LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 29, 2014

அபத்த நாடகம்

ரிஷி


3 + 3 = 6,
4 + 2 = 6,
1+ 5 = 6,
3 x 2 = 6,
6 x 1 = 6,
2 x 3 = 6,
8 _ 2 = 6,
7 _ 1 = 6,
5 + 1 = 6,
4 + 2 =  ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே
ஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு
நடைபழகிக்கொண்டிருக்கிறாள் இடும்பியவள்;
சொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.

தன்னைத்தானே கணிதமேதையாய்
முன்னிறுத்திக்கொள்ளு மப் பேதை
யின் மொழி பெரும் வாதையாய்.

”நச்சுவிதைகள் நமக்கு முன்னிருந்தோரெல்லாம்
எட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை
காலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை
எப்படியும் உங்கள் கால்கள் தானே
யானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என
அன்றாடம் ஆகாயத்தில் பறந்தபடி
போதித்துக்கொண்டிருக்கிறாள்..

’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’
என கழுத்துவரை கர்வம் தளும்ப
கிளுகிளுத்துப் பிதற்றி

வெத்துவார்த்தைகளைத் தத்துவம் என்ற பெயரில்
கைபோன போக்கில் விசிறியெறிந்தபடி
கிள்ளிப்போட்ட கீரையால் வீராங்கனையானவள் தானே
வாராது போல வந்த மாமணி யானே னென் றறை
கூவுகிறாள், பறைசாற்றுகிறாள்.

அதற்கும் ஆமாம் போடத் தயாராய்
ப்ரோக்ராம்ட்பேர்வழிகள்.

நாலு வார்த்தைகள் ஒலிபெருக்கிகளுக்குள் வீறிட்டலறியதால்
தன்னை யரும் போராளியென அடையாளங்காட்ட
அவள் படும் பாடு அப்பப்போ…..அய்யய்யோ

குய்யோ முறையோ வெனக் கூவிக்கூவியே
மெய்யைப் பொய்யாக்கி பொய்யை மெய்யாக்கி
கன ஜோராய்க் கடைவிரித்தாயிற்று….
கறாராய் கலப்படம் செய்தால்
பின்,  கொள்ளை லாபம் தான்!






[*திண்ணை இணைய இதழ் ஜூலை2014இல் வெளியானது]





0

No comments:

Post a Comment