LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, January 14, 2016

உளவியல் சிக்கல் - ரிஷி

உளவியல் சிக்கல்
ரிஷி

ஒரு மண்புழு
தன்னை கட்டுவிரியன் பாம்பு என்று எண்ணிக்கொண்டுவிட்டது.
வந்தது வினை.
புலியை அடித்துக்கொல்லச் சென்றது;
முடியவில்லை.
சிங்கத்தை விழுங்கித் திங்கப் பார்த்தது
முடியவில்லை.
யானையை
கரடியை
மாடை ஆடை முயலை கிளியை _
எதுவுமே முடியாமல் போனதில்
எந்த வியப்புமில்லை.

ஆம், மண்புழுவும் அன்புக்குரியதுதான் –
உண்மையானதெனில்!



(* ஜனவரி 2016 பதிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது)

No comments:

Post a Comment