LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, October 18, 2016

கண்காட்சி - ரிஷி

கண்காட்சி
 ரிஷி

கரை கறையாகியதேன், திரை சிறையாகியதேன்
தரை நரையாகியதே இரை முறையாகியதே
என்று என்று என்று
(திடீர்க்) காதலாகிக் கசிந்துருகிக் 
கண்ணீர் வடிக்கும் பாவனையில்
கடித்துக்குதறக் கூர்பற்களைத் தீட்டும் 
அந்த வேறு முதலை
யறியுமோ அச்சுப்பிழையும்
மிச்சசொச்சமும்?
முதலைக் கந்துவட்டிக்கு விட்டே
பெருந்தனக்காரர்களாகிவிட்டவர்கள்
நெடுஞ்சாலையில் நடைபயின்றுகொண்டிருக்கிறார்கள்
இறுமாப்போடு நெஞ்சுயர்த்தி இழுத்துச்சென்றபடி _
சங்கிலியால் பிணைத்தரப்பர்முதலையை


No comments:

Post a Comment