LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 3, 2015

வழுக்குப்பாறை(1925) யாஸுனாரி காவாபாட்டா (பரிசு நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்) ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

வழுக்குப்பாறை(1925)
யாஸுனாரி காவாபாட்டா

(பரிசு நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்)
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : லதா ராமகிருஷ்ணன்



 2000த்தில் 
 யாசு னாரி காவாபாட்டா 
 என்ற, நோபல் பரிசு 
 பெற்ற ஜப்பானிய 
 எழுத்தாளரின் 
 சின்னஞ்சிறு 
 கதைகள் 50 என் தமிழாக்கத்தில் சிநேகா பதிப்பக வெளியீ டாகப்
  பிரசுரமாகியது.
 அதில்  இடம்பெறும்
வழுக்குப் பாறை’ என்ற கதை ஏறக்குறைய பிள்ளைப்பேறு  குறித்த 
 நம்பிக்கை சார்ந்தது தான். கதை  எழுதப்பட்டு ள்ள  விதத்தில் வரியிடை வரிகள் நிறையவே வாசிக்கக் கிடைப்பதான உணர்வு வரவாகிறது.

யாஸுநாரி காவாபாட்டா

                                                    
தன்னுடைய மனைவி யோடும், குழந்தையோடும் அவன் மலை வெப்ப நீரூற் றுக்கு வந்துசேர்ந்திருந் தான். 

அது ஒரு பிரபல வெப்ப நீரூற்று. மனிதர்களிடம் பாலுணர்வையும் பிள்ளைப் பேற்றுத் திறனையும் பெருக்குவதாகக் கூறப் பட்டது. 

அதன் ஊற்று அசாதாரண வெப்பம் வாய்க்கப் பெற்றிருந்தது. எனவே, அது பெண்க ளுக்கு நிச்சயம் நல்லது செய்யும் என்பதில் சந்தேக மில்லை. அதோடு கூட, அருகாமையிலிருந்த குறிப்பிட்ட தேவதாரு மரமொன்றும், பாறையொன்றும் அங்கு வந்து குளிப்பவர்களுக்குக் குழந்தைப் பேற்றைத் தரும் என்ற மூட நம்பிக்கையும் அங்கு நிலவி வந்தது.

ஜப்பானிய அரிசி பானத்தில் காணப்படும் கசடில் பதப்படுத் தப்பட்டு ஊறுகாயாக்கப்பட்ட வெள்ள ரித் துண்டத்தைப் போலி ருந்த முகத்தையுடைய சவரத் தொழிலாளி ஒருவன் அவனுக்கு சவரம் செய்துகொண்டி ருந்த போது அவன் அந்த தேவதாரு மரத்தைப் பற்றி விசாரித்தான். (இந்தக் கதையைப் பதிவு செய்யும் போது பெண் குலத் தின் நற்பெயரைக் காப்பதில் கவனமாக இருக்க வேண்டும் நான்).

“நான் சிறுவனாக இருந்தபோது, பெண்களைப் பார்க்க வேண்டும்போல் எப்போதும் தோன்றிக் கொண்டேயிருக் கும். அவர்கள் அந்த தேவதாரு மரத்தைச் சுற்றித் தங்க ளைப் பிணைத்துக் கொள்வதைப் பார்ப்பதற்காய் விடிய லுக்கு முன்பே எழுந்துவிடுவோம். எப்படியோ, குழந்தை வேண்டும் பெண்கள் பைத்தியம் பிடித்தவர்களாய் நடந் துகொள்கிறார்கள்.”


“அவர்கள் அப்படிச் செய்வதை இப்பொழுதும் நீங்கள் பார்ப்பதுண்டா?”


”ஆனால், அந்த மரம் பத்து வருடங்களுக்கு முன்பே வெட்டப்பட்டுவிட்டது. அதிலிருந்து கிடைத்த மரத்துண் ட ங்கள், துகள்களைக் கொண்டு அவர்கள் இரண்டு வீடு கள் கட்டினார்கள்.”


“ம்ம்ம், ஆனால், அதை யார் வெட்டினார்கள்? அதை வெட்டியவன் கட்டாயம் ஒரு தைரியசாலியாகத்தான் இருக்கவேண்டும்.”


“அப்படியில்லை. வெட்ட வேண்டும் என்பது மாவட்ட அலுவலகத்திலிருந்து வந்த ஆணை. எப்படியோ, அந்தப் பழைய நன்னாட்கள் போயே போய்விட்டன.”


இரவு உணவுக்கு முன்பாக, அவனுடைய மனைவி தங் களை அந்த மகோன்னத நீரூற்றில் முழுவதுமாக நனை த்தாள். அந்த நீரூற்று அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், பெண்களை பாக்கியசாலிகளாக்கும் ஊற்றா கக் கருதப்பட்டது அதுவே என்பதால் அந்த நிறுவனத் தின் விலைமதிப்பற்ற ஆபரணமாக அது விளங்கியது. 

