக்கிறார்கள்.
இப்படியே செய்துகொண்டிருந்தால் படத்தை எடுத்த நோக்கமும் வணிக ரீதியானதே (அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், அதுவே முழுமுதற்காரணமாகி விடலாகாது) என்று எண்ணும்படியாகிவிடும்.
படத்தின் இயக்குனர் தவிர படத்தின் கதாநாயகன், மாமன்னனாக நடிப்பவர் என்று எல்லாமே அழுத்தமான காட்சிகளையும் சிரிக்கச் சிரிக்க விவரித்துக் கொண்டே போகிறார்கள். பார்க்க என்னவோ போலிருக்கிறது.
இனியேனும் அவர்கள் அந்தக் காட்சிகளிலிருந்து, கதாபாத்திரங் களி லிருந்து தாங்கள் பெற்ற சமூக-அரசியல் தெளிவுகளைப் பற்றி அரங்குகளில் IN ALL SERIOUSNESS பேசவேண்டும்.

No comments:

Post a Comment