LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, May 2, 2019

கட்டண உரை - லதா ராமகிருஷ்ணன்


கட்டண உரை

லதா ராமகிருஷ்ணன்

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தியவர்கள், வருபவர்கள் முன்கூட்டியே பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள். அதுவே எரிச்சலூட்டியது.

அந்தக் குறிப்புக்கான எதிர்ப்புணர்வின் விளைவாகவே ஆர்வத்தோடு வந்திருக்கக் கூடிய சிலபலர் வந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றியது.

இலக்கியவாதிகளுக்கு உரிய சன்மானம் தந்து மரியாதை செய்ய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதைவிட்டு இப்படிச் செய்தால் ஆர்வமுள்ள மாணாக்கர்கள், 300 ரூபாயில் இரண்டுநாட்கள் வீட்டுச்செலவை சமாளிக்க முடியும் என்ற நிலையுள்ள எளிய இலக்கிய ஆர்வலர்கள் போகமுடியாத நிலை வரும்.


பணமுடையோர் - இலக்கியம் தெரிகிறதோ இல்லையோ பந்தாவாக வந்து உட்கார்ந்து கொள்வது அதிகம் நடக்கும். காட்சிப்பொருளாகப் புத்தகங்களை வாங்கி நிரப்பும் வழக்கமுடைய நிறைய திரைப்படவாசிகள், பெருமுதலாளி கள் இருக்கைகளை ஆக்கிரமிப்பார்கள்

இத்தனை பேர் ஆர்வமுள்ளவர்கள் இலவசமாக வருகை தரலாம்என்பது போன்ற சலுகைகள் தரப்பட்டால் அது வாசகர்களை எத்தனை அவமானமாக உணரச் செய்யும்.

இந்த கட்டண முறை எழுத்தாளருக்கு வேண்டுமா னால் ஏதோ ஒருவகை ஒளிவட்டத்தைத் தருவதாக இருக்கலாம். உண்மையான வாசகர்களை இது மதிப்பழிக்கும் செயலே.

இலக்கியவெளியிலாவது இதுநாள்வரை ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு வெளிப்படையாகவாவது தெரியாமலிருந்தது. இந்தவிதமான கட்டண உரை முறையில் அந்த சமத்துவம் அழிந்துவிடும்

அவரவர்வசதிக்கு ஏற்றார்ப்போல் கட்டணம் நிர்ணயித்து ஒருசிலர் கூடி இலக்கியக்காப்பாளராக இயங்கும் போக்கு அதிகரிக்கும்

எந்த இலக்கியவாதியின் உரைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவரே ஆகச்சிறந்த படைப்பாளி என்பதான ஒரு பொய்க்கணிப்பு உருவாகும். புதிய அளவுகோல்கள் புழக்கத்திற்கு வரும்.


கட்டண உரை
கண்டனத்திற்குரியது.


இதற்கான எதிர்வினைகள்
போகப்போக கண்டிப்பாக ஏற்படும்




No comments:

Post a Comment