அங்கு குளிக்க வருபவர்கள் முதலில் விடுதியிலுள்ளிருக் கும் நீரூற்றில் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிறகு மகோன்னத நீரூற்றுக்கான கற்படிகளில் கீழிறங் கிச் செல்வது நியதி. மூன்று பக்கங்களில் அந்த நீரூற்று மரப்பலகைகளால் ஒரு குளியல் தொட்டியின் வடிவில் வேலியிடப்பட்டிருந்தது. 

நீரூற்றின் அடிப்பகுதி இயற்கையான பாறை. வேலியிடப் படாத பக்கத்தில் ஒரு குளியல் தொட்டியின் வடிவொழுங் கைக் குலைப்பதாய் ஒரு பிரம்மாண்டமான வழுக்குப் பாறை யானையைப் போல் நின்றுகொண்டிருந்தது. அதனுடைய மினுமினுப்பான கருத்த மேற்பரப்பு, வெப்ப நீரூற்றினால் ஈரமாக இருந்தது. வழுவழுப்பாகவும், வழுக்குத்தன்மை வாய்ந்ததாகவும் விளங்கியது. 

இந்தப் பாறையின் உச்சியிலிருந்து நீரூற்றுக்குள் வழுக் கிக்கொண்டே வந்திறங்கினால் குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம் வழக்கிலிருந்ததால் அது வழுக்குப் பாறை என்று அழைக்கப்பட்டது.


இந்த வழுக்குப்பாறையை அண்ணாந்து நோக்கிய ஒவ் வொரு முறையும், “இந்த அமானுஷ்யம் மானுடத்தியே கேலிப்பொருளாக்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்குக் குழந்தைகள் இருந்தேயாகவேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள், இந்த வழுக்குப் பாறையில் வழுக்கிக் கொண் டுபோனால் தங்களுக்குக் குழந்தைகள் பிறக்கும் என்று நினைக்கும் மனிதர்கள் எல்லோரும் இந்த மிகப் பெரிய, சகதி அப்பிய முகத்தால் எள்ளிநகையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டான் அவன்.


அந்தப் பாறையின் கரிய, சுவரொத்த முகத்தைப் பார்த்து ஒரு கசந்த புன்னகையை வெளியேற்றினான்.


’ஹோ, பாறையே, நீ என்னுடைய ‘பழமை விரும்பி’ மனை வியின் தலையைக் கையிலெடுத்து அவளை நீரூற்றுக் குள் அமிழ்த்தினாய் என்றால் ஒருவேளை நான் சிறிது வியப்படைவேனாயிருக்கும்.’


திருமணமான தம்பதியரும், குழந்தைகளும் மட்டுமே யிருந்த அந்த வெப்ப நீரூற்றில் அவனுடைய மனைவி சற்றே வினோதமாக அவனுக்குக் காட்சியளித்தாள். பல நேரங்களில் தான் அவளை அறவே மறந்துபோயிருந் ததை நினைவு கூர்ந்தான் அவன்.


காதுகளை மூடும் நவீன பாணி சிகையலங்காரத்திலி ருந்த ஒரு  பெண், நிர்வாணமாகப் படிகளில் இறங்கி வந் தாள். ஸ்பானிய மோஸ்தரில் இருந்த ‘ஹேர்-பின்’களைக் கூந்தலிலிருந்து அகற்றி அவற்றை அங்கிருந்த அடுக் கொன்றில் வைத் தாள்.


’ஹப்பா, எத்தனை அழகான யுவதி!’ இதைச் சொல்லிய வாறு அவன் தன்னை நீரூற்றுக்குள் அமிழ்த்திக்கொண் டான். மறுபடி அவள் வெளியே வந்தபோது புதிதாகக் கழு வித் தூய்மைப்படுத்தப்பட்ட அவளுடைய கூந்தல், இதழ் களனைத்தும் அகற்றப்பட்டு ஒரே ஒரு சூலகம் மட்டுமே எஞ்சியிருந்த அழகிய தோட்டப்பூ போல் காட்சியளித் தது.


தன் மனைவியல்லாத வேறொரு பெண் அவளது கணவ னோடு குளியல் தொட்டியில் இருந்தது அவனை மிகவும் சங்கோஜமாக உணரவைத் தது. அதுவும், அந்தப் பெண் ஒரு யுவதியாக இருந்தது வேறு அவனது தர்மசங்க டத்தை அதிகரித்தது. 

அந்த இளம் பெண்ணைத் தன் மனைவியோடு ஒப்பிட் டுப் பார்க்கும் நிர்பந்ததிற்காளான வன் மனதில் சுய வெறுப்பு பெருக்கெடுத்தோட, வெறுமையுணர்வின் வெள்ளச்சுழலில் முற்று மாக மூழ்கினான்.


“நானே அந்த தேவதாரு மரத்தை வெட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருப்பேன். இது என்னுடைய மனைவி. இது என்னுடைய குழந்தை – இந்த வார்த்தைகள் எல்லா வகையான மூட நம்பிக்கை களையும் ரத்தினச் சுருக்க மாகச் சொல்லிவிடுகின்றனவே? சொல்கிறதா, இல்லையா பாறையே?”


அவனுக்குப் பக்கத்தில், நீரின் வெப்பத்தால் சிவந்து போயிருந்த மேனியோடு மேனியோடு அவனுடைய மனைவி, ஓய்வாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.


அந்த நீரூற்றின் மேல் ஒரு மஞ்சள் நிற ஒளி வெள்ளம் அலை பாய்ந்தது. ஆவி, வெண்பனி மூட்டமாய் மேலுயர்ந் தது.


“ஹேய், உன்னைத்தானே பையா? விளக்கு போட்டாகி விட்டது. இன்னும் எத்தனை பேர் அங்கேயிருக்கிறார் கள்?”


“இரண்டு பேர்.”          
                          

“இருவரா? ஒருவர் உச்சியில். மற்றொருவர் அடியில். ஹேய் பையா, அந்த விளக்கு மிகவும் வெளிச்சமாக இருக்கிறது. நான் மேலிருந்து அடிநோக்கிப் பாய்ந்து முழுகப் போகிறேன். இந்த விளக்கு உண்மையாகவே மிகவும் பிரகாசமாக இருக்கிறது.”


காது-மூடிய கூந்தலலங்காரத்தில் இருந்த அந்தப் பெண் தன் மகளை அரைக்கண்ணால் பார்த்தாள்.


கடவுளே, இந்தப் பெண் தான் எவ்வளவு புத்திசாலி.’ அன்று மாலை அவன் தனக்கு முன்பாகவே தன் மனை வியையும் மகளையும் தூங்கச் சொல்லி அனுப்பிவைத்து விட்டு, பத்துப் பனிரெண்டு கடிதங்களை எழுதி முடித் தான்.


விடுதியினுள்ளிருந்த நீரூற்றின் உடைமாற்றும் அறை யில் அவன் ஆச்சரியத்தால் சிலையாகி நிலத்தில் வேரோ டியதாய் அசையாமல் நின் றான். வெள்ளைத் தவளை போல் தோற்றமளித்த ஒன்று அந்தப் வழுக்குப்பாறையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தது. முகம் கீழ்ப் புறமாயி ருக்க அவள் தன் கைகளை அகற்றிக் கொண்டாள். தன் பாதங்களால் உதைத்தபடி அந்த வழுக்குப்பாறையில் சறுக்கிக்கொண்டே இறங்கினாள். 

அந்த நீரூற்று மஞ்சளாக இளித்தது. அவள் திரும்பவும் பாறையுச்சிக் காய் மேல் நோக்கி ஊர்ந்து சென்று பாறையை இறுகப் பிடித்துக்கொண்டாள். அந்தப் பெண் தான் அவள்.


இடுப்புத்துண்டைக் கைகளால் இறுகப்பற்றிய நிலையில் அவன் படிகளில் விரைந்தோடி மேலேறினான். பின்னி ரவின், அமைதியான இலையு திர்காலப் படிகள்.


’அந்தப் பெண்மணி இன்றிரவு என் குழந்தையைக் கொல்ல வரப் போகிறாள்.’


அவனுடைய மனைவி, கூந்தல் தலையணைக்கு மேல் அலை பாய்ந்தபடியிருக்க, குழந்தையைச் சுற்றிக் கையி ட்ட நிலையில், உறங்கிக்கொண்டிருந்தாள்.


‘ஓ பாறையே, உன்னுடைய அபத்தமான மூட நம்பிக்கை யில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு பெண்ணால் கூட என்னை இந்த அளவுக்கு அச்சுறுத்த முடிகிறது. ஒரு வேளை என்னுடையதேயான மூட நம்பிக்கை _ அதா வது, இது என்னுடைய மனைவி, இது என்னுடைய குழந்தை என்பதாக _ எனக்கே தெரியாமல், நூற்றுக் கணக்கானவர்களை, ஒருவேளை ஆயிரக்கணக்கான வர்களைக் கூட அச்சத்தால் நடுங்கச்செய்துகொண் டிருக்கக் கூடும். அப்படித் தான் இல்லையா பாறையே?’


தன் மனைவியின் மீது ஒரு புதிய, ஆவல் ததும்பும் நேய த்தை அவன் மனம் உணர்ந்தது. அவள் கையைப் பற்றித் தன் பக்கமாய் இழுத்தவாறே அவளை எழுப்பினான் அவன்.


“யேய் _ விழித்துக்கொள்!”



0



No comments:

Post a Comment