லதா ராமகிருஷ்ணன்

//ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார் கள் என்று பீரோவுக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.//



மொழியாற்றல், ஒரு மொழியை சரிவர எழுதவும் படிக்கவும் தெரியவேண்டியது அவசியமே. இதற்கு மாற்றுக்கருத்தில்லை.
அதே சமயம் மொழி என்பது காலந்தோறும் பல வகையான மாற்றங்களை ஏற்றுவருவது.
ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்த விழிப்புணர்வோடு, புரிதலோடு மொழியைக் கையாளவேண் டிய தேவையிருக்கிறது.
பழந்தமிழ்க் கவிதைகளின் மொழிவழக்கிலிருந்து சம காலக் கவிதையின் மொழிவழக்கு பெருமளவு மாறுபட் டிருக்கிறது.
வட்டார வழக்குகளையும் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கு வாசகர்கள் யார் என்பதும் ஒரு மொழியைக் கையாள்வதில் முக்கிய கவனம் பெறும், பெறவேண்டிய ஒன்று.
சில வருடங்களுக்கு முன்பு AID INDIA, PRATHAM ஆகிய சில தன்னார்வல அமைப்புகள் சேர்ந்து நாடு முழுக்க நடத்திய சுற்றாய்வொன்று நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு தாய்மொழிப் பாடப் புத்தகங்களையே படிக்கத் தெரியாத நிலையை எடுத்துக்காட்டி யது.
ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார்கள் என்று அலமாரிக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.
தனியார் பள்ளி மாணவர்களின் மொழித்திறனும் இப்படியே.
சிறு பருவத்திலேயே மொழிமீது ஆர்வமும் மொழியாற்றலைப் பெற வழிவகைகளையும் உருவாக்கித் தரவேண் டியது இன்றிய மையாதது.
No comments:
Post a Comment