LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 20, 2023

தரங்கெட்ட பேச்சு சமூகப்பிரக்ஞையாகிவிடாது

 தரங்கெட்ட பேச்சு சமூகப்பிரக்ஞையாகிவிடாது



சமூகப்பிரக்ஞையாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் முனைப்பில் சில படைப்பாளி கள் மிக மிகக் கேவலமாக சக எழுத்தாளர்களை, சக மனிதர்களை அவமதிக்கும், அவதூறு செய்யும் போக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஃபேஸ் புக்கில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.


 Paedophile என்ற வார்த்தைக்கு a person who is sexually attracted to children - குழந்தைகள் மீது பாலியல் கவர்ச்சி கொள்பவர் என்று கூகுளி லேயே அர்த்தம் கிடைக்கும்.


கவர்ச்சி வேறு, பாலியல் கவர்ச்சி வேறு என்பது எல்லோ ருக்குமே தெரியும்.

இந்த வார்த்தையைப் பயன்படுத்தி ‘மெத்தப் படித்த’, சமுதாய உணர்வு மிக்கவராகத் தம்மைப் பறையறிவித்துக்கொள்கிற, (ஃபேஸ்புக்) போராளி’ப் பெண்மணி ஒருவர் எழுத்தாள ரொருவரைச் சாடியிருப்பதைப் படிக்க நேர்ந்தது.

அந்த எழுத்தாளர் தன் டைம்லைனில் போட்டி ருந்த பதிவை ’போட்டோ ஷாட்’ எடுத்துப்போட்டு அதன் கீழே தான் இப்படிக் கருத்துரைக்கப்பட்டி ருந்தது.

ஒரு கருத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டு மென்றால் அதற்கு இப்படித் தான் அவதூறு செய்யவேண்டுமா?

சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அப்படிப்பட்டவரல்ல என்று அந்தப் பெண்மணிக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நேரடியாக எழுத்தாள ரின் பெயரைச் சொல்லி அந்த ஆங்கில வார்த்தை யைப் பிரயோகிக்காமல் மறை முகமாகச் சாடி யிருக்கிறார்.

நேரடியாக அந்த வார்த்தையை ஒரு மனிதர் மீது வீசிப் போட்டிருந்தால் that would invite defamation case.

பெண் என்பதால் யாரையும் எப்படி வேண்டுமா னாலும் அவதூறு பேசலாமா?

இதேவிதமாய் பெண்ணைப் பழிக்கும் ஆங்கிலச் சொல்லை ஒருவர் சகட்டு மேனிக்கு, வீசியிருந் தால் என்னவாகியிருக்கும்?

யாரையும் இப்படி முகாந்திரமில்லாமல் மதிப் பழிக்க யாருக்கும் உரிமையில்லை.

அது முறையுமில்லை.

No comments:

Post a Comment