LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 17, 2023

ஓர் எழுத்தாளராக இருப்பது....

ஓர் எழுத்தாளராக இருப்பது....

_ லதா ராமகிருஷ்ணன்

பெயர்பெற்ற படைப்பாளி, அதுவும் அயல்நாட்டைச் சேர்ந்தவர், அயல்மொழியைச் சேர்ந்தவர் இறந்தால் உடனே அவரைப் பற்றி அவசர அவசரமாக அஞ்சலிக் கட்டுரைகள், கருத்துரை கள் எழுதுவார்கள் சிலர்.

அந்தப் படைப்பாளியை ஆர்வமாக, அகல்விரிவாக வாசித்து, உள்வாங்கி உண்மையான நெகிழ்வோடு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளுக்கும் (கருத்துரைகளுக்கும்), அவரைத் தெரியும் என்று பாவ்லா காட்டி, பந்தா காட்டி பேருக்கு எல்லோரும் மேற்கோள் காட்டும் ஒன்றிரண்டு படைப்புகளின் தலைப்புக ளையே தாமும் தந்து எழுதப்படும் கட்டுரைகளுக்கும் (கருத்து ரைகளுக்கும்) எளிதாகவே வித்தியாசத்தை நம்மால் உணர முடியும்.
(பாரதியாரையே இப்படி மேம்போக்காக சில கவிதை களை மட்டுமே மேற்கோள் காட்டிப் பேசுபவர்கள் நிறைய பேர்)
சிலர் மாமன் – மச்சான் உறவுமுறையில் அந்தப் படைப் பாளியைப் பற்றி ஏதாவது சொல்வார்கள். அவருடைய படைப்பாற்றலை ஒருவித உடைமையுணர்வோடு எடுத்துரைப்பார்கள். அந்தப் படைப்பாளியைக் கொச்சையாக விமர்சித்து அது அவர் மீதான அதீத அன்பால் பிறந்தது என்பார்கள். அந்தப் படைப்பாளியைப் பற்றிப் பேசுவதன் மூலம் தம்மை பிராபல்யப்படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள்; அறிவுசாலிகளாக நிறுவிக்கொள்ளப் பார்ப்பார்கள்.
அந்தப் படைப்பாளியை உண்மையாக ஆழ்ந்து படித்து உள்வாங் கிக் கொண்டவர்கள் மௌனமாக மனதுக்குள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பார்கள்.
சமீபத்தில் இறந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் மிலன் குந்தேரா இப்போது இந்தச் சுழலில் அகப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
அவருடைய சில சிறுகதைகள் மட்டுமே படித்திருக்கிறேன்.

அவருக்கான அஞ்சலிக் கட்டுரையாக இரண்டு நாட்களுக்கு முன்பு டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் வெளியான கட்டுரை அகல் விரிவாக, மனப்பூர்வமாக எழுதப்பட்டிருந்தது.
அதில் மிலன் குந்தேராவைப் பற்றிய முத்திரை வாசகமாக, அவருடைய முத்திரை வாசகமாகத் தரப்பட்டிருந்த இரண்டு கூற்றுகள் இங்கே தரப்பட்டுள்ளன.

...................................................................................................................................
//HE RARELY GAVE INTERVIEWS AND BELIEVED WRITERS SHOULD SPEAK THROUGH THEIR WORK//.

//*அவர் பேட்டியளிப்பது அரிது. படைப்பாளிகள் தங்கள் படைப்பு கள் வழியாகப் பேசவேண்டும் என்று அவர் தீர்மானமாக நம்பினார்//

....................................................................................................................................
//TO BE A WRITER DOES NOT MEAN TO PREACH A TRUTH. IT MEANS TO DISCOVER A TRUTH//

_MILAN KUNDERA

(ஓர் எழுத்தாளராக இருப்பது ஓர் உண்மையை போதிப்பது அல்ல; ஓர் உண்மையைக் கண்டறிதலே.
மிலன் குந்தேரா
.......................................................................................................................................

No comments:

Post a Comment