LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, November 18, 2019

கவிதை என்ற பெயரில்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கவிதை என்ற பெயரில்….


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




எத்தனை ‘லைக்’குகள் வாங்கினாலென்ன?

எத்தனை விருதுகள் வாங்கினாலென்ன?

விதவிதமான புகைப்படங்களில்

புதுப்புது ஆடையணிமணிகளுடன்

அழகுப்போட்டிகளில் பங்கெடுப்பதே போன்று,

அல்லது ‘ரௌத்ரம்’ பழகுவதாய்

எத்தனைவிதமாய்

‘போஸ்’ கொடுத்தால்தான் என்ன?

இத்தனை வன்மமும்

வெறுப்பும்

விபரீத அகங்காரமும்

வெட்கங்கெட்ட மனச்சாய்வும்

வேண்டும்போதான ‘மறதி’யும்

வசதியாய் சிலவற்றைப் பற்றி

எண்ணமறுக்கும்

வக்கிரமும்
வழிந்தோடும் மனம் வாய்த்தவர்

வரிவரியாய் பல்லாயிரம் எழுதினாலும்

எப்படி கவியாக முடியும்?



'லைக்'குகள் அதிகமாக அதிகமாக

தலைக்கேறிய கர்வத்திற்கு

விலைபோய்க்கொண்டிருக்கும் கவியை

விசனத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது

நவீன தமிழ்க்கவிதை.


பெரியபெரிய வார்த்தைகளை

கைபோன போக்கில்

அடுக்கிக் கோர்த்து

பூச்சாண்டி காட்டலே

கவிதை

யென்ற அவர் புரிதலுக்கு

முதல் பலி அவராக;

அடுத்தது

அவர் வடித்ததாக.




No comments:

Post a Comment