LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 24, 2018

கண்ணோட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கண்ணோட்டம்
 ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)



தன்னைச் சுற்றி முட்களைப் டரவிட்டபடியேயிருக்கும்
அந்த ஒற்றைச் சொல்
என்னை அந்தக் கவிதைக்குள் சரண்புகவிடாமல்
தடுக்கிறது.
குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
அறிவேன். என்றாலும்
குரூரமாகவே ஒலிக்கிறது.
A rose by any other name would smell as sweet’
போலவே
A thorn by any other name
would prick and pierce’.
அக்கக்கோ பறவையாய்க் கூவிக்கூவி
களைத்துப்போயிருக்கும் மனது
அந்தக் கவிதைக்குள் நுழைந்து
இளைப்பாறவேண்டும் என்று
எத்தனை கெஞ்சினாலும்
இயன்றபாடில்லை.
அப்படியெனில் கவிதை என்பது
அதிலுள்ள ஒற்றைச் சொல் மட்டுமா?
ஆமென்றால் ஆம் இல்லையென்றால்
இல்லையாமா?
எட்டுமா எனக்கொரு வழி
இந்தக் கவிதைக்குள் நுழைய?
பழையன கழிதலும் புதியன புகுதலுமான வாழ்வில்
ஏன் நான் மட்டும் எப்பொழுதும்
எதிர்மறைப் பொருளிலேயே வருகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கேட்டபடியே
என் கால்களை இறுகப்பற்றிப்
பின்னுக்கிழுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைச் சொல்.
இல்லாத பதில் அதன் தொலைந்த சாவியாக,
இறுக மூடிக்கொண்டுவிட்ட கவிதையின் முன்
நான் நிராதரவாய் நின்றவாறு


No comments:

Post a Comment