LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 2, 2015

கவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி

கவிதை
1.  வெந்து தணியும் காடு….
ரிஷி



துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

ன்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

ருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

ரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

தானியம் கேட்டதில்லை, மானியம் கேட்டதில்லை
ஆனமட்டும் அன்பையே இறகுசிலிர்த்துத் தூவிக்கொண்டிருந்தது
வானமுதாய்!

மேவுங்காலத்தே தன் குட்டிமூக்கா லவர் நிழலை நீவித்தருவதையே
தன் நல்வினைப்பயனாய் எண்ணியிருந்தது….

ன்குரலால் என்னவெல்லாம் பாட்டிசைத்தது இப்பூங்குருவி!
கேட்டிருப்பார்தானே மாமன்னரும்……..

தோ
பொசுங்கிக்கொண்டிருக்கின்றன இதன் இறக்கைகள்.
பொந்தில் யார் வைத்தாலும்
நெருப்பு நெருப்பு தான்……

ணவலியினூடாய் விர்ரென்று உயரப் பறக்கும் எத்தனத்தில்
சிட்டுக்குருவியின் விசுவரூபம் வெளிப்படும்!

றக்கத் தெரியும் இதற்கு; பறக்க முடியும் எப்போதும்.
அதுபோதும்.
குருவியின் விரிசிறகுத் தடங்கள் பரவும் ’வெளி’யெங்கும் இனி _

மேலும்.

ழிந்துவரும் இனம் எனவும் அவர்கள் பழிக்கக்கூடும்….

ரிணாம வளர்ச்சியில் அது ஃபீனிக்ஸ் பறவையுமாகிவிட்டதை
யின்னும் அறிந்திலர் போலும்……



2. கனலும் சாம்பல்

தொழில்முறைக் கொலைஞர்கள் எல்லாம் உங்கள் செயல்நேர்த்தியின் முன்
வெறும் கத்துக்குட்டிகள் என்றாகுமாறு எப்படி
இத்தனை துல்லியமாய் ஒற்றைச் சொடுக்கில்
உயிர்நாடியை எளிதாய்
இற்று நைந்த கயிறாய்ப் பிய்த்தெறிந்துவிட முடிகிறது உங்களால்…..?

சித்திரம் மட்டுமா கைப்பழக்கம்…..

ன்னமும் துடித்துக்கொண்டிருக்கும் குற்றுயிரை
அடுத்தவீட்டுச் சிறுமியின் கையில் கொடுத்து
அரைரூபாய்க்கு விற்று ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிடச்சொல்லி
அனுப்பிவைக்கிறீர்கள் அத்தனை இயல்பாய்.

ருமானமல்ல, வீறிட்டுக் கேட்கும் வலியோலம் அளிக்கின்ற
பரவசமே சிலருக்குப் பிரதானமாய்.

மோதிப்பதாய் விரியும் சின்ன முறுவலோடு
அப்பால் செல்கிறீர்கள்.

ண்டிப்பாக பத்தோடு பதினொன்றல்ல
உங்கள் வித்தகம்.
தன்னிகரில்லா நிபுணத்துவம்.

ன்னவொன்று,
அதற்கான முன் தயாரிப்புகள்
அரதப்பழசாகிவருகிறது.

ங்கள் பட்டறை முகப்பில் மாட்டிவைக்கப்
பரிசளிக்கிறேன் இந்தப் பெயர்ப்பலகையை:

”மறுபிறவியாகுமாம் மரணம்.








Ø       

No comments:

Post a Comment