LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 7, 2023

சொல்லத்தோன்றும் சில….. _ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில…..

_ லதா ராமகிருஷ்ணன்



//புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகாண்பதில்லை
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை//

_ இந்த வரிகளில் இடம்பெறும் ’எல்லாம்’ என்ற வார்த்தை யில் ’புத்திசாலிகள் அத்தனை பேருமே வெற்றி பெறு வார்கள் என்று சொல்லமுடியாது வெற்றி பெற்றவர்கள் அத்தனை பேரும் புத்திசாலி கள் என்று சொல்ல முடி யாது’ என்ற பொருள் கிடைத்தாலும், ’வெற்றிபெற்றவர்கள் யாருமே புத்திசாலியில்லை, புத்திசாலி யாருமே வெற்றி பெறுவதில்லை என்பதான பொருளும் தொக்கி யிருப்பதாகத் தோன்றி இந்தக் கருத்து சரியில் லையே என்பதாகவும் எண்ணத்தோன்றும்.

இதேபோல்தான் _

/மொழிபெயர்க்கப்படும் கவிஞர்களெல்லாமே மிகச் சிறந்தவர்களில்லை;
மிகச்சிறந்த கவிஞர்களெல்லாமே மொழிபெயர்க்கப்படுவதில்லை/ என்ற வாசகமும்.

மொழிபெயர்ப்பு என்பதில் மிகச் சிறந்த கவிஞர் சிறந்த கவிஞராவதும் சாதாரண கவிஞராவதும் சம்பந்தப்பட்ட கவிஞரோடு மொழிபெயர்ப்பாளர் கையிலும் இருக்கிறது.

மூலமொழியில் இருப்பதைவிட இலக்குமொழி யில் ஒரு கவிதை மேம்பட்டு அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியல்ல. ஆனால், அப்படி அமையலாம் – தவறில்லை. ஆனால், மூலமொழி யில் இருப்பதைவிட குறைவான தரத்தில் மொழி பெயர்ப்பில் அமைந்துவிடலாகாது.

எந்தக் கவிஞரும் தன்னுடைய கவிதை மொழி பெயர்க்கப்படும், மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப் பில் கவிதை எழுதுவதில்லை.

ஆனால், ஒரு கவிஞரின் கவிதையால் ஈர்க்கப் படும் மொழிபெயர்ப்பாளர் அவருடைய கவிதை களை மொழிபெயர்க்க விரும்புகிறார்; முயற்சி மேற்கொள்கிறார்.

இந்த முயற்சிகள் ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற அடிப்படையில் ஒரு நல்ல கவிதையை, கவிஞரை பிறமொழி வாசகர்க ளுக்கு அறிமுகப்படுத்துவ தாகத்தான் அமைய வேண்டுமே தவிர ஒரு மொழிபெயர்ப்பாளரை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக அமைவது முறையல்ல.

முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள், வாழ்க்கைத் தொழிலாக மொழிபெயர்ப்பை மேற்கொள்பவர் கள் ஒரு தொகுப்பை மொழிபெயர்க்கும்போது மேற்குறிப்பிட்ட தேர்வையோ, தரநிர்ணயத் தையோ கைக்கொள்ளவியலாது என்பதும் உண்மையே. ஆனால், தரம் சார்ந்து ஒரு தொகுப்பை மொழிபெயர்க்க ஒப்புக் கொள்வதும் ஒப்புக்கொள்ளாததும் அவருடைய கையில்தான் இருக்கிறது.

புதிய கவிஞரை ஊக்குவிக்கும் விதமாக அவரு டைய சாதாரண கவிதை ஒன்றை அல்லது சிலவற்றை ஒரு மொழிபெயர்ப்பாளர் இலக்கு மொழியில் தரலாம். பரவாயில்லை. ஆனால், மூலமொழியில் தனக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கவிஞரை இலக்கு மொழியில் தரும்போது அல்லது மூல மொழியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் கவிஞரை இலக்கு மொழியில் தரும்போது சம்பந்தப்பட்ட கவிஞரின் சாதாரணக் கவிதை களை இலக்கு மொழியில் தருவதால் என்ன பயன்? இதில் மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்திருக்கும் கவிதைகளின் எண்ணிக்கை தான் கூடுமே தவிர இந்த அணுகுமுறை ஒரு கவிஞரு க்கு நியாயம் சேர்ப்பதாகாது.

எது சிறந்த கவிதை என்ற பார்வை மாறுபடும் என்பது உண்மையே. ஆனாலும், தொடர்ந்த ரீதியில் கவிதைகளை வாசித்து கவிதை ரசனையை வளர்த்துக்கொள் பவர்களுக்கு ஓரளவு இந்தத் தரநிர்ணயம் கைகூடும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment